search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Couples"

    • தாம்பத்தியம் சிறப்பாக அமைய இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
    • தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய இந்த விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தனக்கான சந்ததியை உருவாக்குவதற்காகவே திருமணத்திற்கு பின் தாம்பத்தியத்தில் ஈடுபடும் வழக்கம் இருந்து வருகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு.

    தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ஸ்டாபெர்ரி பழம்

    தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஐஸ் க்ரீம்

    ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.

    திராட்சை பழம்

    தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.

    டார்க் சாக்லேட்

    தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.

    வாழைப்பழம்

    தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.

    மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.

    • கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
    • தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர்.

    சூலூர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த்(41). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.வசந்த் தனது குடும்பத்தினருடன் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன், காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கலங்கல் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை கார் ஒன்று வேகமாக பின்தொடர்ந்து வந்தது. கலங்கல் குட்டை அருகே வந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் வசந்த் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பின்னர் 2 பேரும் எழுந்திருக்க முயன்றனர்.

    அப்போது காரில் இருந்து 3 பேர் கும்பல் திபு,திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கி, வசந்தை அரிவாளால் வெட்டினர். வலி தாங்க முடியாத அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று வெட்டினர்.இதை பார்த்த வசந்த்தின் மனைவி காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தத சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வசந்த்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர். மேலும் சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அந்த கும்பல் செல்லும் கார் திருப்பூர் அமராவதி செக்போஸ்ட் வழியாக சென்ற தகவல் தெரியவரவே போலீசார் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் குறிப்பிட்ட காரை மறித்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் அவர்களை கோவை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கருப்புசாமி உத்தமபாளையம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு தேனியில் ெசாந்தமாக 21 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அவரது உறவினர் முருகன் என்பவர் குத்தகைக்கு கேட்டார்.

    அவரும், முருகனுக்கு குத்தகைக்கு விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்புசாமி அந்த நிலத்தை பார்க்க சென்ற போது வசந்த் என்பவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து இருந்தார்.

    இதுகுறித்து கருப்புசாமி வசந்த்திடம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் விசாரித்து வசந்த்தை அந்த இடத்தை காலி செய்ய வைத்து கருப்புசாமியிடம் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநா யக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.

    தன்னை வெட்டியவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே கருப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

    எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
    எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் எத்தனை சதவீதம் தெரியுமா? 91 சதவீதம்!

    ஆண்கள் மீதான பற்று பெண்களுக்கு குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் கடைசி காலம் வரை தங்களை பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற ஆசை பெண்களிடம் இல்லை. ஏன்என்றால் தங்கள் எதிர்கால கணவரிடம் அவைகளை எல்லாம் எதிர்பார்க்கும் பெண்கள் 15 சதவீதம்தான்.

    தங்கள் மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தரவேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம்பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் அளவு 94 சதவீதம்.

    கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 35 சதவீதம் மட்டுமே!

    குறைந்தது 6 மாதமாவதுபழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தரவேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். பார்த்ததும் திருமணம், பின்பு அவசர அவசரமாக தேனிலவு போன்றவைகளில் பெண்களுக்கு விருப்பம் இல்லை.

    பழைய காலத்து மாடல் பெண் பார்க்கும் சடங்கில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், ‘இவர்தான் உன் வருங்கால கணவர்’ என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பெரும்பாலான இளம் பெண்கள் சொல்கிறார்கள்.

    தனக்கான வரனை பெற்றோரே முடிவு செய்துவிடக்கூடாது என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அவர்கள் வரனின் வேலை, சம்பளம், குடும்பம், சொத்து இவைகளைத்தான் பார்க்கிறார்கள். அவைகள் திருப்திபட்டால், அந்த மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்லி விடுகிறார்கள். அவர் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சரிப்பட்டு வருவார் என்பது தங்களுக்குத்தான் தெரியும் என்று இளம் பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம். நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று, 78 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள்.

    18 சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.



    திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அவர்கள் விளக்கமாக பதில்சொல்ல முன்வரவில்லை.

    கணவருக்கு வேறு பெண்களோடு இருந்த தொடர்பு பற்றி கேள்வி எழுப்பமாட்டோம் என்று 22 சதவீத பெண்கள் சொல்வது அதிர்ச்சிகலந்த உண்மை.

    பெரும்பாலான பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் திரு மணம் செய்துகொண்டால் போதும் என்று கருத்து தெரிவி்க்கிறார்கள்.

    திருமணத்தில் ஆர்வம் இல்லாத பெண்கள்கூட, ‘திரு மணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம்’ என்கிறார்கள். காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    ‘அதுக்கு எதுக்கு ஆடம்பரம்’ என்று என்று சொல்லும் 40 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

    திருமணம் முடிந்த மறுநாளே தூக்கிவீசப்படும் அழைப்பிதழுக்காக நிறைய பணத்தை செலவிடவேண்டியதில்லை. அது ரொம்ப சிம்பிளாக இருந்தால் போதும் என்று 81 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    ‘நீ கன்னித்தன்மை கொண்டவள்தானா?’ என்று வருங்கால கணவர் கேட்டால், பதிலுக்கு அவரிடம் அதே கேள்வியை திரும்பகேட்போம் என்று 14 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். ‘அப்படிப்பட்ட பழமைவாதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று 65 சதவீத பெண்கள் சொல்கிறார்கள்.

    தங்கள் கணவர் சினிமா கதாநாயகன்போல் அழகாக இருக்கவேண்டியதில்லை என்று 64 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

    மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். அளவோடு மது அருந்துபவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று 3 சதவீத பெண்களே சொல்கிறார்கள். இது அருந்துபவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள் என்ற பயம், 93 சதவீத பெண்களிடம் இருக்கிறது.

    (தனியார் நிறுவனம் ஒன்று எடுத்திருக்கும் கருத்துக்கணிப்பு இது)

    காலம் மட்டுமல்ல, காலத்திற்கு ஏற்ப பெண்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களிடம் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றங்களை சமூகம்தான் சரியாக புரிந்துகொள்வதில்லை. திருமணம் இன்னும் பழைய பாணியிலே இருந்துகொண்டிருந்தாலும், திருமணத்தின் கதாநாயகிகளான பெண்களின் மனோநிலை புதிதாக இருக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு, அவர்களது வித்தியாசமான ஆசைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
    காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம். #ValentinesDay
    இன்று (பிப்ரவரி 14-ந் தேதி) உலக காதலர் தினம்.

    காதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை காதலைப் பற்றி எழுதப்படாத இலக்கியங்கள் இல்லை. திருக்குறளின் இன்பத்துப்பாலை விட யாரால் காதலை உயர்வாகச் சொல்லிவிட முடியும்?

    தலைவன் தலைவியைப் பார்த்து, யான் நோக்கும் போது நிலம் நோக்குகிறாய், நான் நோக்காத போது நீ எனை நோக்குகிறாய் என்று சொன்னார் வள்ளுவர். அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றாகக் கலப்பதை செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல என்று குறுந்தொகை இலக்கியம் முன்வைத்தது. மகாகவி பாரதி, “உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று சொல்லி, “காதல் காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்” என்று பாடினார்.

    சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியாரின் அற்புத வரிகள் தமிழ்க் காதலின் சான்றுகள், தமிழின் அடையாளமாகத் திகழும் தொல்காப்பியம், தமிழரின் வாழ்வை களவு வாழ்க்கை என்றும், கற்பு வாழ்க்கை என்றும் அழகாகப் பிரித்துக்காட்டுகிறது. ஆனால் இன்று காதல் அதே உன்னதத்தோடு இருக்கிறதா? அன்பர்கள் தினம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பிப்ரவரி 14-ந் தேதியை வேலன்டைன் தினம் எனும் காதலர் தினமாக உலகநாடுகள் கொண்டாடத் தொடங்கின. உலகநாடுகள் முழுக்க வாழ்த்து அட்டைகளால் தங்கள் அன்பைத் தெரியப்படுத்தியதைப் பல இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. வெளிநாடுகளைப் பார்த்து எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நாம், எது உண்மைக் காதல் என்று வரையறுக்காமல் காதலர் தினத்தையும் அப்படியே இறக்குமதி செய்துகொண்டோம்.

    கண்டதும் காதல், வாட்ஸ்-அப் காதல், முகநூல் காதல், டுவிட்டர் காதல், பொழுதுபோக்குக் காதல் என்று பல்வேறு காதல்களாய் உருப்பெற்று ஒரு பிப்ரவரியில் மலர்ந்து, அடுத்த பிப்ரவரியில் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்று விவாகரத்து மனுவைத் தந்துகொண்டிருக்கும் நிலையைக் கண்டுகொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழும் காதல், வேறுவேறு வடிவங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்து நம் குடும்பங்களைக் கண் எதிரே குலைத்துக் கொண்டிருப்பதை அன்றாடச் செய்தித்தாள்களின் செய்திகளிலிருந்து கண்கூடாய்க் கண்டுகொண்டிருக்கிறோம்.

    இருவரின் மனம் தொடர்பான காதல் இன்று சமூகத்தின் போக்கால் மடைமாற்றம் செய்யப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்படும் கொண்டாட்டச் செய்தியாய் மாறியுள்ளது. தங்க ஊசி கையில் இருக்கிறது என்பதற்காக நம் கண்களைக் குத்திக்கொள்ள முடியுமா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பதின் பருவத்து பிள்ளைகள் காதலர் தினம் என்ற பெயரில் படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் எதிர்கால வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    வீக்கத்தை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள இயலுமா? எது காதல்? எது காதல் இல்லை என்பது பெரும்பாலும் வாழ்வைத் தொலைத்த பின் தான் இருபாலருக்கும் தெரிகிறது. காதல் தோல்விகள் இளையோரின் உயிரைக் குடிக்கும் செயலாக மாறும்போது சமூகம் சங்கடப்படுகிறது. ஒன்றுபட்ட அன்புடைய இரு உள்ளங்கள் கலப்பதை சங்கத்தமிழர்கள் அகம் என்று சொன்னார்கள், அதாவது இருவரின் உள்ளம் சார்ந்த செயல் என்று சொன்னார்கள். ஆனால் காதல் என்ற பெயரில், சம்பந்தமே இல்லாத பெண்களின் வாழ்வில் விளையாடும் கொடூரங்களைக் கண்டபின்னும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இனியும் நம் தமிழ் மண்ணில் நிகழவேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது.



    உலகம் வாழ்த்து அட்டைகளால் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன்னால், தமிழ் மண்ணில் காதலே பூக்கவில்லையா? எல்லாவற்றையும் இலைமறை காயாய் கற்றுத்தந்த மண் தமிழ்மண். எல்லாருக்கும் தெரிய வெளிப்படையாகச் சொல்வதா காதல்? பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன், “பட்டணத்துக் காதலப்பா பாதியிலே மறையுமப்பா! பட்டிக்காட்டுக் காதலுக்குக் கெட்டியான உருவமப்பா” என்று பாடியதை மனம் நினைத்துப் பார்க்கிறது.

    எல்லோர் முன்னிலையிலும் விரும்பவில்லை என்று சொன்னதற்காக முகத்தில் அமிலம் வீசிக் கொல்லப்பட்ட இளம்பெண்களின் வரலாறுகள், தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாள் என்பதற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்களின் இறப்புகள் நம்மை வெகுவாகச் சங்கடப்படுத்துகின்றன. ஏதோவொரு திரைப்படத்தில் வந்துவிட்டது என்பதற்காகத் திரைப்படத்தின் மாய பிம்பங்களைப் போல் தன்னையும் மாற்றிக்கொண்டு தொடர்பே இல்லாத அப்பாவிப் பிள்ளைகளின் வாழ்வை அவர்களின் எதிர்காலத்தை நசுக்கிப் போடுவோரை காதலர் தினம் என்ற பெயரில் ஏன் நாம் கொண்டாடவேண்டும்?

    எதிர்பாலினத்தைக் காதலுக்குரிய பிம்பமாக மட்டும் அறிவார்ந்த சமூகம் பார்க்கவேண்டுமா? ஆண்,பெண் அன்பின் உன்னத அடையாளமாய் திகழ்ந்த காதல் இன்று தடம்மாறி சமூகத்தின் குடும்ப உறவுகளைக் குலைக்கும் அளவு செல்லும் நாளில் அதை நேர்வழிப்படுத்துவது கடமையாகும்.

    மிக நளினமாக இலைமறை காயாய் வெளிப்படுத்தப்பட்ட காதல் இன்று அப்பட்டமாய் பொதுவெளியில் வெளிப்படையாக வெளிப்படுத்தப்படுகிறது. உள்ளத்தின் அன்பு காதல், மாசுமருவற்ற பாசம் காதல், எதிர்பாலினத்தை மதிப்பது காதல், செய்யும் தொழிலை நேசிப்பது காதல், அழகு பார்த்து மட்டும் வருவதல்ல காதல், மனதின் உண்மை முகம் பார்த்து வருவதுதான் உண்மைக் காதல்.

    கண்டதே காதல் கொண்டதே கோலம் என்பதல்ல காதல், ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின் வருவதே உண்மைக்காதல். மோதலில் தொடங்கி காதலில் நிறைவுற வாழ்க்கை ஒன்றும் மூன்று மணிநேரத் திரைப்படம் இல்லை. காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உயர்ந்த இல்லறத்தின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம்.

    முனைவர் சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
    குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.
    கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.

    இதற்கு காரணம் பிள்ளை பிறந்த போது அவர்களது பிறப்புறுப்பு விரிவடைந்ததன் காரணமாக மிகுந்த வலி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, அவர்களது பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலும், அவர்களது அங்கு ஏற்பட்ட காயங்கள் குணமடையும் வரையிலும் உடலுறவு வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    இது போன்ற ஏறத்தாழ நான்கைந்து மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருந்து, குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் என்ன உணர்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அதைப்பற்றி இனிக் காண்போம்.

    ஆய்வு சமீபத்தில் குழந்தை பிறந்த பிறகு தம்பதி மத்தியில் உடலுறவு வாழ்க்கை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 1,118 தம்பதிகள் பங்கேற்றனர். இவர்கள் மத்தியில் குழந்தை பிறந்ததற்கு முன்பு, பின்னர் உடலுறவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    94% பேர் தாங்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடுகிறோம் என்றும், 60% பேர் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் சிறிதளவு மேலோங்கி இருப்பதாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

    பெண்களின் அச்சம் முதன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதி மத்தியில் ஏறத்தாழ மூன்றில் இருந்து ஐந்து மாதமாவது இந்த உடலுறவு வாழ்க்கை தடைப்பட்டு போயிருக்கும். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு, தங்கள் துணைக்கு தன் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறது.

    உடல்வாகு குழந்தை பிறந்த பிறகு மாறும் தன் உடல்வாகினை தனது கணவனுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆயினும் 14% பெண்கள் குழந்தை பிறந்த பிறகு தைரியத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

    வரம் குழந்தை பிறப்பது என்பது வரம் போன்றது. வரம் கிடைத்த பிறகு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே தவிர அச்சம் கொள்ள கூடாது.

    கணவன், மனைவி குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போதும் சராசரியாக ஆண்கள் வாரத்திற்கு இருமுறையும், பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையும் தான் ஈடுபட விரும்புகிறார்கள்.

    வலி ஏற்படலாம் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆரம்பத்தில் வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும்.
    ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும்.

    தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.

    சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

    * உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.

    * உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.



    * உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.

    * நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.

    * உடலுறவு குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

    * உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.

    * ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

    மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். ஆனால், அது உண்மை இல்லை. தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும்.

    ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும்போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது. இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள்.



    மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும். அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும்.

    கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும்போது துர்நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை. மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். ஆமாம்… மது செயல்திறனை மட்டுமல்ல… செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்!
    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
    ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

    மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.

    நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.

    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.

    இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது. 
    அதிகம் படித்த ஆண்கள்கூட பெண்களை புரிந்துகொள்வதில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். பெண்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத ஆண்களால் மணவாழ்க்கையில் வெற்றியடைய முடிவதில்லை.
    அதிகம் படித்த ஆண்கள்கூட பெண்களை புரிந்துகொள்வதில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். பெண்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத ஆண்களால் மணவாழ்க்கையில் வெற்றியடைய முடிவதில்லை. வெளியே அவர்கள் அன்னியோன்யமான தம்பதிகள்போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கும். பெண்களை புரிந்துகொள்ளத் தெரிந்த ஆண்களால், மனைவியிடம் இயல்பான உறவினை மேற்கொள்ள முடியும். அவர்களால் மணவாழ்க்கையையும் மகிழ்ச்சிக்குரியதாக அமைத்துக்கொள்ள முடியும்.

    பெரும்பாலான ஆண்கள் செல்போனுக்கு, மனைவியைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செல்போன் கையில் இருந்தால் உலகையே மறந்துவிடுகிறார்கள். கண் நிறைந்த மனைவியை அருகில் வைத்துக்கொண்டு, செல்போனில் கண்டதையும் பார்த்துக்கொண்டிருப்பதை எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சில ஆண்கள் காது வலித்து, வாய் சோர்ந்து போகும் அளவுக்கு செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேசுபவர்கள் யாராக இருந்தாலும், பேசும் நேரம் என்பது முக்கியம். வீட்டில் உட்கார்ந்துகொண்டு மனைவி வெறுத்துப்போகும் அளவுக்கு ஆண்கள் வெளிநபர்களிடம் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.

    மனைவி பெரும்பாலும் கணவர் எப்போது வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அவரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார். அப்படிப்பட்ட சூழலில் கணவர் போனில் பேசிக்கொண்டோ, எதையாவது பார்த்துக்கொண்டோ இருந்தால் கணவர் தன்னை மதிக்கவில்லை என்ற முடிவுக்கு மனைவி வந்துவிடுவார்.

    கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை. இப்போது காதலிக்க விரும்பும் பெண்கள்கூட வலைத்தளத்தில் அதிக பொழுதை செலவிடும் இளைஞர்கள் பக்கம் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு பெண்களின் இதயத்தைவிட இணைய தளத்தையே அதிகம் பிடிக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

    அதனால் பெண்களை கவர விரும்பும் ஆண்கள், இணையதள மோகத்தில் இருந்து விடுபடுவது அவசியமாகிறது. அதுபோல் இப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், தங்களை பெண் பார்க்க வரும் இளைஞர்களிடம் தனியாக சந்தித்து பேசும்போது இணையதள மோகம் பற்றி வெளிப்படையாகவே கேட்டுவிடுகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளே கதி என்று கிடக்கும் ஆண்களை விபரம் தெரிந்த பெண்கள் கணவராக ஏற்றுக்கொள்வதில்லை.



    தான் சொல்லுவதைதான் மனைவி கேட்க வேண்டும் என்ற பிடிவாதம் ஆண்களுக்கு உண்டு. முக்கியமான விஷயங்களை பற்றி முடிவெடுக்கும்போதுகூட பலர் மனைவியிடம் கருத்து கேட்பதில்லை. தானாக முடிவினை எடுத்துவிட்டு, பின்பு மனைவியிடம் தகவல் மட்டும் கூறினால் போதும் என்று அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். மனைவிகள் இப்போது முடி வெடுக்கும் அளவுக்கு தெளிவாக இருப்பதால், தங்களிடம் தகவல்கள் மட்டும் சொல்லும் கணவர்களை அவர்களுக்கு பிடிப்பதில்லை. தொடர்ந்து மனைவியிடம் தகவல் மட்டுமே சொல்லும் கணவராக நீங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் மனைவியிடம் அபிமானத்தை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    கர்வம் என்பது ஆண்களில் சிலரது பிறவிக் குணம். ஒவ்வொரு செயலிலும் அவர்களது இந்த கர்வம் முன் வந்து நிற்கும். அதை கம்பீரம் என்று தவறாக கருதிவிடுகிறார்கள். தெளிந்த சிந்தனையும், அறிவார்ந்த செயலும்தான் ஆண்களுக்கு கம்பீரமே தவிர, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அகந்தை கொள்வது கம்பீரம் அல்ல. கர்வம் கொண்டவர்கள் அற்ப விஷயத்திற்கெல்லாம் நீயா நானா என்று போட்டி போடுவார்கள். அதன் மூலம் நிம்மதியை இழந்துகொண்டிருப்பார்கள். அதனால் ஆண்களின் அகந்தை பெண்களுக்கு பிடிக்காது.

    தங்கள் உறவுகளைப் பற்றி பெருமையாகவும், மனைவியின் உறவுகளைப் பற்றி ஏளனமாகவும் பேசும் கணவன்மார்கள் இன்றும் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சாதிக்கப்போவது எதுவுமில்லை. நாளடைவில் மனைவியின் அன்பைதான் இழக்க நேரிடும். அவர் அன்பை இழப்பது மட்டுமல்ல, அவர் யாரை எல்லாம் புகழ்ந்து பேசுகிறாரோ அவர்களையும் தனது மனைவி எதிரியாக கருதுவார் என்பதை ஆண்கள் மறந்து விடக்கூடாது. அதனால் ஏளன பேச்சு குடும்பத்தை கூறுபோட்டுவிடும் என்பதை உணருங்கள்.

    மனைவியோடு பிரச்சினை என்று வந்துவிட்டால் அந்தப் பிரச்சினையை மட்டும் பேசி தீர்க்க வேண்டும். அதுதான் புத்திசாலி ஆண்களுக்கு அழகு. ஆனால் பெரும்பாலான ஆண்கள் பழைய சம்பவங்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு மனைவியை திருப்பி அடிப்பார்கள். அதுமட்டுமல்ல மனைவியின் அண்ணன், தம்பி, அம்மா, அப்பா, குடும்பம், பூர்வ ஜென்ம உறவுகளைக் கூட வம்பிற்கு இழுப்பார்கள். இப்படிப்பட்ட வம்பு மனிதர்களை பெண்கள் நம்பி வாழ்வதில்லை.

    பெண்களுக்கு வேகமாகவும், சரியாகவும் முடிவெடுக்க தெரியும். ஆனால் சில நேரங்களில் அவர்கள் முடிவெடுக்க தெரியாதவர்கள் போல் திணறுவார்கள். அதற்கு காரணம் சமூகம்தான். பெண்களுக்கு முடிவெடுக்கத் தெரியாது என்று காலங்காலமாக கூறிவந்ததால், அவர்கள் சில நேரங்களில் முடிவெடுக்கும்போது பதற்றம் அடைகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களிடம், ‘உன்னாலும் முடியும். தைரியமாக முடிவெடு’ என்று சொல்லும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். ‘நான் சொல்வதை மட்டும் கேள். முடிவெடுக்கும் விஷயங்களில் எல்லாம் நீ தலையிடாதே!’ என்று சொல்லும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.



    கொடுத்த வாக்குறுதியை மறக்கும் ஆண்கள் பெண்களின் அபிமானத்தை இழந்துவிடுவார்கள். வாக்குறுதி என்பது சமாதானம் செய்வதற்காக தரப்படுவதல்ல. காப்பாற்றப்பட வேண்டிய சத்தியம். பெரும்பாலான ஆண்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மறந்து விடுகிறார்கள். சிலர், ‘அப்படி நான் எந்த வாக்குறுதியும் கொடுத்ததில்லை’ என்று மறுப்பார்கள். வாக்குறுதிகளை மறப்பவர்கள் மீதும், மறுப்பவர்கள் மீதும் பெண்கள் நம்பிக்கைவைக்கமாட்டார்கள்.

    மனைவிக்கு பாதுகாப்பு தருவதாக சொல்லிக்கொண்டு அளவுக்கு அதிகமாக அடக்கு முறையை கையாளும் கணவனை மனைவிக்குப் பிடிக்காது. பாதுகாப்பு நடவடிக்கை என்பது சுதந்திரத்தை பறிப்பதாக மாறிவிடக்கூடாது.

    வார விடுமுறை என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளிலும் பெண்கள் வீட்டுவேலை செய்ய வேண்டும். தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆண்கள் கருதுகிறார்கள். தொலைக்காட்சியில் விளையாட்டு பார்க்க வேண்டும் என்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். லேட்டாக எழுந்து சில சமயம் குளிப்பது கூட கிடையாது. படுக்கையிலேயே பெட்காபி, டிபன் எல்லாம் நடக்கும். இதெல்லாம் மனைவிக்கு பிடிக்காது. அதுபோல் வார விடுமுறை நாளில் காலையிலே எழுந்து குளித்து தயாராகி, மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு, நண்பர்களைத் தேடிப் போய்விடும் ஆண்களையும் அவர்களுக்கு பிடிக்காது.

    வீட்டில் எவ்வளவு இடமிருந்தாலும் ஈரமான டவலை வரவேற்பறையில் உள்ள சோபாவில் தான் சில ஆண்கள் போடுவார்கள். அதுபற்றி கேள்வி கேட்க முடியாது. கேட்டால், ‘நான் அவசரமாக வெளியே போகிறேன். நீ வீட்டில்தானே இருக்கிறாய். இதைகூட நீ செய்யக் கூடாதா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மனைவியிடம் எரிச்சலையே சம்பாதிப்பார்கள்.

    இதையெல்லாம் விட பெரிய தொல்லை வீட்டிற்கு அடிக்கடி நண்பர்களை அழைத்து வருவது. அந்த நண்பர்கள் முன்னிலையில் மனைவியிடம் இதை செய் அதை செய் என்று உத்தரவும் போடுவார்கள். இப்படிப்பட்ட கணவர்களை மனைவிகள் சுமையாகத்தான் கருதுவார்கள் என்பதை தாமதமாகத்தான் ஆண்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த உண்மை. 
    வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.
    புகார்க் கூடங்களாக ஏன் குடும்பங்கள் மாறிவருகின்றன? என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று எல்லோரும் ஏன் பேசத் தொடங்கிவிட்டோம்? வாழ்வு பாடாய்ப் படுத்துவதாக ஏன் நினைக்கத் தொடங்கியுள்ளோம்?

    சிலருக்கு இருக்கப் பிடிக்காமல் ஏன் வெறுக்கப் பிடிக்கிறது? உப்பு விற்கப்போனால் மழைபெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு உள்ளத்திலும் நூற்றுக்கணக்கான புகார்ப் பட்டியல்கள். என்ன ஆயிற்று நம் இந்தியக் குடும்பங்களுக்கு?

    ‘வீடு சிறையாக மாறிவிட்டது. வறட்டு கவுரவமும் தேவையில்லாப் பிடிவாதமும் எங்களை வெறுப்பில் ஆழ்த்துகின்றன’ என்கிற இளைய சமுதாயத்தின் குரல் ஒருபுறம். பொறுப்பு வெறுப்பாய் மாறி மகனை, மகளை, மனைவியைக், கணவனைத், தந்தையைக் கொலை செய்யும் அளவுகூடக் கொண்டுபோய் விடுகிறது.

    எதையும் விட்டுக் கொடுப்பதற்கு யாரும் தயாரில்லை. ஐவகை நிலமும் அறிந்தவன் பால்கனிச் செடியைப் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானதோ அதைப்போல் நல்ல குடும்ப அமைப்பு நம் கண் முன்சிதைந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

    வீட்டுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்குப் பிரச்சினைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், வீட்டுக்குள் நுழையவே பிடிக்கவில்லை என்று இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்குள் நுழையும் குடும்பத் தலைவர்களைக் குடும்பங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவா?

    இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் தனிமையின் துயர் அறுக்க இணையதளங்களிலும் சமூகஊடகங்களிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பறவைகளை இந்தக் குடும்பங்கள் எப்படி ஆற்றுப்படுத்தப் போகின்றன? உருகத் துடிக்கிற பனியைப் பருகத் துடிக் கிற இளைய உதடுகள் இது குறித்து என்ன சொல்லப் போகின்றன?

    பொறுப்பாயிருக்கிற வரை வெறுப்பாயிருக்காது எதன்மீதும்! அந்தப் பொறுப்பை யார் யாருக்கு உணர்த்துவது? நாம் அசருகிற போதெல்லாம், ‘விடுறா இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். பிரச்சினையைத் தூக்கிப் போட்டுட்டு ஆத்தாளுக்கு பதினோறு ரூபாய் முடிஞ்சி வச்சிட்டு அடுத்தவேலை பாருடா’ என்று சொன்ன அந்த சுமைதாங்கி மனிதர்களை அன்னை இல்லங்களில் கொண்டு விட்டுவந்த இடரை இப்போது அனுபவிக்கிறோம்.

    கால்நூற்றாண்டு உறவுகளை எல்லாம் திருமணம் என்கிற பந்தத்தின் பொருட்டு விட்டுவிலகி வந்து தன்னையே நம்பி வாழும் மனைவிக்கு மனது என்ற ஒன்று இருக்கிறது, அவள் நலன் நாடல் என் கடமை என்று கணவன் ஏன் நினைப்பதில்லை?

    உலகம் செலுத்தும் பேரன்பில் ஓரன்பாவது நமக்குக் கிடைக்கத் தானே செய்யும்! நாம் மட்டும் ஏன் அந்த அன்பை மற்றவர்களுக்குத் தர மறுக்கிறோம்.

    நாடகங்களில் காட்டுமளவு வெகு கொடூரமாக இன்னும் மாறவில்லை குடும்பவாழ்வு. கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொள்கிறவர்கள் வெற்றி வந்தால் அளவுக்கதிகமாய் ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டுபோகாமலும் வெகுஇயல்பாய் இருக்கிறார்கள்.

    என்னதான் நம் வாழ்வின் வினாடிகள் வெளியில் ஆட்டமும் ஓட்டமுமாய் கழிந்தாலும் ஆன்மா ஆனந்தமயமாவதும் அமைதியடைவதும் இல்லத்தில்தான். இல்லத்தில் உள்ளது நம் உள்ளத்தின் நிம்மதி. அந்த இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான்.

    அலுவலகத்தில் மேலாளர் என்ன சொன்னாலும் பொறுமையுடன் யோசித்து அமைதியாய் பேசும் நாம் வீட்டில் எரிந்துவிழுகிறோம். ஒன்றுமில்லாத சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுகிறோம். வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.

    சொற்களால் பிரிந்த குடும்பங்கள் ஆயிரம்! கனத்த சொற்களால் தான் நம் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதில்லை. மென்மையாக ஆனால் அழுத்தமாக நாம் சொல்லவேண்டியதைச் சொல்லலாம்.

    மீட்டித்தான் ஆகவேண்டும் இந்த வாழ்வெனும் வீணையை, வாழ்ந்து காட்டித்தான் ஆகவேண்டும் நம்மை வெறுப்போருக்கு மத்தியிலும். தொட்டிக்குள் வாழ்ந்தாலும் சலிப்பில்லாமல் நீந்துகிற மீன்களைப் போல் நம் இயக்கம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். மூலவருக்கு முன் மனமுருகி பிரார்த்திக்கும்போது யாரேனும் மணியசைத்து அது நடக்கும் என்று குறியீடாக உணர்த்திவிடுகிற மாதிரி சுற்றிநடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றன.

    குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே வாழ்வின் நுட்பங்களைக் கற்றுத்தந்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று எப்படி இயங்குகிறது எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது? எப்படி முடிவெடுப்பது? வெளிஉலகத்தில் எப்படி நாம் நம்மை நிலைப்படுத்திக்கொள்வது? என்று உணர்த்தியிருந்தால் அவர்கள் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும்.

    அப்பா அன்பு அப்போது புரியாது, அம்மா தியாகம் தான் அம்மாவாக மாறும்போதுதான் தெரியும். பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கும் அவள் சொல்லும் ஆயிரமாயிரம் கதைகளுக்கும் எதை நாம் ஒப்பீடாகச் சொல்லமுடியும்? தன் தங்கைக்குத் தலைச்சன் பிள்ளை பிறந்திருக்கிறது என்று ஆசையோடு சேனை வைக்க ஓடிவரும் அன்பு வடிவமான தாய்மாமனுக்கு ஈடாக வேறுயாரைச் சொல்ல முடியும்? உறவுகளை மதிக்கக் கற்றுத் தாருங்கள்.

    உறவுகளின் உன்னதத்தைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். பெரியவர்களின் சொற்படி நடப்பது பாதுகாப்பானது என்று சொல்லி வளருங்கள்.

    வெறுப்பில் இல்லை வாழ்வின் வெற்றி, நிறைவின் இருப்பில்தான் உள்ளது என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்வெனப்படுவது வலியோடும் வலிமையோடும் வாழ்ந்து காட்டுவது என்று புரிய வையுங்கள். குடும்பம் முழுமையான வாழ்தலுக்கான அன்பின் பயிற்சிக்கூடம். அதில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம், ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

    அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் மகாகவி பாரதி. அன்பைத் தவிர குடும்பத்தில் வேறில்லை.

    முனைவர் சவுந்தர மகாதேவன், கல்லூரி பேராசிரியர், நெல்லை
    பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்றாகும்.
    பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்று. ஆண்கள் நன்கு சுத்தமாக, ஹேண்ட்சம்மாக இருந்தால், பெண்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஏனெனில் பெண்கள் எதிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரின் சுகாதாரம் மற்றவர்களின் முன் நல்ல மரியாதையையும் வழங்கும். சரி, இப்போது பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    உடல் முழுவதும் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருக்காது. அளவுக்கு அதிகமான பெர்ப்யூம் அருகில் வருவோருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீங்கள் பெர்ப்யூம் அடித்தால் போதும். அதிலும் காதுகளுக்கு பின், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் மட்டும் ஆண்கள் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் போதும். அதுவே அவர்கள் மீது அளவாக நல்ல நறுமணத்தை வீசும்.

    சில பெண்கள் ஆண்களின் முடியால் மயங்குவார்கள். அதற்காக ஆண்களின் முடியை அடிக்கடி வருடிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உங்கள் காதலி அல்லது மனைவி உங்கள் முடியை அதிகம் தொட்டுப் பேசும் போது, தலையில் பொடுகு இருந்தால் எப்படி இருக்கும். ஆகவே தினமும் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து உங்கள் முடியை சுத்தமாக வைத்திருங்கள்.



    ஆண்களின் உதடுகளைப் பார்த்தால் முத்தம் கொடுக்க தோன்ற வேண்டும். அதைவிட்டு உலர்ந்து காணப்பட்டால், யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே உதடுகளை எப்போதும் வறட்சியின்றி நீர்ப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேஸ்லினை உதடுகளுக்கு தடவி வாருங்கள்.

    பற்கள் காலையில் காபி குடிப்பதில் இருந்து சிகரெட் மற்றும் இதர குளிர் பானங்களைக் குடிப்பதால், முத்துப் போன்ற பற்கள் மஞ்சள் நிறத்தில் அழுகிப் போன பற்கள் போன்றாகிவிட்டன. மஞ்சள் நிறத்தில் பற்கள் இருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட ஏன் பேச கூடமாட்டாள். ஆகவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி துலக்குங்கள். அல்லது வேறு ஏதேனும் இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குங்கள்.

    வயதாக ஆக உடலின் பல பகுதிகளில் தேவையற்ற முடிகள் அதிகம் வளர ஆரம்பிக்கும். ஆனால், சில ஆண்களுக்கு இளமையிலேயே மூக்குகளில் வளரும் முடியானது வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும். அப்படி மூக்குகளில் முடி நீட்டிக் கொண்டிருந்தால், அது மோசமான தோற்றத்தை வெளிக்காட்டும். ஆகவே அவ்வப்போது மூக்கில் வளரும் முடியை வெட்டிவிடுங்கள்.
    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    திடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச் செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது.

    உடல்நலக் குறைவு வாட்டும்போது, அதற்கு ஆகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிக்கும். இந்நிலையில், மருத்துவக் காப்பீடு இருந்தால் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இதில் இரண்டு வகைகள் உண்டு.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பாலிசிதாரர் ஒருவர் மட்டுமே மொத்த காப்பீட்டுத் தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, ‘பேமிலி புளோட்டர் பாலிசி’ எனப்படும் ஒரே ஒரு குடும்பக் காப்பீடு எடுக்கலாம்.

    இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற்போல் மொத்த காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் நல்லது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால், தனிநபர் காப்பீடே சிறந்தது.

    மொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வு செய்யும்போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்.



    மருத்துவக் காப்பீட்டில் ‘கோ-பே’ மற்றும் காத்திருப்புக் காலத்தையும் கவனிக்க வேண்டும். ‘கோ-பே’ என்பது பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது. இம்முறை, காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா, கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், ‘கோ-பே’ திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.

    1 முதல் 6 ஆண்டுகள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    ஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும், உள்ளடக்கம் மற்றும் நீங்கல்களைக் கவனித்தல் அவசியம். இவை காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரங்களில் உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட நேரிடும்.

    காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒரு வலையமைப்பில் கூட்டுச் சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரகாலங்களில் எளிதாக மருத்துவ வசதி பெறலாம்.

    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    ×