search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Couples in bed"

    நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
    தாம்பத்தியம் ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

    மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்ச்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.  

    நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.

    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.

    இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது. 
    செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
    மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

    செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள்.

    ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

    டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

    முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.

    ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.
    உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!

    சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம் தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.

    செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.

    அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள்.




    இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.

    இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.

    சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.

    தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது
    சிலருக்கு ஏன் உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும். அதற்கான விடையை இந்த பகுதியில் காணலாம்.
    தாம்பத்தியத்தில் அதிக நேரம் நீடித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னர் ஏன் சிலருக்கு உடலுறவில் ஈடுபட்டாலும் விந்தணு வெளியேற மிக நீண்ட நேரம் ஆகிறது, ஏன் சிலருக்கு உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும். இது போன்ற கேள்விகளை பிறரிடம் கேட்டு விடை பெறவும் கடினமாக இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

    நீங்கள் உங்களது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கூட, மனைவி அழகாக இல்லை என்று கருதினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். உலகில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு விதத்தில் அழகானவர்கள் தான். எனவே அழகு அழகில்லை என்பதை தவிர்த்து, மனதை நேசிக்க தொடங்குங்கள்.

    தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே சரியான அளவு தூக்கம் உங்களுக்கு மிகவும் அவசியம். எனவே குறிப்பிட்ட அளவு நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

    மனதில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவுகொள்வது சாத்தியமானதல்ல. எனவே உங்கள் மனதில் வேறொருவர் மீது காதல் இருந்தால், அதனை மறந்துவிட்டு உங்கள் மனைவியை நேசிக்க தொடங்குங்கள். இதுவே நல்ல உறவின் அடையாளம்.

    குடும்பத்தில் உண்டாகும் சில பிரச்சனைகள், உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள், பண பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உடலுறவில் உள்ள நாட்டத்தை குறைக்கும்.

    உங்களுக்கு உடல் ரீதியாக குறைப்பாடு இருப்பதாகவும், உங்களது ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று நினைத்தும் கவலைப்படுவது உடலுறவில் உங்களுக்கு இருக்கும் நாட்டத்தையும், திருப்தியையும் குறைக்கும்.

    மனதில் இருக்கும் நீண்ட நாள் காயங்கள், என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே உங்களது முகம் எப்போதும் சோகமாகவே காட்சியளிப்பது போன்றவற்றிற்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இல்லை என்றால் நீங்கள் எப்போதும் இதே மன குறையுடன் இருப்பீர்கள்.

    சிறு வயது முதலாக காமம் தவறானது என்ற சிந்தனைகளும், உடலுறவு பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதும் உங்களது உடலுறவு இன்பத்தை பெருமளவில் பாதிக்கும் ஒரு காரணமாகும்.

    உங்களது துணையை திருப்திப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் இருவருக்குமே சுகம் கிடைக்காது. எனவே இந்த பயத்தை மனதில் இருந்து ஒதுக்க வேண்டியது அவசியம்.
    கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.
    நமது துணையை அணைக்கும் போது ஒரு இதமான உணர்வு ஆழ் மனதில் இருந்து உண்டாகும். கட்டிபிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் புதுவித உணர்வை உணர்வோம். இது நமது காதலிக்கு மட்டுமில்லை. நமக்கு விருப்பமான ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது இந்த உணர்வு நமக்கு உண்டாகும்.

    தினமும் கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் இதுவும் ஒன்று. கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.

    தினமும் கட்டிப்பிடிக்கும் போது எதிர்ப்பு சக்தி பல மடங்காக நமது உடலில் அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இந்த பயன் கிடைக்குமாம். இதனால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

    கட்டிப்பித்தலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ஆண்கள் தான் கட்டிபிடித்தலை பெரும்பாலும் துவங்குகின்றனர் என்று..! இது இருவருக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய பாலமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    நமது மனசுக்கு பிடித்த ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் ஏரளமான வகையில் மாற்றம் பெறுகின்றன. குறிப்பாக ஆக்சிடாக்சின், டோபோமின் போன்ற ஹார்மோன்கள் சந்தோஷத்தை தர கூடிய ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. மேலும், ஹார்மோன்களின் செயல்திறனும் சீராக இருக்கிறது.

    கட்டிப்பிடிப்பதால் உடளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மன அழுத்தம் குறைதல் தான். தினமும் கட்டிபிடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது. மேலும், இதயம் சார்ந்த நோய்களும் தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

    கட்டிப்பிடிக்கும் பலர் இதை உணர தவறுகின்றனர். கட்டிப்பிடிக்கும் போது நமது துணையின் இதய சத்தத்தை கேட்டால் நமது உடலுக்கு மகிழ்ச்சியை தருமாம். அத்துடன் நமது இதய செயல்திறனையும் சீராக வைக்கும்.



    சில தம்பதியர் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கட்டிபிடித்தல் புதுவித யுக்தியாக உதவும். கட்டிப்பிடிப்பதால் ஹார்மோன்கள் தாம்பத்திய உணர்வை அதிகரித்து இனிமையான தம்பத்தியத்தை ஏற்படுத்தும்.

    கட்டிபிடித்தலில் பலவித வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பெரும்பாலும் பிடிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதில் ஆண்களுக்கு பிடித்தமானதை விட பெண்களுக்கு பிடித்தமானதே பல வகையில் உள்ளதாம்.

    உங்கள் துணையை முழுவதுமாக கட்டிபிடித்து கொண்டால் அதுவே ஹனிமூன் கட்டிப்பிடி என்று அர்த்தம். இது தூங்கும் நிலையில் இருக்கும் போது முழுமையாக கட்டிப்பிடிப்பதை குறிக்கிறது.

    பெண்கள் பலருக்கு இந்த வகை கட்டிபிடித்தலை பிடிக்கும். உங்களது காதலியை பின்னிருந்தது கட்டிப்பிடித்தால் அவருக்கு உங்கள் மீது அதிக காதல் உண்டாகும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஒருவர் மடியில் தூங்கி கொண்டே காட்டுப்பிடிக்கும் வகையை பெரும்பாலும் அதிக ரொமான்டிக் கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். பூங்கா, கடற்கரை போன்ற இடத்தில் இது போன்ற கட்டிபிடிக்கும் வகையை உங்களால் பெரிதும் பார்க்க இயலும்.

    பலருக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த வகை கட்டிபிடித்தலை செய்வார்கள். ஆதாவது, ஒரு காலை தனது துணையின் மேல் போட்டு கொண்டு தூங்குவார்கள். இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

    யாராக இருந்தாலும் கட்டிபிடித்தல் ஒரு சிறந்த மருந்தாக தான் செயல்படுகிறது. தினமும் கட்டிபிடித்தால் மேற்சொன்ன நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். எனவே, அதிக காதலுடனும் அன்புடனும் உங்கள் இணையை கட்டிப்பிடித்து வாழுங்கள் நண்பர்களே..! 
    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும்.
    ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும்.

    தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.

    சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

    * உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.

    * உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.



    * உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.

    * நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.

    * உடலுறவு குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

    * உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.

    * ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.
    முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
    வாழ்வின் ஒரு அங்கம் தான் உடலுறவு. பெரும்பாலும் பெண்கள் கணவரிடம் அன்பு மற்றும் பாசத்தையே எதிர்பார்ப்பார்கள். பகலில் எந்த நெருக்கமும் இல்லாமல் இருந்து விட்டு இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அவர்கள் உடலுறவிற்கு ஒத்துழைத்தாலும், அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. என்ன செய்தாலும் எந்த உணர்வும் இன்றி இருப்பார்கள்.

    பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?...

    அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள். தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.

    குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களாகவே இருந்தாலும், ஆணுறை அணிய செய்து உடலுறவு கொள்ள சொல்வார்கள். அந்தரங்க உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்று கூறுபவர்களும் உண்டு.



    நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும். மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள். அந்த தருணத்தில் உடலுறவை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.

    அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள். இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.

    இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள். எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும். 
    தாம்பத்தியத்தில் தடுமாற்றம், உடல் நலக் குறைவு, உள்ளத்தில் மகிழ்ச்சியின்மை, மழுங்கிய உணர்வுகள் போன்றவை தென்பட்டால் உடனடியாக உணவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    தாம்பத்தியத்தில் தடுமாற்றம், உடல் நலக் குறைவு, உள்ளத்தில் மகிழ்ச்சியின்மை, மழுங்கிய உணர்வுகள் போன்றவை தென்பட்டால் உடனடியாக உணவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    உடலின் சீரான ஹார்மோன் சுரப்புக்கும் திடமான தேகத்துக்கும் சத்தான உணவு அவசியம். திருமணத்துக்குத் தயாராகும் ஆண், பெண் இருவருக்கும் சிறப்பு உணவு வகைகளைச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே வழங்கும் வழக்கம் முன்பு பரவலாக உண்டு. பெண்ணின் மாதாந்திரச் சுழற்சி சீராக அமையவும் கர்ப்பப்பை வலுவூட்டலுக்கும் சிறப்பு உணவைக் கொடுப்பது இன்றும் பல இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது. ஆணோ பெண்ணோ ரத்தசோகை இருந்தால், அவர்களது ஆரோக்கியம் சரிவதுடன் இச்சைக்கான உணர்வுகள் மட்டுப்படவும் செய்யும். அதேபோல ஆணுக்கான டெஸ்ட்டோஸ்டீரோன், பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் போன்ற தனித்துவ ஹார்மோன்கள் சுரப்புக்கும் உணவுத் தேர்வில் கவனம் அவசியம்.

    தினசரி ஒரு கீரை சாப்பிடுவது நல்லது. கால்சியம், வைட்டமின் டி சத்து அடங்கிய முருங்கைக் கீரையில் பொரியல் அல்லது சூப் வைத்துச் சாப்பிடலாம். மணத்தக்காளி, வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும். வலுவான வயிறு உடலின் ஒட்டுமொத்த வலுவைச் சொல்லும். சுண்டைக்காய், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

    இவற்றில் முக்கியமானது சாரைப் பருப்பு. இதை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஊறவைத்து, பொங்கலில் மிளகு சேர்ப்பது போல அரிசியில் கலந்து சமைத்துச் சாப்பிடலாம். உயிரணுக்களைப் பெருக்கும் இதை அரபு நாடுகளில் கஞ்சியாக்கிப் பரிமாறுகிறார்கள். பிரியாணியில்கூட அவர்கள் பாதாம், பிஸ்தா சேர்ப்பார்கள். பாதாம் பருப்பில் சட்னி, துவையல் செய்து சாப்பிடலாம். உலர் பருப்புகளில் அக்ரூட் பருப்பு முக்கியமானது. பாதாம் பிசினை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் ஜவ்வரிசிக்குப் பதில் பாயசத்தில் சேர்க்கலாம்.

    முருங்கைப்பூவுடன் முந்திரி, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்ந்து சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். சாலாமிசிரி வேர், உடலுக்கு வலுச்சேர்ப்பதுடன் நலிந்த தேகத்துக்கு பொலிவை மீட்டுக் கொடுக்கும். இதை அரைத்து அரிசியுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். காய்ச்சலில் நீண்ட நாள் விழுந்தவர்கள் விரைவாக உடல் நலம் பெற இதைக் கொடுப்பார்கள். கோதுமைப் பாலில் இனிப்புகள் செய்யலாம். சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிடுவதுகூட ஆண்களின் ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டும்.



    கிழங்கு ரகங்கள் அனைத்தும் உடலுக்கு வலுச்சேர்ப்பவை. இலங்கையில் திருமணத்துக்குத் தயாராகும் ஆணுக்குப் பனங்கிழங்கை ‘ஒடியல் கூழ்’ என்ற பெயரில் சமைத்துத் தருவார்கள். காராமணி, மொச்சை, பிஞ்சுக் கத்தரி, முருங்கைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றுடன் பனங்கிழங்கு மாவைக் கலந்து கிரேவியாகச் செய்வார்கள். ஆணுக்கு வீரியம் தரும் இந்த உணவைத் திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பாகவாவது பரிமாறுவார்கள். அசைவம் உண்பவர்கள் நாட்டுக்கோழி, காடை, கவுதாரி, கடல் உணவு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு இரு பாலினத்தவருக்கும் நரம்புகளை மீட்டி, உணர்வைப் பெருக்கித் துடிப்போடு வைத்திருக்கும்.

    பெண்கள் பருவமடைந்த நாள் தொடங்கி சிறப்பு உணவூட்டத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்பூரல் மூலிகையில் பச்சரிசி மாவு கலந்து அடை செய்து சாப்பிட்டுவர, மாதவிடாய் சுழற்சி சீராவதுடன் கர்ப்பப்பை பிரச்சினைகள் மட்டுப்படும். இந்த மூலிகையைத் தமிழக அரசு மாத்திரையாகவும் தயாரித்து வழங்குவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம். அந்தக் காலத்தில், கல்யாண முருங்கை உள்ள வீட்டைத் தேடி பெண் எடுப்பார்கள். இந்த இலை, பல் பூண்டு, மிளகு ஆகியவற்றில் தலா மூன்றைச் சேர்த்தரைத்து பருவமடைந்த பெண்ணுக்கு மூன்று நாட்கள் தருவார்கள். கருமுட்டையைத் தகுதிப்படுத்தும் இந்த மருத்துவத்துக்கு இன்றும் ஈடில்லை. கல்யாண முருங்கையில் அடை செய்தும் சாப்பிடலாம்.

    சோற்றுக் கற்றாழையின் உள்ளே உள்ள சோற்றுப் பகுதியை ஜெல்லை எடுத்து ஏழு முறை நன்றாகக் கழுவி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் உதிரப்போக்கில் ஒழுங்கு பிறக்கும். மாதவிடாய் நேரத்து வயிற்று வலி மறையும். மாம்பழ சீசனில் அதன் கொட்டையை உடைத்து, பருப்பை மட்டும் ஒரு புட்டியில் சேகரித்து வைக்கலாம்.

    அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் நாட்களில் இந்தப் பருப்பைச் சுட்டு மோரில் கரைத்து ஒரு வேளை குடித்தாலே குணம்பெறலாம். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதும் நீண்ட ஒழுங்குக் குலைவும் கர்ப்ப பையை இறக்கம் காணச் செய்யும். மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதுடன், அதன் தோலைக் காயவைத்துப் பொடி செய்து சாப்பிடுவதும் மேற்கண்ட பிரச்சினைகளை இயற்கை வழியில் சரிசெய்யும். சோயா, இரட்டை பீன்ஸ், புரக்கோலி, காலிஃபிளவர், தேங்காய், சோம்பு, மல்லித்தழை போன்றவை பெண்களின் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

    கணவன், மனைவி இடையே இயல்பான தாம்பத்திய ஓட்டம் துவண்டால், அவர்களது ஆர்வமின்மையின் பின்னணியில் பிரதான உடல்நலப் பாதிப்புகள் ஒளிந்திருக்கலாம். உடல் உபாதைகளாலும் கணவன் அல்லது மனைவி உறவைத் தள்ளிவைப்பார்கள். எனவே, தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை என்பது சாதாரணமாக ஒதுக்கக்கூடியதோ, சங்கடத்துக்கான சங்கதியோ அல்ல.
    கணவன் மனைவி தாம்பத்தியத்தில் சில நேரங்களில் நடக்கும் விஷயங்கள் பெண்களை வெறுப்படைய செய்யும். அந்த விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும்.

    பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும்.

    அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை தாம்பத்தியத்தின் போது பெண்களை வெறுப்படைச்செய்யும். அதனால் செக்ஸில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.

    தாம்பத்தியத்தின் ஈடுபடும் போது, முன்னாள் காதலியுடன் செக்ஸ் உறவு பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. உண்மையாக இருக்கிறேன் என பலர் இந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.

    ஆக்ரோஷமாக தாம்பத்தியத்தின் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது அவசியம்.

    செக்ஸ் என்பது இருவழிச்சாலை, இருவரும் தங்களின் துணைக்கு பிடித்தபடி நடக்க வேண்டும். பெண்களை மட்டும் எல்லா விஷயங்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.

    பெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது என ஆண்கள் நினைப்பது போலவே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருப்பது அவசியம்.
    கணவன் - மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

    இணையுடன் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

    தாம்பத்தியம் கொள்வதில் இடைவேளை ஏற்பட்டால், பாலியல் உணர்சிகளை தூண்டப்படுவதில் சிக்கலை உண்டாகும். குறிப்பாக விறைப்பு தன்மை குறையவும் வாய்ப்பு உள்ளது.

    உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து விடும். பின் தாம்பத்தியம் கொள்ளும் போது மனதளவில் உடலளவில் பல சிக்கல்கள் ஏற்படும்.

    தாம்பத்தியம் கொள்ளும் போதும் கலோரிகள் எரிக்கப்படும். அப்படி தாம்பத்தியம் கொள்ளாமல் இருக்கும் போது கலோரிகள் எரிக்கப்படுவதும் குறையும் அளவில்லாமல் சாப்பிடுவது உள்ளிட்ட காரணத்தால் உடல் எடை அதிகரிக்கும்.
    தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும்.
    எந்த ஓர் உறவும் வாழ்க்கை முழுவதும் இனித்திட அதற்கான அடிப்படை நியதிகளைப் பின்பற்ற வேண்டும். நமது வாழ்க்கைத்துணைக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு தாம்பத்யரீதியாக ஒழுக்கமாக இருப்பதுதான்.

    திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்வது பல வழிகளிலும் ஆரோக்கியமானதல்ல. திருமணம் வரை காமத்துக்காகக் காத்திருப்பது கணவன் - மனைவி உறவை மேலும் தித்திக்கவே செய்யும். திருமணத்துக்கு முன்பாக லிவ்விங் டுகெதர் முறையில் செக்ஸ் வைத்துக் கொள்வது கண்டிப்பாக திருமண உறவை பாதிக்கும். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும் அது ஒரு குற்ற உணர்வை ஒருவருக்குள் உண்டாக்கும். எனவே, ஆண் - பெண் இருவரும் இது போன்ற உறவைத் தவிர்ப்பது நல்லது.

    இன்றைய கணவன், மனைவி திருமணமான புதிதில் தனது நட்பு வட்டங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் திருமணத்துக்குப் பின் அந்த நட்பு வட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, எதிர்பாலினத்தவருடன் நட்பு காரணத்துக்காகக் கூட நெருக்கமாக இருப்பது வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் மன வேறுபாட்டை உண்டாக்கும்.

    இதுவே பின்னாளில் கணவன்-மனைவி உறவில் சந்தேகத்துக்கான விதையாக மாறி விஸ்வரூபமெடுக்கும். இதனால் கணவன் மனைவி உறவில் அவரவர் பிரைவஸியை அனுமதிப்பதோடு சந்தேகத்துக்கு இடமின்றியும் நடந்து கொள்ள வேண்டும்.



    ஆண் - பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பாக தங்களுக்கு செக்ஸுவலாக அல்லது வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பின் கைவிட வேண்டும். குறிப்பாக பெண்கள் புகையிலைப் பழக்கம் இருப்பின் கைவிடுவது அவசியம். ஆண்கள் மது, போதைப் பழக்கங்கள் இருப்பின் திருமணத்துக்குப் பின் இது போன்ற பழக்கங்களைக் கைவிடுவது மிக மிக முக்கியம்.

    ஏனென்றால் தாம்பத்திய உறவு, குழந்தைப் பிறப்பு இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்வதும் நல்லதல்ல. இதுபோன்ற தவறான பழக்கங்களைத் திருமணத்துக்குப் பின்பும் கடைபிடித்தால் தாம்பத்ய உறவில் நீடித்த  இன்பம் மற்றும் உச்ச நிலையை அடைவது தடைபடும்.
     
    தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. அதற்கு மனமும் அன்பால் இணைந்து இன்புற வேண்டும். பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும். இதற்கு உடல் மனம் இரண்டும்
    ஃபிட்டாக இருப்பது அவசியம். உடலளவில் ஆரோக்கியமாக இருப்பது நம்பிக்கை தரும்.

    தாம்பத்ய நேரத்தில் உண்டாகும் பதற்றத்தைக் குறைக்கும். தாம்பத்ய உறவின்போது நீண்ட நேரம் விளையாட உடலால் உறவாடவும் மூச்சுப்பயிற்சி உதவும். இதனால் திருமணத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே எளிய யோகா பயிற்சிகள் செய்வது அவசியம்.
    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள்.
    இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

    தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வதில் பிரச்சனை ஏற்படும்.

    நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சனை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.



    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

    அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சனை வருவதுண்டு.

    30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.
    ×