search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple suicide"

    • காதல் திருமணம் செய்த 10 நாளில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வளையப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் மாரியப்பன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவரது மகள் சீதாலட்சுமி (16). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்கள் அண்ணன்-தங்கை உறவு முறை என கூறப்படுகிறது.

    இதனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்களை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிந்துபட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    இதனிடையே வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்றனர். திருப்பூரில் செரங்காடு கடுகுகாரர் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தண்ணீர் பிடிப்பதற்காக அக்கம்பக்கத்தினர் சீதாலட்சுமியை தேடினர். ஆனால் அவரது வீடு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி அழைத்தும் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்துள்ளனர். அப்போது மாரியப்பன்-சீதாலட்சுமி இருவரும் கயிற்றில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், திருப்பூரில் இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்து விட்டதால், இனி நம்மை பிரித்துவிடுவார்கள் என்று நினைத்து இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் அவர்களது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், எங்கள் விருப்பப்படி வாழ திருப்பூர் வந்தோம். ஆனால் எங்களை வாழ விடவில்லை. எங்களது இந்த முடிவுக்கு சிலர் காரணம், 100 வருடம் சந்தோஷமாக வாழ விருப்பப்பட்டோம், வேறு வழியின்றி இந்த முடிவு எடுத்துள்ளோம்." கூறியிருந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
    • குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி (வயது45). இவருடைய மனைவி ஷானுமா (40). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இருவரும் பை செய்யும் தொழில் செய்து வந்தனர். நேற்று காலையில் ஹைதர் அலியும், ஷானுமாவும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்தனர்.

    மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பிள்ளைகள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு அறையில் ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள் கதறி அழுதனர். உடனே ஷானுமாவை தேடினார்கள். மற்றொரு அறையில் அவரும் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஹைதர் அலி, ஷானுமா இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா?என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் அருகே உள்ள வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). அவரது மனைவி சுமதி. இவர்களது மகள் புஷ்பரோகிணி (19).

    இவர் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கும் பெரியாண்டிகுழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் வருகிற 20-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

    இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் புஷ்ப ரோகிணி கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சுந்தர மூர்த்தி தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் புஷ்பரோகிணி கிடைக்கவில்லை.

    இதுதொடர்பாக அக்கம் பக்கம் விசாரிக்கையில் புஷ்பரோகிணிக்கு வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (20) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் காதலனுடன் சென்றுள்ளார்.

    இந்த தகவலை அறிந்த சுந்தரமூர்த்தி, சுமதி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபற்றி வெளியே தெரிந்தால் ஊர் மக்கள் கேவலமாக பேசுவார்களே என்று வேதனையடைந்தனர். எனவே தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை கணவன்-மனைவி 2 பேரும் அதே பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் அமர்ந்து விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி 2 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கினர்.

    அப்போது அந்த வழியாக சென்ற விவசாயிகள் 2 பேர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசாரும் அங்கு விரைந்தனர். அப்போது மயங்கி கிடந்த கணவன்-மனைவியை பார்த்தபோது 2 பேரும் இறந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இதுபற்றி அறிந்த சுந்தர மூர்த்தியின் மகன் சந்திரசேகரன் அங்கு விரைந்தார். தனது தாயும், தந்தையும் இறந்துகிடப்பதை பார்த்து கதறிதுடித்தார். உடனே 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குமாரசாமி (வயது 39), டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (35). இவர்களுக்கு 8 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார்.
    • இன்று அதிகாலை ஜெகதீசன் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் குமாரசாமியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த மணமேடு சிவானந்தா பள்ளிக்கூடம் அருகே வசித்து வந்தவர் குமாரசாமி (வயது 39), டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (35). இவர்களுக்கு 8 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார்.

    குமாரசாமி, அப்பகுதியில் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்தார். காலையில் பணிக்கு செல்லும் குமாரசாமி, இரவில்தான் வீடு திரும்புவார்.

    வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்ற குமாரசாமி சற்று முன்னதாக மாலையிலேயே வீடு திரும்பினார். பின்னர் மகன் மணிகண்டனுடன் சிறிது நேரம் விளையாடிக்கொண்டு இருந்தார். இரவு குடும்பத்துடன் அழகரை அக்ரஹாரப் பகுதியில் வசித்து வரும் தன் தந்தை ஜெகதீசன் வீட்டுக்கு மனைவி, மகனுடன் சென்றுள்ளார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடித்த பிறகு அங்கேயே தூங்கி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெகதீசன் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் குமாரசாமியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த ஜெகதீசன் மகன், மருமகள் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டு கதறி அழுதார். பின்னர் அவர் தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆசைத்தம்பி, நல்லதம்பி மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கணவன், மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த தம்பதியினர் எதற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குமாரசாமிக்கு தொழில் நஷ்டம் ஏதாவது ஏற்பட்டதா, பெண் தகராறில் தம்பதியினர் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


    • லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் இதுபோல் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருவதால் லோன் ஆப்-களை தடை செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், லப்பாத்தி பகுதியை சேர்ந்தவர் துர்கா ராவ் (வயது 35).டெய்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா லட்சுமி (30). தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    அங்கு போதிய வருமானம் கிடைக்காததால் ராஜ மகேந்திர வரத்திற்கு குடியேறினார்.

    துர்கா ராவ் லோன் ஆப் மூலம் ரூ.30,000 கடன் வாங்கினார். வாங்கிய கடனில் பாதியை திருப்பி செலுத்தி உள்ளார். மீதி பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

    துர்கா ராவ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட லோன் ஆப் கும்பல் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் உனது மனைவியின் படத்தை நிர்வாணமாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் துர்காராவ், ரம்யாலட்சுமி கிழக்கு கோதாவரி மொகல் தூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்தனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் தங்களது பிள்ளைகளை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    தனது சகோதரியின் கணவர் ராஜேஷுக்கு போன் செய்த ரம்யா லட்சுமி தங்களுடைய பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் தம்பதி தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவர் ஆந்திராவில் இதுபோல் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருவதால் லோன் ஆப்-களை தடை செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    • கடலில் பிணமாக கிடந்த கோவிந்தராஜ்-தனலட்சுமி உடலை போலீசார் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.
    • போலீசாரின் விசாரணையில் கோவிந்தராஜ் பொள்ளாச்சியில் ஊரக வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நான்கு பக்கம் கடல் சூழ்ந்த தீவில் அமைந்துள்ளது. இந்துக்கள் புனித நீராடும் இடமாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் ராமேசுவரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை தினமான நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வயதான முதியவர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் கடலில் பிணமாக மிதந்தனர். அவர்கள் இருவரது உடலும் இடுப்பு பகுதி துணியால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

    இதனை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முதியவர் மற்றும் மூதாட்டி கடலில் பிணமாக மிதப்பது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கடலில் மிதந்த முதியவர் மற்றும் மூதாட்டி பிணங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது.

    பிணமாக கிடந்த முதியவரின் உடையில் சோதனை செய்து பார்த்த போது அவரிடம் ஆதார் அட்டை இருப்பது தெரிய வந்தது. அதில் கோவிந்தராஜ் (வயது62), தந்தை பெயர் ஆறுமுகம், கோவை மாவட்டம் பொன்னாபுரம் சமத்தூர் என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து இறந்து கிடந்தவர் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதில் கோவிந்தராஜனின் மனைவியின் பெயர் தனலட்சுமி (59) என்பதும், அவர் காதிகிராப்பில் ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது.

    கடந்த 3-ந் தேதி கோவிந்தராஜூம் அவரது மனைவியும் ராமேசுவரம் வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கோவிந்தராஜூம் அவரது மனைவியும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

    அதன் பின்னர் தான் இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை செய்து உள்ளனர். மேலும் தங்களது உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அறக்கட்டளை அமைக்க தங்களது சொத்தை விற்று விடுமாறும் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி கோவை மாவட்ட போலீசாருக்கு ராமேசுவரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோவிந்தராஜ் உறவினர்களுக்கு கணவன்-மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் ராமேசுவரத்திற்கு புறப்பட்டு வருகின்றனர். கடலில் பிணமாக கிடந்த கோவிந்தராஜ்-தனலட்சுமி உடலை போலீசார் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். இதில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

    மேலும் போலீசாரின் விசாரணையில் கோவிந்தராஜ் பொள்ளாச்சியில் ஊரக வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குடும்ப தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் குட்டி யானை தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் மகன் பால முருகன் (வயது 36). இவர் சமையல்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அருணா. இவரும் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2½ வயதில் நரேஷ் மதன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை குழந்தை நரேஷ் மதன் நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தான். இதனால் குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    அப்போது பாலமுருகன் வீட்டின் ஜன்னலில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்குவதையும் அருகில் அவரது மனைவி அருணா வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது கும்பகோணம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார், கணவன்- மனைவி உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 4 வருடங்கள் ஆகி உள்ளதால் வேறு ஏதாவது தற்கொலைக்கு காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது ஒரே மகன் அனாதையாகி விட்டானே என்று அக்கம் பக்கத்தினர் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தனர்.
    கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது ரியாஸ் (வயது 35), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.

    திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இருவரும் மன வருத்தத்தில் இருந்தனர். ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் 2 பேரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் படுக்கை அறையில் இருந்து கரும்புகையும், அலறல் சத்தமும் கேட்டது.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு எரிந்த தீயை அணைத்தனர். அப்போது முகமது ரியாசும், தமிழ்ச்செல்வியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர்கள் தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது. அவர்களின் இந்த முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்த 2 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    காங்கயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை காப்பாற்ற சென்ற பேரன் படுகாயம் அடைந்தான்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளியங்காட்டு புதூரை சேர்ந்தவர் தங்க முத்து (60). இவரது மனைவி நாகமணி (55). தங்க முத்து கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்த தம்பதிக்கு சந்திரசேகரன் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி தருண் (10) என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக சந்திரசேகரன் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் அவர் தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன் சந்திரசேகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

    இதனால் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் வேதனையில் இருந்தனர். தங்களது பேரன் தருணை அவர்கள் கவனித்து வந்தனர். ஆனாலும் முதுமை காரணமாக அவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால் வேதனையில் இருந்தனர். மகன் இறந்த துக்கமும் அவர்களை வாட்டியது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தனர். தீ உடலில் பற்றி எரிந்தவுடன் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டதும் அங்கு படுத்து தூங்கி கொண்டு இருந்த தருண் ஓடி வந்தான். அவன் தனது தாத்தா-பாட்டி மீது பற்றிய தீயை அணைக்க முயன்றான்.

    அவனை இருவரும் தள்ளி விட்டனர். இதனால் தருண் சிறு தீக்காயத்துடன் தப்பினான். அவன் வெளியே வந்து சத்தம் போட்டான்.

    இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்கமுத்து- நாகமணி மீது பற்றிய தீயை அணைத்தனர். ஆனாலும் இருவரும் தீயில் கருகி பலியாகி விட்டனர்.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வெள்ளகோவில் அருகே பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Facebooklove
    வெள்ளகோவில்:

    ஈரோடு சூரம்பட்டிவலசு நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நந்தகுமார் (வயது 19). பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தி வந்தார். இவருக்கு கும்பகோணம் புளியம்பேட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரது மகள் சத்யபிரியா (21) என்பவர் அறிமுகம் ஆனார். சத்யபிரியா பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்தவர்.

    இருவரும் தங்கள் கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். போன் மூலம் பேசியபோது காதல் ஏற்பட்டது. மணிகணக்கில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க விரும்பினர். அதன்படி நாள் குறிக்கப்பட்டு சந்தித்தனர். ஒரே சந்திப்பில் இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து உடனே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. மயிலாடுதுறை டவுண் போலீஸ் நிலையத்திற்கு சத்யபிரியாவை வரவழைத்தனர்.

    அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் சத்யபிரியா தனது பெற்றோருடன் செல்வதாக எழுதி கொடுத்தார். அதன்படி பெற்றோருடன் சென்றார்.

    கணவரை பிரிந்து 4 நாட்கள் கூட இருக்க முடியாமல் தவித்தார். 4-வது நாளில் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் கணவருடன் சேர்ந்தார். பின்னர் அவர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    நந்தகுமார் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். காதல் தம்பதியின் வாழ்க்கை இனிமையாக தொடங்கியது.

    தீபாவளிவரை நந்தகுமார் அதே ஓட்டலில் வேலை செய்தார். தீபாவளி முடிந்த பின்னர் நந்தகுமார் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நந்தகுமார் மற்றொரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார்.

    நேற்று காலை அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ஓட்டல் உரிமையாளர் இரவு நந்தகுமாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது நந்தகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். அருகில் அவரது மனைவி சத்யபிரியா வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஓட்டல் உரிமையாளர் இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டை சோதனை செய்தபோது ஒரு கடிதம் சிக்கியது. அதில் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் சந்தோ‌ஷமாகவே உலகை விட்டு பிரிகிறோம். உறவினர்கள்- நண்பர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். அஞ்சலி மட்டும் செலுத்தினால்போதும் என்று எழுதப்பட்டு இருவரும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

    போலீசார் கடிதத்தை கைப்பற்றினர். தற்கொலை செய்து கொண்ட தம்பதி குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது இருவரும் மகிழ்ச்சியாவே இருந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றனர்.

    வெள்ளகோவில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து புதுமணத்தம்பதி தற்கொலை செய்ய என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #Facebooklove
    குடியாத்தம் அருகே இறந்து போன மகன் பிறந்த நாளில் அவனது பெற்றோர், தம்பி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் பழைய காலனியை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரிமளா (34). தம்பதிக்கு நிகேஷ் (7), நிகில் (3) என்ற 2 மகன்கள். இதில் நிகேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு இறந்தார்.

    நிகேஷ் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் திருவேங்கடம் பரிமளா தவித்தனர். அவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். நேற்று இறந்து போன நிகேஷ் பிறந்த நாளாகும். இதனால் தம்பதியினர் காலையில் சுறுசுறுப்பாக இருந்தனர்.

    வீட்டில் கேக் வெட்டி நிகேஷ் பிறந்த நாளை கொண்டாடினர். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இறந்து போன மகன் பிறந்த நாளை நினைவு கூறி இனிப்பு, கேக் வழங்கினர்.

    நாள் முழுவதும் மகனின் நினைவுகளில் மூழ்கி கிடந்த அவர்களால் மகனை மறக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தங்களது 3 வயது மகன் நிகிஷை தூக்கில் தொங்கவிட்டு திருவேங்கடம், பரிமளா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்றபோது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று 3 பேரும் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மயிலம் பாடி கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 60).

    இவரது மனைவி மாதேஸ்வரி (54). இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அந்தியூர் அடுத்த பருவாச்சியில் கோவிந்தராஜ் கொல்லப்பட்டறை நடத்தி வந்தார்.

    தொழிலை விரிவுப்படுத்த கோவிந்தராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் நிதி நிறுவனத்திலும் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் கணவனும், மனைவியும் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டனர். இதையொட்டி அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் பருவாச்சியில் உள்ள கொல்லப்பட்டறைக்கு சென்றனர். பட்டறை மாடிக்கு சென்ற அவர்கள் தாங்கள் வாங்கி வந்த வி‌ஷத்தை குடித்தனர்.

    முன்னதாக கோவிந்த ராஜ் தனது தம்பி நாராயணனுக்கு போன் செய்தார். போனில் பேசிய அவர், ‘‘நான் உயிரோடு இருக்கமாட்டேன். நானும் என் மனைவியும் வி‌ஷம் குடித்துவிட்டோம்’’ என்று கூறினார்.

    அண்ணன் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் பட்டறைக்கு வந்து பார்த்தார்.

    பட்டறையின் மாடிக்கு சென்று பார்த்தபோது இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டார்.

    உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.

    நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவரது மனைவி மாதேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று அதிகாலை 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    ×