என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » guduvancherry suicide
நீங்கள் தேடியது "Guduvancherry suicide"
கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது ரியாஸ் (வயது 35), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.
திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இருவரும் மன வருத்தத்தில் இருந்தனர். ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் 2 பேரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் படுக்கை அறையில் இருந்து கரும்புகையும், அலறல் சத்தமும் கேட்டது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு எரிந்த தீயை அணைத்தனர். அப்போது முகமது ரியாசும், தமிழ்ச்செல்வியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர்கள் தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது. அவர்களின் இந்த முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்த 2 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது ரியாஸ் (வயது 35), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.
திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இருவரும் மன வருத்தத்தில் இருந்தனர். ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் 2 பேரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் படுக்கை அறையில் இருந்து கரும்புகையும், அலறல் சத்தமும் கேட்டது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு எரிந்த தீயை அணைத்தனர். அப்போது முகமது ரியாசும், தமிழ்ச்செல்வியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர்கள் தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது. அவர்களின் இந்த முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்த 2 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X