search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector inspection"

    • விருதுநகர் ஊராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்ட பாணி உள்பட பலர் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.16.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரும் ஆண்களுக்கான கழிவறை கட்டிடங்களையும், ரூ.16.60 லட்சம் மதிப்பில் பெண்க ளுக்கான கழிவறை கட்டி டங்களையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.48.75 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை எண்-7 முதல் பனைநகர் வரை சாலை அமைக்கப்படும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.4.65 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தம் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் அறையையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    பின்னர், சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவி களுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்டபாணி உள்பட பலர் இருந்தனர்.

    • காரியாபட்டி பகுதிகளில் ஊராட்சி துறை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 35000 லிட்டர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கம்பிக்குடி கிராமத்தில், சுரங்கம் மற்றும் கனிமவள நிதியிலிருந்து ரூ.3.18 கோடி மதிப்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளையும், பாப்பனம் கிராமத்தில், பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.13.65 லட்சம் மதிப்பில் 35000 லிட்டர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    வி.நாங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சம் மதிப்பிலான புதிய கிராம ஊராட்சி செயலகக் கட்டடம் கட்டும் பணிகளையும், முடுக்கன்குளம் -செக்கனேந்தல் இடையே கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.156.33 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் துலுக்கன்குளம் கிராமத்தில், இண்டஸ் வங்கி, பிரதான் அறக்கட்டளை மற்றும் மக்கள் பங்களிப்புடன் ரூ.5.25 லட்சம் மதிப்பில் கீழகள்ளிகுளம் கண்மாய் தூர்வாரும் மற்றும் மதகு சரிசெய்யும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, செயற் பொறியாளர் இந்துமதி, மாவட்ட ஊராட்சி செயலர்/மண்டல அலுவலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ், உதவி பொறியாளர்கள் காஞ்சனாதேவி, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளது
    • கட்டிடங்கள் அகற்றுவது குறித்து கேட்டறிந்தார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது உழவர் சந்தையை பார்வையிட்ட அவர் அங்கு விவசாயிகள் உள்ளனரா அல்லது வியாபாரிகள் உள் ளனரா என கேட்டறிந்தார். பின்னர் அங்கு இயற்கை முறை யில் தேன்மற்றும் சிறுதானிய கஞ்சி வகைகள் தயாரிக்கும் கடை வைத்திருப்பவர்களிடம் விற்பனைகள் குறித்து கேட்ட றிந்தார்.

    இதனைத் தொடர்ந்து பார்த்திபன் நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகள் பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகளையும் விரைவாக முடிக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டார்.

    தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள நகர்புற நல வாழ்வு மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளதால் அந்த இடத்தில் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டியதையும் நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத் தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், மருந்துகள். உரங்கள் மற்றும் இருப்பு அறையை பார்வையிட்டார். ஆய் வின்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயபிரகாஷ். வேளாண்மைதுறை கண்காணிப்பாளர் கோபி, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராஜ்குமார், உதவி நிர்வாக அலுவலர் யோகேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வருகிற 8-ந் தேதி திறப்பு
    • மக்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு மையமாக உள்ளது

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி எதிரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 9 ஏக்கர் பரப்ப ளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவினை வருகிற 8-ந் தேதி மாலை பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்கிறார். பூங்கா நுழைவு கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படும்.

    இந்த கட்டணம் பூங்காவை தூய்மையாக பராமரிக்க பயன்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கிரிவலப்பாதையில் உள்ள தோட்டக்கலை துறை பூங்கா நகர மக்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு மையமாகவும், குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடமா கவும் அமைந்துள்ளது.

    • சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கல்லிக்குடி ஊராட்சியில் பலியபுரம் பகுதி, மேல தெருவில் பிளெவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், கன்னூர் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தடுப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும், கல்லிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்காக கட்டப்ப ட்டுவரும் கழிவறை மற்றும் நியாயவிலைக்கடை கட்டடத்தினையும், ஓடாச்சேரி ஊராட்சியில் மங்களநா யகிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், மங்களநாயகிபுரம் நூலகத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளையும், கட்டப்பட்டுவரும் நியாயவி லைக்கடையினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓடாச்சேரி சமத்துவபுரத்திலு பெரியார் சிலை சீரமைப்பு பணி, நுழைவாயில், சமத்துவபுரம் குடிநீர் குழாய் விரிவாக்கம் பணிகள் மற்றும் சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவ தையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆமுர், திருவாதி ரைமங்கலம், சோழங்கநல்லூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்
    • உடல் பரிசோதனை செய்து கொண்டார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமினை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

    அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மனாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து காட்டூர் பனம்தோப்பு பகுதியில் குறுங்காடுகள் அமைக்கும் பணியை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார் புதுப்பேட்டை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு திட்டத்தை முன்னிட்டு அப்துல் கலாம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    புதுப்பேட்டை அரசு சமூதாய சுகாதார மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடல் பரிசோதனை செய்து கொண்டார் அதன் பிறகு ரத்த தானம் முகாமில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கினார் இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதிஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, டாக்டர் சுமன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே.சதிஷ்குமார், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணி
    • அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 60 காய்கறி விற்பனை கடைகள், 300 சிறு விற்பனை காய்கறி கடைகள், குளிர்பதன கிடங்கு, ஆட்டு சந்தைக்கான கட்டிடம், ஓய்வறை, கழிவறை ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது .

    இந்த பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதே போல் வாலாஜா ஒன்றியம் மருதம்பாக்கம் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் விவசாயத்திற்கும், பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகள் சிமெண்ட் தொழிற்சாலை களுக்கும் அனுப்பப்படும் பணி களையும் பார்வை யிட்டார்.

    ராணிப்பேட்டை நகரில் ரூ.33 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 திட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணி, வாலாஜாவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி, ரூ. 1 கோடியே 31 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள பூண்டி மகான் குளம், குளத்தை சுற்றி மரம் நடுதல், பூங்கா அமைத்தல், பொழுது போக்கு, விளையாட்டு சாதனங்கள் நிறுவுதல், கழிப்பறை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது ராணிப்பேட்டை, வாலாஜா நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகரமன்ற உறுப்பினர் குமார் உள்பட நகராட்சி ஆணையாளர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும்பணியையும், கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகமணிகண்டன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நக ராட்சி சந்தைப்பேட்டையில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக கடைகள் கட்டும் பணியையும், ரூ.4 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணியையும், ரூ.1 கோடியே 89 லட்சத்து15 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும்பணியையும், கலெக்டர் உமா நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சி புளியம்பட்டி பாளையத்தில் ரூ.6.71 லட்சம் மதிப்பீட்டில், கழிவு நீர் கால்வாய் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.85 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ள தையும், ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் புள்ளி கவுண்டம்பாளை யத்தில் கான்கிரீட் சாலை அமைக் கப்பட்டுள்ளதையும், நாடார் தெருவில் ரூ.2.49 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக் கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    மேலும், ஆனங்கூர் ஊராட்சி சேவை மையம், ரேசன் கடை, சட்டையும் புதூர் தனியார் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். பின்னர் ரேசன் கடை யில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கலந்து ரையாடி அனைவரையும் உரிய ஆவணங்களுடன் முகாம் நடைபெறும் போது தங்களது விண்ணப்பித் தினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து மல்ல சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், செண்பகமாதேவி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு களின் போது, திருச்செங் கோடு தாசில்தார் பச்ச முத்து, திருச்செங்கோடு நக ராட்சி ஆணையாளர் ஜெய ராமராஜா, திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கள் மாதவன், கஜேந்திர பூபதி, மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் லோகமணிகண்டன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் தியேட்டரில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி திரையரங்கம் இயங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் தியேட்டரில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு விதித்து ள்ள விதிமுறை களை முறையாக பின்பற்றி திரையரங்கிற்கான உரிமை புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும், அதன் உரிமை மற்றும் சான்றிதழ்கள் முறையாக புதுப்பிக்கப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் திரையரங்கி ற்கான மின்சார பராமரிப்பு முறைகள், தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள், தீயணைப்பு கருவிகளின் நிலை, அவசர வழிகள், முதல் உதவி சாதனங்கள் போன்ற அவசர கால பயன்பாட்டு உபகரண ங்களின் நிலை மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகள், உணவு பாதுகாப்பு துறை யின் சார்பில் வழங்கப்பட்டு ள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவு தயார் செய்யப்படுகிறதா, திரையர ங்கிற்கு வரும் பொது மக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு மேற்கொ ண்டார்.

    செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வழங்கப்பட்டு வரும் தமிழக அரசின் சாதனை விளக்க விளம்பர குறும்படங்கள் முறையாக திரையிடப்படு கிறதா என்றும் அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி திரையரங்கம் இயங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    • அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
    • ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் வாயி லாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ், ஆய்வு செய்தார். நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேவூர்- அகரம் சாலை ரூ.93.75 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கி.மீ. சாலை பணிகள் நடைபெறுவதையும், பூலாம்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.21 லட்சம் மதிப்பீட்டில் ஊர்குளம் புனரமைப்பு பணிகள் நடைபெறு வதையும், பூலாம்பாடி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.151.93 லட்சம் மதிப்பீட்டில் 3.17 கி.மீ. நீளத்திற்கு கலியமேடு - வரம்பனூர் சாலை பணிகள் நடை பெறுவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் அவ்ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.35 லட்சம் மதிப்பீட்டில் காளிமாமேடு நடுஏரி ஒடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வேப்பூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பழைய காலணி - ஒட்டஞ்சாலை வாய்க்காலில் நீர்உறிஞ்சி குழி வெட்டும் பணிகள் நடை பெறுவதை யும், சிறுநெசலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.84 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கப்பட்டு ள்ளதையும் பார்வையி ட்டார்.

    அவ்ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.48 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.5 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.98 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கிலோ மீட்டர் நீளத்திற்கு கீழக்குறிச்சி - ஜாயேந்தல் சாலை பணிகள் நடை பெறுவதையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஐவதுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தையே பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், நகர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிகாமணி, ஜெயகுமாரி , உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏழா யிரம்பண்ணை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தினையும், ஏழாயிரம் பண்ணையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை பார்வையிட்டார். பின்னர் மாணவர்களின் கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, சங்கரபாண்டியபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரபாண்டியபுரம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.

    இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், வட்டாட்சியர் ரங்க நாதன், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்படவுள்ளது.
    • இதையொட்டி, அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ சேவைகளை வழங்கிடும் வகையில், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதையொட்டி, அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மருத்துவ கட்டிட வரைபட ஒப்புதல், திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், வகுரம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி முதல் லத்துவாடி செல்லும் சாலை பலப்படுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடுகளின் படி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையிட்டார்.

    இந்த ஆய்வுகளின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கனிமொழி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ஜெயக்குமார், வகுரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாரகுமாரன் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    ×