search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்காவை கலெக்டர் ஆய்வு
    X

    9 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்காவை கலெக்டர் ஆய்வு

    • வருகிற 8-ந் தேதி திறப்பு
    • மக்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு மையமாக உள்ளது

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி எதிரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 9 ஏக்கர் பரப்ப ளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவினை வருகிற 8-ந் தேதி மாலை பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்கிறார். பூங்கா நுழைவு கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படும்.

    இந்த கட்டணம் பூங்காவை தூய்மையாக பராமரிக்க பயன்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கிரிவலப்பாதையில் உள்ள தோட்டக்கலை துறை பூங்கா நகர மக்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு மையமாகவும், குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடமா கவும் அமைந்துள்ளது.

    Next Story
    ×