search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector inspection"

    • கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன.
    • மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர். சிலுவம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, ஆரியூர், அணியாபுரம், லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    ஆய்வு

    மொபைல் ரேசன் கடைமூலம் நாமக்கல் சிலுவம்பட்டி, போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொபைல் ரேஷன் கடை மூலம் பயன்பெறும் ரேசன் கார்டுகள், வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை கலெக்டர் உமா கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும், தரமான உணவுப் பொருட்களை சரியான அளவில் வழங்கிட வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கிராமத்தில் ஆன்லைன் மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக நிலங்கள் வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பிலிக்கல் பாளையத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் பணிகள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப் பட்ட மானிய தொகை, நிலம் மேம்பாடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    நிலத்தடி நீர்

    இதையடுத்து கலெக்டர் உமா கூறியதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடி செய்வதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும். பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தரிசு நிலத் தொகுப்புகளில் நிலத்தடி நீர் மட்டம், நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தரிசு நிலத்திலும் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.

    அந்த வகையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் 2021 -– 2022- ன் கீழ் கபிலர்மலை வட்டம் பிலிக்கல்பாளையத்தில் 15 விவசாயிகளை உள்ளடக்கி 15.50 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரிசு நிலத் தொகுப்பில் ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு மற்றும் மின் மோட்டர் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, தோட்டக்கலைத்துறை (துணை இயக்குநர்) கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், கபிலர் மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோக நாதன் மற்றும் பயனாளிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்தல்
    • துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் டவுன் சிவராஜ் பேட்டை 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45). இவருடைய மனைவி சுமித்ரா(35). தம்பதியினர் மகன்கள் பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5) மகன் புருஷோத்தமன் (8 மாதம்). மணிகண்டன் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். சுமித்ரா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, புருஷோத்தமன் ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அபிநதி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் சிவராஜ் பேட்டை அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பொதுமக்களிடம் தூய நீரில் தான் டெங்கு வேகமாக பரவும். எனவே தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதோடு, போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது
    • வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும்

    வேலூர்:

    கண்ணமங்கலம் கூட்ரோட்டில், கீழ்ப்பள்ளி ப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடத்தில் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது.

    தற்போது புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தை இணைக்கும் சாலையாக உள்ள, இந்த கண்ணமங்கலம் கூட்ரோட்டில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    3 வழிதடங்களை இனைக்கும் இந்த இடத்தில் பயணிகளின் நலன் கருதி, பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிதாக பயணிகள் தங்கும் விடுதி கட்டிடம் கட்ட வேண்டு மென பொதுமக்கள் கலெக்டர் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்படி பழுதடைந்த பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டர் கூறுகையில்:-

    பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்ப தோடு, வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் தேவி சிவா, ஊராட்சி மன்ற தலை வர்கள் சிவகுமார், விஜய பாஸ்கர், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தாசில்தார் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மின்சார கட்டண விவரம் குறித்து விசாரணை
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வாலாஜா நகராட்சிக்குட்பட்ட கச்சால் நாயக்கர் தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றை பார்வையிட்டும், குடும்ப ஆண்டு வருமானம், சொந்த நிலம் உள்ளதா, குடும்பத்தில் உள்ள நபர்கள் விவரம், வேலை, கார் உள்பட வாகனம் உள்ளதா, மின்சார கட்டண விவரம் ஆகியவை குறித்து வீடு வீடாக சென்று கலெக்டர் கேட்டறிந்தார்.கலெக்டர் ஆய்வின்போது தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசன் உள்பட வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.

    • நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ரத்தினம்நகர் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (இ.நாம்) விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனூர் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ.நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    முதல் கட்டத்தில், விவசாயிகளின் விளைபொருள் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு லாட் உருவாக்கம் செய்யப்பட்டதையும்,

    இரண்டாவது கட்டத்தில், விளைபொருட்களின் மாதிரி மற்றும் தரம் சோதனை ஆய்வாளர்களால் (Assay Analyst) பரிசோதிக்கப்பட்டதையும், மூன்றாம் கட்டத்தில், மின்னணு முறையில் இணையதளத்தில் ஏலம் மேற்கொண்டதையும்,

    நான்காவது கட்டத்தில், விளைபொருட்களின் எடை சரிபார்க்கப்பட்டு விலைப்பட்டியல் உருவாக்கப்பட்டு விற்பனை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதையும், இறுதியாக, விளைபொருட்களுக்கான தொகையானது வங்கி காசோலை போன்ற முறையில் உரிய தொகை கிடைக்கப்பெற்ற பிறகு விளைபொருட்கள் வெளியே எடுத்து செல்வது வரை கணினியில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டதையும், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டத் தொகை செலுத்திய நபர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

    விளைபொருட்களை எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி மற்றும் போக்குவரத்து செலவினங்களை குறைக்கும் நோக்கில், விவசாயிகளின் இருப்பிடம் மற்றும் தோட்டத்திற்கே அலுவலர்கள் நேரில் சென்று, இ.நாம் செயலி மூலம் விற்பனை செய்து கொடுக்கப்படும் என்கிற விற்பனை திட்டத்தினை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம் திட்டத்தில் மேற்கொண்ட பரிவர்த்தனை, அதன் பயன்பாடுகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்படும் வேளாண் விளைபொருளின் விவரங்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் தொடர்பான பதிவேடுகளையும், விதை பரிசோதனை நிலைய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் அதனை பராமரிக்கும் முறை குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

    விதைமாதிரிகள் உரிய முறையில் விவசாயிகளிடம் பெற்று காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • காலை உணவு திட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்
    • மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு நடத்தினார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலில் 1-வது வார்டு தந்தை பெரியார் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து 2-வது வார்டு வேல்முருகன் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி திடக்கழிவு மேலாண்மை மையம் மற்றும் குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் பள்ளியில் முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது பேரூராட்சி உதவி இயக்குனர் கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
    • கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    சின்னமனூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.114.29 லட்சம் மதிப்பீட்டில் சங்கிலி தேவன் குளம் புனரமைக்க ப்பட்டதையும், ரூ.65.97 லட்சம் மதிப்பீட்டில் 3.681 கி.மீ தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகளையும், சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.28.58 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட நீர்தேக்க த்தொட்டி, பொன் நகர் பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க த்தொட்டி கட்டுமானப் பணிகளையும், கண்ண ம்மாள் கார்டன் பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகளையும், குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நகராட்சி திட்டப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வருவத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் கைதி பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, சமுதாயப் பணி பதிவேடு, நடப்புத்தாள் பதிவேடு, சுற்றுக்காவல் பதிவேடு, மாதிரி பணி பதிவேடு, சீதன பதிவேடு, பொது நாட்குறிப்பு பதிவேடு மற்றும் நடப்பு தாள் பதி வேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார்.

    மேலும், கண்காணிப்பு கேமரா சரியாக இயங்கு கிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்ட றிந்தார்.

    ஆய்வின்போது சின்ன மனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் பன்னீர், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ சிகிச்சை பெறு வதற்கு காலை முதல் மாலை வரை வந்து செல் கின்றனர்.
    • சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படு கிறதா? மருந்து மாத்திரை வழங்கப்படுகிறதா

    கடலூர்:

    நெல்லிக்குப்பத்தில் நகராட்சி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் ஏராள மான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெறு வதற்கு காலை முதல் மாலை வரை வந்து செல் கின்றனர். நகராட்சி மருத்துவ மனையில் மாலைக்கு பிறகு டாக்டர்கள் பணியில் இல்லைஎன கூறப்படுகிறது. நர்சுகள் மட்டும் சிகிச்சை அளித்து வருகின்ற னர். மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நகராட்சி மருத்து வமனைக்கு நேரில் வந்தார். பின்னர் அங்கு இருந்த வருகை பதிவேடு மற்றும் சிகிச்சைக்கு வந்த மக்களி டம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படு கிறதா? மருந்து மாத்திரை வழங்கப்படுகிறதா? டாக்டர்கள் பணிக்கு வரு கிறார்களா? மற்றும் மருந்து மாத்திரை சரியான முறை யில் உள்ளதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நகராட்சி மருத்துவமனையில் கழி வறை வசதி இல்லை என சமூக ஆர்வலர் குமரவேல் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் உடனடியாக கழிவறை வசதி செய்வதற்கு இடத்தை பார்வையிட்டார். அங்கு இருந்த பெரிய அளவிலான மரத்தை வெட்டினால் கழிவறை கட்டலாம் என மருத்துவதுறை அலு வலர்கள் தெரிவித்தனர். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ் திட்டவட்ட மாக மரத்தை வெட்டாமல், இருக்கும் இடத்தில் கழிவறை கட்ட வேண்டும் என தெரி வித்ததோடு உடனடியாக நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு உடனடியாக கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.

    • காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
    • ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பொருட்டு, முன்னோட்டமாக தயாரிக்க ப்பட்ட காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார். அவர் பேசியதாவது, 

    காலை உணவு திட்டம், அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் தொடக்கி வைத்து, செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, 2-ம் கட்டமாக அனைத்து ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1020 பள்ளிகளில் முன்னோட்டமாக காலை உணவு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவினை உண்டு சுவை மற்றும் தரத்தினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், சத்துணவு மையங்களிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, சிலமலை, நாகலாபுரம், மற்றும் ராசிங்காபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    உப்புக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி களையும், 15வது நிதிக்குழு மானியத்திட்ட த்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளையும்,

    டொம்பு ச்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.60 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி கூடம் அமைக்கும் பணிகளையும், சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.55 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் சமத்துவ மயானத்தில் சுற்றுச்சுவர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 4 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் பதிக்கும் பணிகளையும், நாகலாபுரம் ஊராட்சியில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளையும்,

    மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இணைய தளம் வரிவசூல் செய்யும் பணிகளையும்,

    ராசிங்காபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி சமையல் அறை கட்டிடம் அமைக்கும் பணி களையும் பார்வையிட்டார். ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுவதையும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அங்க ன்வாடி மையங்கள், நூலக ங்கள், சத்துணவு மையங்க ளிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

    • சிவகங்கை அருகே வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சித்தானூர் கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சேங்கை ஊரணி தூர்வாருதல், படித்துறை கட்டும் பணி, ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை கட்டும் பணி, ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குறிச்சிவயலில் தார்சாலை அமைக்கும் பணி, ரூ.6.13 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சீரமைப்பு பணி, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அனுமந்தக்குடி கிராமத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்தார். தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.

    கண்ணங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியினை பார்வையிட்டு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ×