என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான பகுதியில் கலெக்டர் ஆய்வு
- தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்தல்
- துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் டவுன் சிவராஜ் பேட்டை 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45). இவருடைய மனைவி சுமித்ரா(35). தம்பதியினர் மகன்கள் பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5) மகன் புருஷோத்தமன் (8 மாதம்). மணிகண்டன் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். சுமித்ரா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, புருஷோத்தமன் ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அபிநதி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் சிவராஜ் பேட்டை அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பொதுமக்களிடம் தூய நீரில் தான் டெங்கு வேகமாக பரவும். எனவே தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதோடு, போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






