என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- சிவகங்கை அருகே வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சித்தானூர் கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சேங்கை ஊரணி தூர்வாருதல், படித்துறை கட்டும் பணி, ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை கட்டும் பணி, ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குறிச்சிவயலில் தார்சாலை அமைக்கும் பணி, ரூ.6.13 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சீரமைப்பு பணி, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அனுமந்தக்குடி கிராமத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்தார். தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.
கண்ணங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியினை பார்வையிட்டு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்