search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    திருவாரூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கல்லிக்குடி ஊராட்சியில் பலியபுரம் பகுதி, மேல தெருவில் பிளெவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், கன்னூர் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தடுப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும், கல்லிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்காக கட்டப்ப ட்டுவரும் கழிவறை மற்றும் நியாயவிலைக்கடை கட்டடத்தினையும், ஓடாச்சேரி ஊராட்சியில் மங்களநா யகிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், மங்களநாயகிபுரம் நூலகத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளையும், கட்டப்பட்டுவரும் நியாயவி லைக்கடையினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓடாச்சேரி சமத்துவபுரத்திலு பெரியார் சிலை சீரமைப்பு பணி, நுழைவாயில், சமத்துவபுரம் குடிநீர் குழாய் விரிவாக்கம் பணிகள் மற்றும் சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவ தையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆமுர், திருவாதி ரைமங்கலம், சோழங்கநல்லூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×