search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "california"

    • ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உட்பட பல நரம்பியல்-உளவியல் திறன்கள் பரிசீலிக்கப்பட்டது
    • நுகரும் தன்மை குறித்து குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன

    ஐம்புலங்களின் செயல்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர்.

    முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உடபட பல நரம்பியல்-உளவியல் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    பிறகு ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர்.

    அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் முதலிய வாசம் கொண்ட இயற்கையான எண்ணெயை தொடர்ந்து நுகர வைத்தனர். ஒரு கருவியை கொண்டு காற்றில் செலுத்தப்படும் இந்த வாசத்தை தினமும் இரவில் 2 மணி நேரம், வீட்டில் பல இடங்களிலிருந்தும் அவர்கள் முகரும்படி செய்யப்பட்டது.

    இதே போன்று தினமும் 2 மணி நேரம், மற்றொரு குழுவினரிடம் தரமான வாசமில்லாத ஒரு பொருள் முகர செய்யப்பட்டது. 6 மாதங்கள் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.

    6 மாதங்கள் கடந்ததும், அவர்களிடம் மீண்டும் நரம்பியல்-உளவியல் திறன் பரிசோதிக்கப்பட்டது.

    இதில் நல்ல வாசனையை முகர்ந்தவர்களின் முடிவெடுக்கும் திறன் முன்பிருந்ததை விட அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். மேலும், அந்த குழுவில் உள்ளவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைத்ததாகவும் கண்டறிந்துள்ளனர்.

    நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நல்ல வாசம் இருக்கும்படியாக வைத்து கொண்டால் நமது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என்றும் வயதானால் தோன்றும் ஞாபக சக்தி குறைபாடுகள் சம்பந்தமான நோய்கள் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.#CaliforniaShooting
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இளம்பெண் ஒருவரும் மற்றும் 2 ஆண்களும் அடங்குவர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் ஜான் எர்னஸ்ட் (19) என தெரிய வந்துள்ளது.

    கடந்த 6 மாதத்துக்கு முன் பிட்ஸ்பர்க் நகரில் இதேபோல் யூதமத கோவிலில் நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #CaliforniaShooting
    கலிபோர்னியாவில் பாஸ்ட் புட் அருகில் காருக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாப் பாடகரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #PopSingerdead
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    கலிபோர்னியாவின் வாலஜோ பகுதியில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடை ஒன்றின் முன் மெர்சிடஸ் கார் ஒன்று நீண்டநேரம் நின்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த கடையில் வேலை செய்துக்கொண்டிருந்த ஊழியர்கள் அந்த காரின் அருகில் சென்று பார்த்தபோது, ஒருவர் ஓட்டுனர் சீட்டில் சரிந்து விழுந்துகிடப்பதை கண்டனர்.

    இதை தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூட்டி இருந்த காரின் கதவை திறந்தனர். அப்போது ஓட்டுனர் சீட்டில் ஒருவர் அசைவின்றி கிடப்பதை அறிந்தனர். அவரது மடியில் துப்பாக்கி இருந்ததையும் கவனித்தனர்.  கார் இயக்க நிலையிலேயே இருந்தது. இதன் இயக்கத்தை நிறுத்த முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த நபர் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார்.

    இதனை கவனித்த போலீசார், தங்களை நோக்கி சுட முயற்சிப்பதாக நினைத்து, அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அவர், பாப் பாடகர் வில்லி மெக்காய் என தெரியவந்தது. இச்சம்பவம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றுள்ளது.

    இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலை என்றும், போலீசாரின் இனவாத செயல் என்றும் மெக்காயின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே அவரை சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக  போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.

    இது குறித்து வில்லி மெக்காயின் அண்ணன், மார்க் மெக்காய் கூறுகையில் , ‘போலீசார் அமைதியான முறையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யாமல், இவ்வாறு செய்தது சரியான பணி அல்ல’ என கூறினார். #PopSingerdead
      
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #CaliforniaShooting
    வாஷிங்டன்:

    கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

    இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டில் சுமார் 40,000 பேர் துப்பாக்கி சூடு தொடர்புடைய சம்பவங்களில் பலியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #CaliforniaShooting
    பல கட்ட போராட்டத்துக்கு பின்னர் விசா கிடைத்ததையடுத்து ஏமன் பெண், அமெரிக்கா விரைந்தார். அங்கு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் குழந்தையை சென்று பார்த்தார். #YameniMum #DyingSon #California
    வாஷிங்டன்:

    ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அலி ஹசன், சைமா சுவிலே தம்பதியர். இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் அப்துல்லா.

    ஏமனில் உள்நாட்டுப்போர் நடந்து வருவதால் உயிருக்குப் பயந்து இந்த குடும்பம், எகிப்து நாட்டுக்கு சென்று கெய்ரோ நகரில் குடியேறியது.

    இந்த நிலையில், குழந்தைக்கு ‘ஹைப்போமைலினேசன்’ என்ற மூளை நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. இந்த நோய் தாக்கியதால் குழந்தை சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.



    குழந்தையை சிகிச்சைக்காக தந்தை அலி ஹசன், 3 மாதங் களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அவர்கள் இருவருக்கும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. ஆனால் அலி ஹசன் மனைவி சைமாவுக்கு ஏமன் நாட்டு குடியுரிமைதான் உள்ளது.

    ஏமன், ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்துள்ளார். அதை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

    இதனால் ஏமன் குடியுரிமை கொண்ட சைமாவுக்கு அமெரிக்க விசா கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் கணவனுடனும், குழந்தையுடனும் போக முடியவில்லை.

    அமெரிக்காவில் ஓக்லாண்டில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்பிரான்சிஸ்கோ பெனிஆப் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமானது. உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தெரியவந்தபோது, குழந்தையின் தாய் சைமா அழுது புரண்டார். உயிர் பிரிவதற்கு முன்னர் தன் குழந்தையைப் பார்த்துவிட வேண்டும், உயிர் போவதற்குள் குழந்தைக்கு அன்பு முத்தம் தர வேண்டும் என்று தவித்தார். ஆனால் அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டது.

    இருந்தாலும், அவருக்கு அமெரிக்கா விசா வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. டுவிட்டரில் ஏராளமானோர் பதிவிட்டனர். அமெரிக்க அதிகாரிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் மின்னஞ்சல் கடிதம் அனுப்பினர். அமெரிக்க எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்தனர்.

    ஜனாதிபதி டிரம்புக்கு அலி ஹசன் எல்லா விவரங்களையும் சொல்லி, தன் மனைவி சைமாவுக்கு விசா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    கடைசியில் ஒரு வழியாக சைமாவுக்கு அமெரிக்கா ‘ஐ-130’ விசா வழங்கியது. இந்த விசா, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களின் நெருங்கிய உறவினர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்கிறது.

    அதைத்தொடர்ந்து சைமா, கெய்ரோ நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சான்பிரான்சிஸ்கோ சென்று இறங்கினார். பின்னர் அங்கிருந்து 22 மைல் தொலைவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு மரணத்தின் விளிம்பில், உயிருக்கு போராடி வருகிற குழந்தை அப்துல்லாவை அவர் பார்த்தார். கணவரையும் சந்தித்தார். அப்போது அந்தத் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. இது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. #YameniMum #DyingSon #California 
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. #CaliforniaFire #CaliforniacampFire
    பாரடைஸ்:

    அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள். 1 லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுக்க போராடினால்தான் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.



    அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது. தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடி வருகிற வீரர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மாகாணம் முழுவதும் இந்த காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 50 ஆக உயர்ந்துள்ளது. பல நூறு பேர் காணாமல் போய் விட்டனர்.

    கேம்ப் தீ என்று சொல்லப்படுகிற பாரடைஸ் நகர பகுதி காட்டுத்தீதான் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பட்டி நகர ஷெரீப் கோரி ஹோனியா நிருபர்களிடம் பேசும்போது, “ஏற்கனவே 42 பேர் பலியான நிலையில், பாரடைஸ் நகரில் மேலும் 6 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த 6 பேரும் வீடுகளுக்குள் தீயில் கருகி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது” என்றார். இங்கு பலியானவர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே ஊல்சி தீ என்று அழைக்கப்படுகிற காட்டுத்தீக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். 
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 44 ஆக உயர்ந்துள்ளது. #CaliforniaFire #CaliforniacampFire
    நியூயார்க்:

    அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.



    அப்பகுதிகள் கடும் புகை மூட்டமாக உள்ளதால் தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. தீயில் வீடுகளை இழந்த பலர் குடும்பம் குடும்பமாக கார்கள் மூலம் தொலைவான இடத்துக்கு சென்று காருக்குள் தூங்கியபடி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படும் நிலையில் கருகிய நிலையில் இன்று 13 பிரேதங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. #CaliforniaFire #CaliforniacampFire  
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. #CaliforniaWildfires
    வாஷிங்டன்: 

    அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகின. 

    தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருவதால் எங்கும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



    இதற்கிடையே, காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
    தீப்பிடித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #CaliforniaWildfires
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. #CaliforniaWildfires
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வறண்ட வானிலை நிலவும் வடக்கு கலிபோர்னியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகிவிட்டன.

    தற்போது மணிக்கு 35 கிமீ வேகத்தில் தீ பரவி வருவதால் எங்கு திரும்பினாலும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. தீப்பிடித்த பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.



    இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 5 பேர் காருக்குள் இறந்து கிடந்தனர். தீப்பிடித்த பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    வடக்கு கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CaliforniaWildfires
    அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். #California #Wildfire
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கேம்ப் கிரீக் என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத்தீயானது கொளுந்து விட்டு எரிகிறது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் சில மணி நேரத்திலேயே (நேற்று முன்தினம் மதியம் வரை) 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி விட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.

    இந்த காட்டுத்தீ திடீரென பரவியதால் பலர் வாகனங்களையெல்லாம் சாலைகளில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.



    தீ பரவி வருகிற பகுதிகளில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அங்கு பாரடைஸ், மகாலியா, கான்கவ், பட்டி கிரீக் கேனியான், பட்டி வேலி பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி சிலர் உயிரிழந்து விட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. தீயை அணைப்பதற்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர்.

    தீ பரவி வருகிற பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நெருக்கடி கால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.  #California #Wildfire 
    கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #CaliforniaBarShooting
    தவுசண்ட் ஓக்ஸ்:

    அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது.
     
    இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.



    தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாருக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாரை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #CaliforniaBarShooting
    எச்1பி விசா மோசடி தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியரை போலீசார் கைது செய்தனர். #H1B

    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.

    இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு போலி ஆவணங்கள் மூலம் எச்1பி விசா பெற்று தந்துள்ளார். மேலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் இருந்தார்.

    இந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். #H1B

    ×