search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க"

    வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    டோக்கியோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார்.

    இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.  இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  
    ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
    மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.#DonaldTrump #Mexicoborder

    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டு ராஸ், கவுதமலா மற்றும் எல்கால் வேடர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர்.

    இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடுகள் நடை பெறுகிறது.

    எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் 3 ஆயிரம் பேர் மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் உள்ள திஜூயானா நகரில் காத்திருக்கின்றனர்.


    இவர்களில் 2,750-க்கும் மேற்பட்டவர்கள் மெக்சிகோவில் தஞ்சம் அடைய மேயர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வரும் வாரங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்வார்கள் என திஜூயானா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

    மெக்சிகோவில் திஜு யானா நகரில் வெளிநாட்டினர் குவிந்து வருவது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம். மேலும் மெக்சிகோவுடன் ஆன வர்த்தகத்தையும் நிறுத்துவோம். மெக்சிகோவில் தயாரிக்கப்படும் கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது’’ என எச்சரிக்கை விடுத்தார். #DonaldTrump #Mexicoborder

    அமெரிக்காவில் பால்டி மோர் நகரில் யூதர்களின் பாரம்பரிய விழாவில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். #Americashot

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பால்டி மோர் நகரில் யூதர்களின் பாரம்பரிய விழா நடை பெற்றது. அதையொட்டி அங்கு இசை நிகழ்ச்சி நடந்தது. அதை ஏராளமானவர்கள் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சர்வாதிகாரி ஹிட்லர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை வாழ்த்தி கோ‌ஷங்கள் எழுப்பினார். அதே நேரத்தில் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

    இதனால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து தப்பி வெளியேற முயன்றனர். பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

    கலிபோர்னியா மது பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பிட்ஸ்பர்க் நகரில் யூதர்களின் இசை நிகழ்ச்சி யில் முன்னாள் கடற்படை வீரர் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். மதவெறி காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது.

    அது போன்று இங்கும் யூதர்களுக்கு எதிரான மத வெறி தாக்குதல் நடைபெறும் என்ற எண்ணத்தில் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

    அங்கு போலீசார் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் டிரம்பை வாழ்த்தி கோ‌ஷமிட்ட நபரை பிடித்து சென்றனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. கூச்சலிட்ட நபரின் பெயரும் வெளியிடப்படவில்லை. #Americashot

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. #CaliforniaWildfires
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வறண்ட வானிலை நிலவும் வடக்கு கலிபோர்னியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகிவிட்டன.

    தற்போது மணிக்கு 35 கிமீ வேகத்தில் தீ பரவி வருவதால் எங்கு திரும்பினாலும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. தீப்பிடித்த பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.



    இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 5 பேர் காருக்குள் இறந்து கிடந்தனர். தீப்பிடித்த பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    வடக்கு கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CaliforniaWildfires
    எச்1பி விசா மோசடி தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியரை போலீசார் கைது செய்தனர். #H1B

    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.

    இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு போலி ஆவணங்கள் மூலம் எச்1பி விசா பெற்று தந்துள்ளார். மேலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் இருந்தார்.

    இந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். #H1B

    அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி காதல் விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுப்பியதற்கு ஹிலாரி அதிரடியாக பதில் அளித்துள்ளார். #BillClinton #Hillary

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். இவர் பதவி வகித்த போது அதாவது 1998-ம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மோனிகா லெவின்ஸ்கி-பில் கிளிண்டன் காதல் விவகாரம் சூடுபிடித்தது. அப்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதை தொடர்ந்து பில் கிளிண்டனை அதிபர் பதவியில் இருந்து நீக்க வகை செய்யும் தீர்மானத்தை எதிர்கட்சியாக இருந்த குடியரசு கட்சி கொண்டு வந்தது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது.

    தற்போது ‘மீ டூ’ விவகாரம் சர்வதேச அளவில் சூடுபிடித்துள்ள நிலையில் கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ் கியின் காதல் விவரம் குறித்த பிரச்சினை 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிளம்பியுள்ளது.

     


    நியூயார்க்கை சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டர் கிர்ஸ்டன் கில்பிராண்டு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘செக்ஸ்’ பிரச்சினையில் சிக்கிய கிளிண்டன் அப்போதே தனது பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோனிகா லெவின்ஸ்கியுடன் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டினார்.

    அதற்கு கிளிண்டனின் மனைவியும், அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் பதில் அளித்து இருக்கிறார். ‘‘பில் கிளிண்டன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. அதை என்னால் நிச்சயமாக கூற முடியும். இப்பிரச்சினையின் போது மோனிகா லெவின்ஸ்கிக்கு 22 வயது. அவர் ‘மேஜர்’ ஆக இருந்தார். அவரது விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் அவர் மீது காதல் வயப்பட்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.  #BillClinton #Hillary

    ×