search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullying"

    • சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
    • இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.

    மேட்டூர்:

    மேட்டூரை அடுத்த காவிரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

    அந்த புகாரின்மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.

    மேலும் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் விரைந்து வந்து சிவகுமாரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு அவர் மறுத்ததால் மேட்டூர் தீயணைப்பு படையினரை வரவழைத்து கீழே இறங்க செய்தனர்.

    இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிவகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் பெண் போலீஸ் மீது வழக்கு
    • இரு குடும்பத்தினரிடையே ஏற்கனவே குடும்பதகராறு இருந்து வந்துள்ளது

    ராம்ஜிநகர்,

    திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது 40). இவர் 58-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார். இவரது மனைவி தேவிகா (39). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் குழந்தைவேல். இவரது மனைவி அன்பு மலர். இவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.இந்த இரண்டு குடும்பத்திற்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைவேல், கிருஷ்ணராவ் வீட்டு படுக்கையறையை நோட்டமிடும்படி தனது வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்தினாராம். தொடர்ந்து கிருஷ்ணராவின் காம்பவுண்ட் சுவரை குழந்தைவேல் இடித்து இருக்கிறார். இதனை பார்த்த கிருஷ்ணராவும், தேவிகாவும் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குழந்தைவேல் - அன்பு மலர் தம்பதி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தேவிகா மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் குழந்தைவேல் மற்றும் இவரது மனைவி அன்பு மலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

    • பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூர் பகுதியில் செம்மண் குவாரிக்கு லை அமைப்பதற்காக தனியார் கம்பெனி ஊழியர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூங்கொடி சம்பந்தப்பட்ட ஊழியரிடம் சென்று கேட்டார். அப்போது பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் தனியார் கம்பெனி மேலாளர் டெல்லி பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
    • கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்

    திருச்சி,

    திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் சுந்தரம். இவரது மனைவி பாத்திமா ரோஸ்லி ராஜு (வயது 72). இவர் திருச்சி யூனியன் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.இவரிடம் திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மளிகை கடையை மேம்படுத்த ரூ. 12 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார். அதன் பிறகு பாத்திமா அந்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் இழுத்தடித்து வந்தார். பின்னர் சமீபத்தில் ஜெய்சங்கர் ரூ 3லட்சத்து 15 ஆயிரம் பணத்தை திரும்பி கொடுத்துவிட்டார். மீதிபணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கடன் தொகையை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் பாத்திமா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து பாத்திமா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில்திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே கொடுக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி நந்தினி (வயது 23). சம்பவத்தன்று நந்தினியை இவரது மாமியார் அஞ்சம்மாள் மற்றும் உறவினர்கள் திடீரென்று வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நந்தினி நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சம்மாள் (55), வாசுகி, திருமகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார்.
    • ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தொட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 28). புவனகிரி சூர்யா மங்களம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (27). இவர்கள் 2 பேரும் கடலூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார். இதனால் சுஜாதா ஜெயக்குமாரிடம் போனில் பேச வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×