search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boAt"

    • அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்துகிறது.
    • புதிய போட் அவான்ட் பார் 520 மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போட் நிறுவனம் அவான்ட் 520 பெயரில் புதிய சவுன்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் ஃபிளாஷ் பிளஸ் மற்றும் ஸ்டார்ம் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய சவன்ட்பார் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 16 வாட் பவர், டூயல் பேசிவ் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 2.0 சேனல் ஸ்டீரியோ சவுன்ட் செட்டப் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சவுன்ட்பார் ப்ளூடூத் 5.0 மூலம் வயர்லெஸ் கனெக்ட் வசதி கொண்டிருக்கிறது.

     

    இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இது அதிநவீன டிசைன் அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. போட் அவான்ட் பார் 520 மாடலை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் ப்ளூடூத், AUX, யு.எஸ்.பி. மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

    புதிய போட் அவான்ட் பார் 520 சவுன்ட்பார் விலை இந்திய சந்தையில் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ரிங் சாதனம் வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட் ரிங் பயனர் உடல்நலன் சார்ந்து பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    போட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹெல்த் மற்றும் பிட்னஸ் டிராக்கர் ஆகும். மெல்லிய டிசைன், செராமிக் மற்றும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் குறைந்த எடை, அதிக சவுகரியம் கொண்டிருக்கிறது.

    பயனர் உடல்நல விவரங்களை மிக துல்லியமாக டிராக் செய்வதற்கு ஏற்ற ஏராளமான அதிநவீன அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய போட் ஸ்மார்ட் ரிங் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா-ஹியுமன் ரிங் ஏர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்:

    அன்றாட உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி

    ஹார்ட் ரேட் மானிட்டரிங்

    பாடி ரிக்கவரி டிராக்கிங்

    டெம்பரேச்சர் மானிட்டரிங்

    SpO2 மானிட்டரிங்

    ஸ்லீப் மானிட்டரிங்

    மென்ஸ்டுரல் டிராக்கர்

    ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்

    போட் ரிங் ஆப் சப்போர்ட்

    புதிய போட் ஸ்மார்ட் ரிங் விரைவில் போட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. 

    • புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன.
    • இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய நுகர்வோர் மின்சாதன பிரான்டு, போட் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் IPX5 சான்று, அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது.

    போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்துடன், சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-இல் ENx தொழில்நுட்பம் உள்ளது. இது அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதற்காக டூயல் மைக்ரோபோன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் ஏர்டோப்ஸ் ஆல்பா, டச் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது. இத்துடன் செமி இன்-இயர் டிசைன் கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

     

    இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திறகு பிளேடைம், பத்து நிமிட சார்ஜிங்கில் இரண்டு மணி நேர பிளேபேக் வசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பீஸ்ட் மோட், லேடன்சியை 50ms வரை குறைக்கும்.

    இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை அறிமுக சலுகையாக ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. விற்பனனை போட், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறும். இந்த இயர்பட்ஸ் டார்க் சியான், ஜெட் பிளாக் மற்றும் ஸ்வீடிஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

    • கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் போலீசார் தொண்டியக்காடு, தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும், முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தமிழ்மாறன், சட்டம் ஒழுங்கு டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆலங்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது ஏ.டி.ஜி.பி வெள்ளத்துரை உடன் இருந்தார்.

    • பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.
    • டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காட்டில் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ராமச்சந்திரன் அலையாத்தி காட்டில் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, முத்துப்பேட்டைக்கு வந்த அமைச்சரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் ஜாம்புவானோடை படகு துறைக்கு வந்து அங்கிருந்து வனத்துறை படகு மூலம் கோரையாறு வழியாக அலையாத்திகாட்டிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் காட்டின் உள்ளே இருக்கும் நடைபாதைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.

    காட்டிலிருந்து திரும்பிய அமைச்சர் படகுத்துறையில் கூடுதல் படகுகள் விடுவது, சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது, கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற வசதிகளை மேற்கொள்வது, டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    ஆய்வின்போது, சுற்றுலா துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, வன அலுவலர் ஸ்ரீகாந்த், செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனா மணி, தாசில்தார் மகேஷ் குமார், வன அலுவலர் ஜனனி, மாவட்ட கவுன்சிலர் அமுதா மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம் மற்றும் வருவாய் துறையினர், வனத்துறையினர் உடன் இருந்தனர்.

    • ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
    • இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் நிர்வானா 525 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய கேமிங் இயர்பட்ஸ் வெளியாகி உள்ளது.

    புதிய போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை போட் நிறுவனத்தின் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த இயர்பட்களில் எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆக்டிவேட் செய்ய டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் 40ms வரையிலான லோ லேடன்சி வசதி BEAST மோடில் வழங்கப்படுகிறது.

    புதிய ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்ஸடன்ட் வேக் அன்ட் பேர் (IWP) அம்சம் உள்ளது. இது மிக விரைவில் ஸ்மார்ட்போன்களுடன் இணைய செய்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

    போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள்:

    10mm டிரைவர்கள்

    எல்இடி லைட்கள்

    கேமிங் சார்ந்த டிசைன்

    ப்ளூடூத் 5.3

    போட் சிக்னேச்சர் சவுன்ட்

    டச் கண்ட்ரோல்

    குவாட் மைக் மற்றும் ENx தொழில்நுட்பம்

    400 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்)

    40 எம்ஏஹெச் பேட்டரி (இயர்பட்ஸ்)

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    யுஎஸ்பி டைப் சி கனெக்டர்

    BEAST மோட் மற்றும் 40ms வரையிலான லோ லேடன்சி

    IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் பிளாக் சாபர் மற்றும் வைட் சாபர் நிறங்களில் கிடைக்கிறது. 

    • போட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 30 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
    • இந்த இயர்போனில் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ ஆப்ஷன்கள் உள்ளது.

    போட் ராக்கர்ஸ் 255 டச் நெக்பேண்ட் மாடலை தொடர்ந்து போட் நிர்வானா 525ANC மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிர்வானா 525ANC மாடலில் டால்பி ஆடியோ சப்போர்ட், ஹைப்ரிட் ANC, 11mm ஹை-ஃபிடிலிட்டி டிரைவர் போன்ற அம்சங்கள் உள்ளன.

    மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் போட் நிர்வானா 525ANC மாடலில் 42db+ வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, நான்கு மைக்ரோபோன்கள், Enx தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ வசதி உள்ளது.

    புதிய போட் நிர்வானா 525ANC மாடலுக்கான செயலி கொண்டு பயனர்கள் டால்பி மூவி, டால்பி நேச்சுரல் போன்ற மோட்களை மாற்றிக் கொள்ள முடியும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இதன் மூலம் அதிகபட்சம் இரண்டு சாதனங்களுடன் ஒரே சமயத்தில் கனெக்ட் ஆகும். இதில் உள்ள 180 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் கிடைக்கிறது. இத்துடன் ASAP சார்ஜிங் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும். இதில் உள்ள குயிக் ஸ்விட்ச் பட்டன் மற்றும் பீஸ்ட் மோட் கொண்டு கேமிங் அனுபவம் மேம்படும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    புதிய போட் நிர்வானா 525ANC மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. புதிய போட் நிர்வானா 525ANC மாடல் செலஸ்டியல் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    • போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்- ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட் லூனார் கனெக்ட் ப்ரோ மாடலின் வரிசையில் புதிய ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலில் 1.91 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. சீம்லெஸ் மற்றும் மெட்டல் டிசைன் கொண்டிருக்கும் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படு இருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த வாட்ச் ஹார்ட் ரேட் மற்றும் உடலின் சுவாச அளவுகளை டிராக் செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் நேரலை கிரிகெட் ஸ்கோர்கள், வானிலை அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதி உள்ளது.

     

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் அம்சங்கள்:

    1.91 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்

    2.5D வளைந்த டிசைன், மெட்டாலிக் ஃபிரேம்

    ப்ளூடூத் 5.3

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    ENx மூலம் இரைச்சல் இல்லா அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி

    100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    உடல்நல டிராகிங் செய்யும் சென்சார்கள்

    IP68 டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    300 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

    ஸ்மார்ட் அலெர்ட்கள்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதிகரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிலாக், கூல் கிரே, டீப் புளூ மற்றும் மரூன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    • இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.
    • மீனவர்கள் உதவியுடன் போலீசார் அந்த நாட்டு படகை மீட்டு வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதில் மீனவர்கள் யாரும் இல்லை.

    இதனை அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவர்கள் உதவியுடன் அந்த நாட்டு படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த படகில் லம்பாடி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவெண் எதுவும் எழுதப்படவில்லை.

    கடற்கரையோர மாவ ட்டத்தில் கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த நாட்டு படகு ஏதேனும் கயிறு அறுந்து காற்றின் வேகத்தால் கடலுக்குள் இழுத்து வரப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படகின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.

    ஆழ்கடல் அழகை ரசிக்க நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தற்போது இதற்கு மாற்றாக செமிசப் மெரின்' என் றழைக்கப்படும் விசைப் படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கலாம்.

    கடலை காணும் வகையில் இரு புறமும் நீர் புகாத கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் செல்லும் போது படகில் கீழடுக்கு 1.4 மீட்டர் அளவில் ஆழ்கடலில் பயணிப்பதால் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் அரிய வகை நீர் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

    இவ்வகை படகுகளில் செல்ல, பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த படகுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம், உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு தயாரித்து வருகிறது. சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் 16 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    இதில், மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்கலாம். ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் செல்லும்போது படகு ஆடாமல் பயணிக்க இருபுறமும் இறக்கை போன்ற அமைப்புடன் படகு கட்டப்பட்டு வருவதால் இதன் பெயர் 'டிரை மரான்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.


    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போட் நியோ வேவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் ப்ரோ மற்றும் போட் வேவ் லைட் மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் போட் அறிமுகம் செய்து இருக்கும் மூன்றாவது வேவ் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். புதிய போட் வேவ் நியோ மாடல் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    போட் வேவ் நியோ மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் ஃபிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது. போட் வேவ் நியோ மாடலில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் அம்சங்கள், ஒரு வார பேட்டரி லைஃப், ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

     போட் வேவ் நியோ

    போட் வேவ் நியோ அம்சங்கள்:

    - 1.69 இன்ச் 454x454 பிக்சல் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே
    - 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
    - ஸ்டிரெஸ் டிராக்கர், அக்செல்லோமீட்டர், ஸ்லீப் டிராக்கர்
    - பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - IP68 சான்று
    - ப்ளூடூத் கனெக்டிவிட்டி
    - 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    புதிய போட் வேவ் நியோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  
    தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மூழ்கிய படகை சீரமைக்க மீனவருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம், குழந்தை தெரசம்மாள் தெருவைச் சேர்ந்த ரஹீம் என்பவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்குள் சென்று சங்கு குளிக்கும் தொழிலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் கடந்த 11-ந் தேதி அவர் தனது நாட்டுப்படகில் திரேஸ்புரத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரோடு 11 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அன்று வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. 

    தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்த போது சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் காரணமாக கடலில் அலையின் வேகம் அதிகரித்தது. 

    இந்த நிலையில் கரை திரும்ப இருந்த நேரத்தில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் ரஹீம் மற்றும் 11 மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்க தொடங்கியது. செய்வதறியாது திகைத்த நிலையில் படகு சிறிது,சிறிதாக கடலுக்குள் மூழ்கியது.படகில் சென்ற மீனவர்கள்  கடலுக்குள் தத்தளித்த நிலையில் சற்று தொலைவில் வேறொரு நாட்டுப் படகில் சென்ற மீனவர்கள் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

     அதன் பின்னர் ஒரு சில நாட்களுக்கு பின் கடலில் மூழ்கிய நாட்டுபடகு விசைப் படகு மற்றும் எந்திரம் மூலமாக மீட்டெடுக்கப்பட்டு திரேஸ்புரம் கடற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.  

    இந்த படகை மட்டுமே நம்பி தொழில் செய்து வந்த ரஹீம் படகில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக மன உளைச்சல் அடைந்தார்.அவருடைய வாழ்வாதாரமாக இருந்த படகை சரி செய்ய பணமின்றி தவித்தார்.

    அவருக்கு எந்த ஒரு அமைப்பு உட்பட யாரும் எந்த உதவியும் அளிக்கவில்லை என்ற நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.1  லட்சம் நிதி உதவி வழங்கி படகை சரி செய்து கொடுத்துள்ளது.

     நிறுவனமும் எந்த ஒரு அமைப்பும் தனக்கு நிதியுதவி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த இந்த நிதி உதவிக்கு சங்குகுளி மீனவர் ரஹீம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர். 

    தூத்துக்குடி மக்களின் துயர்துடைப்பதில் ஸ்டெர்லைட் நிறுவனம் என்றும் துணைநிற்கும் என அந்நிறுவன சமூக செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
    ×