search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படகை சீரமைக்க மீனவருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிய போது எடுத்தபடம்.
    X
    படகை சீரமைக்க மீனவருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிய போது எடுத்தபடம்.

    தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மூழ்கிய படகை சீரமைக்க ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி

    தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மூழ்கிய படகை சீரமைக்க மீனவருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம், குழந்தை தெரசம்மாள் தெருவைச் சேர்ந்த ரஹீம் என்பவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்குள் சென்று சங்கு குளிக்கும் தொழிலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் கடந்த 11-ந் தேதி அவர் தனது நாட்டுப்படகில் திரேஸ்புரத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரோடு 11 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அன்று வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. 

    தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்த போது சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் காரணமாக கடலில் அலையின் வேகம் அதிகரித்தது. 

    இந்த நிலையில் கரை திரும்ப இருந்த நேரத்தில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் ரஹீம் மற்றும் 11 மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்க தொடங்கியது. செய்வதறியாது திகைத்த நிலையில் படகு சிறிது,சிறிதாக கடலுக்குள் மூழ்கியது.படகில் சென்ற மீனவர்கள்  கடலுக்குள் தத்தளித்த நிலையில் சற்று தொலைவில் வேறொரு நாட்டுப் படகில் சென்ற மீனவர்கள் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

     அதன் பின்னர் ஒரு சில நாட்களுக்கு பின் கடலில் மூழ்கிய நாட்டுபடகு விசைப் படகு மற்றும் எந்திரம் மூலமாக மீட்டெடுக்கப்பட்டு திரேஸ்புரம் கடற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.  

    இந்த படகை மட்டுமே நம்பி தொழில் செய்து வந்த ரஹீம் படகில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக மன உளைச்சல் அடைந்தார்.அவருடைய வாழ்வாதாரமாக இருந்த படகை சரி செய்ய பணமின்றி தவித்தார்.

    அவருக்கு எந்த ஒரு அமைப்பு உட்பட யாரும் எந்த உதவியும் அளிக்கவில்லை என்ற நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.1  லட்சம் நிதி உதவி வழங்கி படகை சரி செய்து கொடுத்துள்ளது.

     நிறுவனமும் எந்த ஒரு அமைப்பும் தனக்கு நிதியுதவி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த இந்த நிதி உதவிக்கு சங்குகுளி மீனவர் ரஹீம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர். 

    தூத்துக்குடி மக்களின் துயர்துடைப்பதில் ஸ்டெர்லைட் நிறுவனம் என்றும் துணைநிற்கும் என அந்நிறுவன சமூக செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×