search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhuvneshwar Kumar"

    சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. #AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி  சாதனைப் படைத்தது. இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. துவக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், 6 ரன்கள் எடுத்த நிலையிலும், கேரே 24 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர்.



    அதன்பின்னர் மார்ஸ்-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர்.



    கவாஜா 81 பந்துகளில் 59 ரன்கள் (6 பவுண்டரி) அடித்து ஜடேஜா ஓவரில் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார். மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினர். அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டாயின்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.



    ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்கள் (6 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து வெளியேறினார். ஸ்டாயின்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 43 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தும், மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர். முகமது சமி, கலீல் அகமது விக்கெட் கிடைக்கவில்லை.

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.#AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. #AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி பெற்று சாதனைப் படைத்தது. இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.

    இதில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. துவக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், கேரே களமிறங்கினர். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் நூறாவது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றி உள்ளார். அதன்பின்னர் கேரே-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடியது.

    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாயின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெரண்டார்ப்,

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, கலீல் அகமது. #AUSvIND #bhuvneshwarkumar
    இங்கிலாந்து தொடரில் ஆல்வுண்டரின் பங்களிப்பை இந்திய அணி தவறவிட்டு விட்டது என்று முன்னாள் வீரர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 1-3 இழந்தது.

    இந்நிலையில் ஆல்ரவுண்டரின் பங்களிப்பை இந்தியா தவற விட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து எல் சிவராம கிருஷ்ணன் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணி நிர்வாகம் புவனேஸ்வர் குமாரை பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருந்திருப்பார்.



    இந்தியா தொடரை இழப்பதற்கு ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவை விட புவனேஸ்வர் குமார் அதிக ரன்கள் அடித்திருப்பார். அதேபோல்தான் சகா. இவர் அதிக அளவில் ‘பைஸ்’ ரன்கள் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். அதேபோல் அதிக ரன்களும் குவித்திருப்பார். இருவரும் இடம் பிடித்திருந்தால் இந்தியாவை அதிக அளவில் பாதித்திருக்காது’’ என்றார்.
    புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று சச்சின் தெண்டுல்கர் கவலை தெரிவித்துள்ளார். #ENGvIND #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு, முக்கியமாக ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்துக்கு ஏதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

    விரைவில் காயம் குணமடைந்து அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புவனேஸ்வர் காயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘புவனேஸ்வர் குமார் காயம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. நான் அவரிடம் அதிக அளவிலான ஆட்டத்தை எதிர்பார்த்தேன். அவரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் அவருடைய ஸ்விங் திறமை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.

    புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள ரன்களையும் மறந்து விடக்கூடாது. கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த வகையில் பார்ட்னர்ஷிப் கொடுக்கக்கூடியவர். இருந்தாலும் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்தியா அணியில் ‘ஸ்விங் மன்னன்’ புவனேஸ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. #ENGvIND #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து தொடரின்போது வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாக இருப்பார் என்று கருதப்பட்ட ‘ஸ்விங் கிங்’ புவனேஸ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘‘நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகின் அடிப்பாகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் பிசிசிஐ மெடிக்கல் குழுவால் கவனிக்கப்பட்டு வருகின்றது. இந்திய அணியில் அவருடைய பெயர் விரைவில் இடம்பெறும்’’ என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.



    இன்னும் 13 நாட்கள் உள்ளதால் புவனேஸ்வர் குமார் முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது. அதேவேளையில் பும்ரா காயத்தில் இருந்து மீண்டால் 2-வது டெஸ்டில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் முழுமையானது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #ENGvIND
    கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டே மிகவும் முழுமையானது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘தற்போதுள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் இங்கிலாந்து தொடருக்கான மிகவும் முழுமையானது. என்னுடைய மதிப்பீட்டின்படி, இந்த யூனிட்டின் தாக்குதல் மிகவும் சிறந்ததாக இருக்கும். ஸ்விங் பவுலரான புவனேஸ்வர் குமார். மிகவும் உயரம் கொண்ட இசாந்த் சர்மா, பந்தை தரையில் பலமாக தாக்கும் பும்ரா, மிகவும் திறமை வாய்ந்த வேகமாக வீசும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நம் பெற்றுள்ளோம். பல்வேறு தரப்பட்ட பந்து வீச்சை கொண்டு சிறந்த காம்பினேசன்.



    தற்போதுள்ள இந்திய அணி தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பெரும்பாலான நேரத்தில் அதிக அளவில் பேட்டிங் செய்கிறார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் தற்போது அதிக அளவில் ரன்கள் அடிக்க உதவியாக இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஐந்தாறு ஓவர்கள் வீசுவது பெரிய விஷயம் அல்ல. முக்கியமான நேரத்தில் பந்து வீச்சாளர்கள் ரன்கள் அடிப்பது அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.
    ×