search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1st ODI"

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார்.

    வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது:

    அணி நிர்வாகம் முதலில் பந்து வீசி பெரிய இலக்கை பின்னால் துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மோசமாக மாறியது.

    வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே ஆடுகளம் சாதகமாகதான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் சுருட்டுவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தோம்.

    114 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது என்பது எங்களுடைய பந்துவீச்சாளர்களின் சிறப்பாக செயல்பாட்டை காட்டியது. உலக கோப்பை தொடருக்கு முன்பு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என நினைத்தோம்.

    நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன். அதன் பிறகு இப்போதுதான் அந்த இடத்தில் விளையாடினேன்.

    முகேஷ் குமார் முதல் போட்டியில் நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 19 ரன்னிலும், பாண்ட்யா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 46 பந்தில் ஒரு சிக்சர், 7 பவுண்டரி உள்பட அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 16 ரன்னும், ரோகித் சர்மா 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடக்கிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கியதௌ. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியின் ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
    • கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கான டான் போடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக பிரான்டன் கிங் மற்றும் கெயில் மேயர்ஸ் களமிறங்கினர். இதில், கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அலிக் அத்தனாஸ் விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் டோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். #AUSvIND #Dhoni
    இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, நிர்யணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

    அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி இருவரும் நிதானமாக விளையாடினர். டோனி இந்த போட்டியில் முதல் ரன்னை எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

    ஒருநாள் போட்டிகளில் மொத்த ரன்கள் அடிப்படையில், சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். கங்குலி 11,221 ரன்களும், டிராவிட் 10,768 ரன்களும், விராட் கோலி 10,232 ரன்களும் எடுத்துள்ளனர். #AUSvIND #Dhoni
    சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. #AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி  சாதனைப் படைத்தது. இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. துவக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், 6 ரன்கள் எடுத்த நிலையிலும், கேரே 24 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர்.



    அதன்பின்னர் மார்ஸ்-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர்.



    கவாஜா 81 பந்துகளில் 59 ரன்கள் (6 பவுண்டரி) அடித்து ஜடேஜா ஓவரில் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார். மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினர். அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டாயின்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.



    ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்கள் (6 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து வெளியேறினார். ஸ்டாயின்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 43 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தும், மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர். முகமது சமி, கலீல் அகமது விக்கெட் கிடைக்கவில்லை.

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.#AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. #AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி பெற்று சாதனைப் படைத்தது. இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.

    இதில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. துவக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், கேரே களமிறங்கினர். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் நூறாவது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றி உள்ளார். அதன்பின்னர் கேரே-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடியது.

    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாயின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெரண்டார்ப்,

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, கலீல் அகமது. #AUSvIND #bhuvneshwarkumar
    ×