search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyakannu"

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த அய்யாக்கண்ணுவை கைது செய்வதா என்று சட்டசபையில் இன்று துரைமுருகன் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது:-

    சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு அவர் இருக்கும் போது பல்வேறு தரப்பு மக்களும் பார்க்க வருவார்கள்.

    பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது உதவி பெற அவரை பார்ப்பார்கள். மனு கொடுப்பார்கள். இது வழக்கமாக எல்லா கட்சியிலும் நடக்கும்.

    விவசாய சங்கத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு இன்று எதிர்க்கட்சி தலைவரை பார்க்க அனுமதி கேட்டு இருந்தார். அவரை 12 மணிக்கு வருமாறு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி அய்யாக்கண்ணு பார்க்க வந்தார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை வழியிலேயே மடக்கி பிடித்து பார்க்கவிடாமல் வட பழனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விட்டனர். இது நியாயம்தானா? இதை முதல்-அமைச்சரின் கவனத்துக்காக சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உதவியாளரை அழைத்து ஏதோ கூறினார். அதற்கு துரை முருகன் சிரித்தபடியே தலையாட்டினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
    திருவண்ணாமலை:

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும், நதிநீர் இணைப்பை அமைக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் தமிழகத்தில் 100 நாள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று அய்யாக்கண்ணு திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு ரூ.16.50 அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் நெல்லுக்கு விலை குறைத்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் நெல் விற்பனை செய்ய 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கமிஷன் கேட்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு, நஷ்ட ஈடு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றையும், செய்யாற்றையும் இணைத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

    கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவு பொருட்களை மக்களுக்கு கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டவும், ஏரி, குளம், வரத்து கால்வாய்கள் அமைக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்.

    விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். இன்னும் 21 நாட்களில் சென்னை செல்ல உள்ளோம். பின்னர் முதல்- அமைச்சரை சந்திக்க உள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை அங்கேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதில் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வந்தவாசியில் மரபணு மாற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாகண்ணுவிடம் பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    வந்தவாசி:

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பிரசாரம் சென்னை கோட்டையில் நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

    செய்யாறில் பிரசாரம் செய்த அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    இயற்கை விவசாயத்தை அழித்து கார்பரேட் நிறுவனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விற்று வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் மக்களின் அழிவு நிலை நீடிக்கும். செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து, வந்தவாசி பழைய பஸ் நிலையம், பஜார் தெரு, காஞ்சிபுரம் சாலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர். தேரடி வீதியில் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.க. நகரத் தலைவர் குருலிங்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை உள்ளிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசை கண்டித்து நீங்கள் எப்படி துண்டு பிரசுரம் வழங்கலாம் என்று கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர் பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் தொடர்ந்து அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

    கடந்த 14-ந் தேதி வேலூர் வந்த அய்யாக்கண்ணு பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் மோடி குறித்து விமர்சிக்க கூடாது என்று அய்யாக்கண்ணுக்கு எச்சரிக்கை விடுத்து தாக்க முயன்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரிலும் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக்கண்ணுவை தாக்கினார். அய்யாக்கண்ணு மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் விவசாய அமைப்பிகளுடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    ×