search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP volunteers"

    குமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி தரிசனம் செய்யச் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் அவமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள அரசை கண்டித்து நேற்று குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் 12 அரசு பஸ்கள் மற்றும் ஒரு கல்லூரி பஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்களில் பம்மம் சிறிய காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (26), ராஜேஷ் (38) ஆகிய ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மார்த்தாண்டம் பம்மம், உண்ணாமலைக்கடை பகுதியில் பஸ்களை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரும் பா.ஜனதா பிரமுகர்கள் ஆவர். அவர்களை போலீசார் குழித்துறை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கல் வீச்சு தொடர்பாக மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பஸ் உடைக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    வந்தவாசியில் மரபணு மாற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாகண்ணுவிடம் பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    வந்தவாசி:

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பிரசாரம் சென்னை கோட்டையில் நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

    செய்யாறில் பிரசாரம் செய்த அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    இயற்கை விவசாயத்தை அழித்து கார்பரேட் நிறுவனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விற்று வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் மக்களின் அழிவு நிலை நீடிக்கும். செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து, வந்தவாசி பழைய பஸ் நிலையம், பஜார் தெரு, காஞ்சிபுரம் சாலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர். தேரடி வீதியில் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.க. நகரத் தலைவர் குருலிங்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை உள்ளிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசை கண்டித்து நீங்கள் எப்படி துண்டு பிரசுரம் வழங்கலாம் என்று கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர் பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் தொடர்ந்து அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

    கடந்த 14-ந் தேதி வேலூர் வந்த அய்யாக்கண்ணு பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் மோடி குறித்து விமர்சிக்க கூடாது என்று அய்யாக்கண்ணுக்கு எச்சரிக்கை விடுத்து தாக்க முயன்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரிலும் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக்கண்ணுவை தாக்கினார். அய்யாக்கண்ணு மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் விவசாய அமைப்பிகளுடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    ×