என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "App"
- ராமநாதபுரம் அருகே மகளிர் குழுவினருக்கு மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.
- மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குதரவை ஊராட்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தலைமையில் நடந்தது.
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுயதொழில் தொடங்கு வதற்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
மகளிர்கள் மிளகாய்பொடி மற்றும் சமையல் பயன்பாட்டிற்கான பல்வேறு வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் பணியை தொடங்கி உள்ளது மகிழ்ச்சி தக்க ஒன்றாகும்.
மகளிர் குழு உறுப்பினர்கள் முழுமையாக கவனம் செலுத்தி தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதுடன் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்படும் பொழுது உற்பத்தி திறன் அதிகரிப்பதால் வருமானம் அதிகரிக்கும்.
இதன் மூலம் குழு உறுப்பினர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதால் வங்கியில் பெற்ற கடனை எளிதாக திருப்பி செலுத்துவதுடன் மகளிர் குழுவிற்கும் நிலையான வருவாய் கிடைக்கும். அதேபோல் வங்கியில் கடனை சரியான காலத்திற்குள் செலுத்துவதன் மூலம் மேலும் கடன் உதவிகளை வழங்க வங்கி தயாராக இருக்கும்.
எனவே இந்த பகுதியில் ஆரம்பித்துள்ள மகளிர் குழுவினர் தயாரிக்கும் பொருளை பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதுடன், வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு மற்ற மகளிர் குழுக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
2.19.9 Android update is available now.https://t.co/TzvR1dJz9y
— WABetaInfo (@WABetaInfo) January 15, 2019
It fixes the GIF bug and the group call button is now enabled (it was not available in versions downloaded from the official website). https://t.co/R910Ws8RbZ
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்