search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anemia"

    • ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • செப்டம்பர் மாதம் முழுவதும் ‘போஷன் மா” - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதம் முழுவதும் 'போஷன் மா" - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து ''போஷன் மா-2022'' நிகழ்வு மற்றும் ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு இயக்கம் தொடர்பான பிரசார வாகனத்தை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 3 மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், ரத்தசோகை விழிப்புணர்வுகள் குறித்த நாடகங்கள், பொம்மலாட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    பொது மக்கள் இந்த இயக்கத்தின் வாயிலாக ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு அடைந்து, சத்தான மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ஆய்வில் ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகவும், உணவுகளை வீணாக்குவது 21 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைந்தது தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் மக்கள் தொகை, இனப்பெருக்கம், குழந்தைகள் நலம், குடும்ப நலன்கள், ஊட்டச்சத்து மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகளை மத்திய குடும்ப நல அமைச்சகம் எடுத்து வருகிறது.

    சமீபத்தில் அருணாசல பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    இந்த ஆய்வில் ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகவும், உணவுகளை வீணாக்குவது 21 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைந்தது தெரிய வந்துள்ளது.

    குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 36-ல் இருந்து 32 சதவீதமாக குறைந்துள்ளது. 14 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உள்பட பெண்கள், குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு 180 நாட்களுக்கு மேலாக இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்ட போதும், இந்த பாதிப்பு குறையவில்லை. இந்திய அளவில் இது பாதியாகும்.

    மருத்துவமனையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆபரே‌ஷன் மூலம் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குடும்ப நல அறுவை சிகிச்சைகள் 13 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளன.

    அனைத்து மாநிலங்களிலும் 12 முதல் 23 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 62 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஒடிசாவில் மட்டும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை 90 சதவீதம் பெற்றுள்ளனர்.

    குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதற்கு மத்திய அரசு ‘இந்திர தனுஷ் மி‌ஷன் திட்டம்’ தொடங்கப்பட்டது முக்கிய காரணம் ஆகும். மேற்கண்ட தகவல்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இதையும் படியுங்கள்...பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை- பள்ளி ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்

    இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.
    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 51 சதவிகிதம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதில் இருந்து 49 வயது வரை (மாதவிடாய் தொடங்கும் பருவகாலத்தில் இருந்து மெனோபாஸ் கால கட்டம் வரை) இந்தப்பிரச்னை பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

    சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் இரத்தசோகை. இந்த இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    சோர்வு, தோல் வெளுத்துப்போதல், மூச்சு வாங்குதல், இதய படபடப்பு, மயக்கம், தலைவலி, நெஞ்சு வலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்.இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது இரத்த சோகைப் பிரச்னையும் அதிகமாகி விடுகிறது.

    இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இரும்புச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை தான் உலகத்தில் அதிகபட்ச இரத்த சோகைக்கான காரணமாக இருக்கிறது. தேவையான அளவு இரும்புச்சத்து இல்லையென்றால் இரத்த சிவப்பணுக்களுக்கான ஹீமோகுளோபினை எலும்பு மஜ்ஜையால் உருவாக்க முடியாது.ஊட்டச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. குடல் பிரச்னைகள்- இரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகள்.

    மாதவிடாய் - இரத்த போக்கை ஏற்படுத் தும் மாதவிடாயானது பெண்களுக்கு ஆண்களை விட இரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலம்- கர்ப்ப காலங்களில் இரு உயிருக்கு தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாத போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் இரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத போது இரத்தசோகைக்கான ரிஸ்க் அதிகரிக்கிறது. நாட்பட்ட நோய்களினால் ஏற்படும் இரத்தசோகை- கேன்சர், சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களின் காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது.

    நாட்பட்ட நோய்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் ஹீமோகுளோபின் உருவாவது தடைபடுவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்- லுகோமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். தேவையான அளவு இரத்த சிவப்பணுக்கள் உருவாகாதது.இரத்த சிவப்பணுக்கள் விரைவில் அழிந்து போதல் - இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும் போது இரத்த சோகை பிரச்னை ஏற்படும். இதனை ஹீமோலிடிக் அனீமியா என்பார்கள். மரபு வழியாக ஏற்படும் சில இரத்த நோய்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.
    இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

    இந்தியில் ‘ராஜ்மா’ என்று அழைப்பதையே, இப்போது நாமும் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ்.  

    சத்து விவரம் (100 கிராம் அளவில்) :

    புரதம்    22.9 கிராம்
    கொழுப்பு    1.3 கிராம்
    தாதுக்கள்     3.2 கிராம்
    நார்ச்சத்து    4.8 கிராம்
    மாவுப் பொருள்    60.6 கிராம்
    சக்தி    346  கி.கலோரிகள்
    கால்சியம்    260 மில்லிகிராம்
    பாஸ்பரஸ்    410 மி.கி.
    இரும்புச்சத்து    5.1 மி.கி.

    இதில் சோடியமும் பொட்டாசியமும் அறவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள புரதத்தில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன.அதனால் முழுப் புரதம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    இதில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும்நிலையைத் தடுக்க அடிக்கடி உபயோகிக்கலாம்.

    ரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். உலர்ந்த சுண்டல் வகைகளைப் போலவே, இதில் உள்ள நார்ச்சத்து பலவிதமாகவும் நமக்கு நன்மை புரியும். மலச்சிக்கலைத் தடுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும். நீரிழிவு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் என்று எல்லோரும் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
    பெண்கள் இரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம்.
    இந்தியாவில் சுமார் 70 சதவீதம் பேருக்கு ரத்தசோகை குறைபாடு உள்ளது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தசோகை ‘அனீமியா‘ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரத்தசோகை குறைபாடுகளுக்கு ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மாதவிலக்கு போன்ற காரணங்களால் அவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு.

    பொதுவாக ரத்தசோகை பிரசவத்தை சிக்கலாக்கி உயிருக்கே கூட ஆபத்தை விளைவித்து விடுகிறது. இத்தகைய ரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் திவ்யா கூறியதாவது:-

    ரத்தசோகை

    ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதே ரத்தசோகை எனப்படும். ரத்தத்தின் சிவப்பணுக்குள் இருக்கும் புரதம் தான் ஹீமோகுளோபின் ஆகும். இந்த ஹீமோகுளோபினில் இரும்புச்சத்து இருக்கும். இத்தகைய சிவப்பணுக்கள் தான் ரத்தத்தில் பிராணவாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. பொதுவாக சிவப்பணுக்கள் 110 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும். அதன்பிறகு அது சிதைந்து விடும். ரத்தசோகை என்பது பெண்களை பொறுத்தவரை ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.

    பெண் குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகள் இன்றி அவர்கள் வளர்கின்றனர் என்பதே அதற்கு காரணம் ஆகும். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது தேவையான அளவுக்கு சக்தி இல்லாமல் போகிறது. அதனால் உடல் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது. அதுமட்டுமின்றி வயதுக்கு வந்தவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

    அறிகுறிகள்

    இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் ரத்தசோகையால், சோர்வு உண்டாகும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கால் எலும்புகள் பலமிழக்கும். அப்போது பித்தம் அதிகரிப்பதால் ரத்தம் சீர்கெடும். இதனால் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி வரும். இதுதவிர கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் உண்டாகும்.

    சிறிது உணவு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததை போன்ற உணர்வு, செரிமானமின்மை, உடல் வெளுத்து போகுதல், கை, கால்களில் நகம் உடைந்து போகுதல், வீக்கம், முடி கொட்டுதல், வாயின் ஓரத்தில் புண் உண்டாகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதுதவிர முகவீக்கம், கண், நாக்கு வெளுத்து காணப்படுதல், மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாக அல்லது தாறுமாறாக துடிப்பது, குளிர்ச்சியான சூழலை தாங்க முடியாத நிலை, நாக்கு உலர்ந்து போவதால் சுவையுணர்வு பாதிக்கப்படுவது, அதிகம் வியர்ப்பது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.

    காரணங்கள்

    பெண்கள் கர்ப்பம் ஆகுவதற்கு முன்பு அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், பிரசவத்தின் போது இரும்புச்சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ரத்தசோகை அதிகமாக ஏற்படும். இளவயதில் திருமணம் ஆவதால் இந்த குறைபாடு வர வாய்ப்புள்ளது. இதுதவிர வலுவற்ற அல்லது பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்தசோகை உண்டாகும்.

    வயிற்றில் உண்டாகும் புண், கட்டி, வீக்கம், புற்றுநோய் இவற்றால் உள்ளே ஏற்படும் ரத்தகசிவாலும் ரத்தசோகை ஏற்படலாம். இதுதவிர ஒரு சில நோய்கள் காரணமாக சீக்கிரமாக சிவப்பணுக்கள் சிதைவதாலும், அப்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாலும் உண்டாகலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நோய் தொற்றுகளை போக்கும் சில மருந்துகள், நச்சு பொருட்களாலும் ரத்தசோகை உண்டாகும். இதுதவிர இன்னும் சில காரணங்கள் உள்ளன.



    பிரசவத்தின் போது...

    கர்ப்ப காலத்தில் பெண்களின் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 10.5 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. அதற்காக 5 அல்லது 6-வது மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதும், அதிக ரத்தசோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றிக்கொள்வதும் நல்லது. அதேபோல் 7 அல்லது 8-வது மாதத்தில் ரத்த ஊசி போட்டுக்கொள்வதும், 8 அல்லது 9-வது மாதத்தில் ரத்தம் ஏற்றிக்கொள்வது பிரசவத்தை சிக்கலின்றி எளிதாக்கும்.

    பொதுவாக பிரசவத்தின்போது ரத்தப்போக்கு 500 மில்லி லிட்டர் வரை இருக்கலாம். அதுவே அறுவை சிகிச்சை என்றால் 1 லிட்டர் வரையிலும் ரத்தப்போக்கு இருக்கலாம். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அதனை அவர்களால் தாங்கி கொள்ள இயலாது. மேலும் 5 அல்லது 6 குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

    இரும்புச்சத்து மாத்திரை

    குடலில் இருக்கும் நாக்கு பூச்சிகள் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ளும். அதனால் சத்து குறைபாடு உண்டாகும். இதனை தவிர்ப்பதற்காக பூச்சி மாத்திரை சாப்பிட வேண்டும். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், அதாவது 11 முதல் 12 வயதில் உள்ளவர்களுக்கும், ஒரு சிலருக்கு 20 வயது வரை கூட ரத்தப்போக்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் அவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

    பொதுவாக ஆண்களுக்கு ரத்தத்தில் 15 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 கிராம் என்ற அளவிலும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை இருப்பது நல்லது. இது ஆரோக்கியமான வாழ்வை தரும். சாதாரணமாக ரத்த பரிசோதனையிலேயே ரத்தசோகையை கண்டுபிடித்து விடலாம்.

    உணவு முறைகள்


    இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது எப்போதும் நல்லது. கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், உலர் திராட்சை, அத்திப்பழம், பலாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தியடைந்து ரத்தசோகை நீங்கும். முளை கட்டிய பயறு, முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், உளுந்தங்களி சாப்பிடுவதும் நன்மை தரும்.

    ரத்தசோகை ஏற்பட்டால் வைட்டமின்-12 குறைபாடும் உண்டாகும். அது நரம்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். பொதுவாக ரத்தசோகையில், சாதாரணமானவை, தீவிரமானவை உள்பட பல வகைகள் உண்டு. ரத்தசோகை என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பநிலையிலேயே ரத்தசோகையை கண்டறிந்து விட்டால் எளிதில் அதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.

    * முதல் கட்டமாகக் குழந்தையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.
    * குறைப்பிரசவம் நிகழலாம்.
    * கர்ப்பத்தில் சிக்கல் வரலாம்.
    * குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறந்த பிறகும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
    * பிறந்த குழந்தைக்கும் ரத்தசோகை தாக்கலாம்.

    பிரசவத்தின் போதும் பெண்ணுக்குப் பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் அதன் பிறகும் ரத்த சோகைக்கு வாய்ப்புகள் அதிகம். அரிதாக பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கவும் நேரலாம். எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கும் நாட்களிலிருந்தே ரத்தசோகை அண்டாமலிருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

    என்ன செய்ய வேண்டும்?

    கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர் சொல்கிற பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதில் ஹமோகுளோபின் பரிசோதனையை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. பரிசோதனையில் தெரிய வரும் அளவுகளை வைத்து மருத்துவர் கர்ப்பிணிக்கான சப்ளிமென்ட்டுகளைப் பரிந்துரைப்பார். கால்சியம் சப்ளிமென்ட்டும் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும்போது அது பற்றி மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.

    கர்ப்ப கால ரத்த சோகையை வெறும் சப்ளிமென்ட்டுகளால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரைகள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.

    மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகக் காரணமான ஹீமோகுளோபினின் மிக முக்கிய உட்பொருள் இது. இரத்த சிவப்பு அணுக்கள்தான் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்பவை. வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.

    கர்ப்பமடைகிறபோது பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் குறையும். குழந்தையின் வளர்ச்சிக்கான வேலைகளை உடல் பார்ப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கலாம்.



    கர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அது உணவு மற்றும் மாத்திரைகளின் மூலம் ஈடுகட்டப்படாதபோது இரத்தசோகை வருகிறது. வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே இரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.

    இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும். இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட்டுகளை கால்சியம் சப்ளிமென்ட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதில் பிரச்சனையை ஏற்படுத்தி இரத்த சோகைக்குக் காரணமாகும்.

    பொதுவாகவே பெண்களிடம் இரத்தசோகை பிரச்சனை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள். மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. இரத்தத்தை இழக்கிறார்கள். இரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு இரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இரத்த சோகை பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.
    கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது.
    கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

    இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப்பட்டியலில் இடம் பிடித்தவை..

    கீரையில் அப்படி என்ன இருக்கிறது…

    * கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.

    * கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

    * இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

    * கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

    இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்…

    * பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.

    * பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.



    * 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.

    * கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

    * பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.

    * கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.

    * கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.

    * கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.

    * கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    * கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.

    * நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!
    ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம்.
    இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம். ரத்தச்சோகை உடலிலிருக்கும் ஹீமோகுளோபின் அளவைக்கொண்டுதான் கண்டறியப்படுகிறது.

    சராசரி அளவுகள்...

    ஆண்களில் 13.5 to 17.5 கி/டெ.லி (g/dl)
    பெண்களில் 12 to 16 கி/டெ.லி (g/dl)

    ஆண்களுக்கு 13.5 கி/டெ.லி-க்குக் கீழேயும், பெண்களுக்கு 12 கி/டெ.லி-க்குக் கீழேயும் இருந்தால் அதை ரத்தச்சோகை என்று சொல்லலாம்.

    ரத்தச்சோகை அறிகுறிகள்...

    * மூச்சுவாங்குதல்
    * இதயத்துடிப்பு அதிகரித்தல்
    * நெஞ்சு படபடப்பு
    * அடிக்கடி மயக்கம் ஏற்படுவது
    * அடிக்கடி தலைவலி
    * சருமம் மற்றும் வாயின் உட்பகுதி வெளுத்துப்போதல்

    ரத்தச்சோகைக்கான காரணங்கள்

    * இரும்புச்சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்வது
    * வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் குறைபாடு
    * அடிபடுதல் போன்றவற்றால் ரத்தம் அதிகமாக வீணாவது
    * மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு
    * கர்ப்பம் காலத்திலும் பதின்பருவத்திலும் பெண்களுக்கு ரத்தத்தின் தேவை அதிகரிப்பது
    * குழந்தை பிறக்கும்போது ரத்தம் அதிகமாக வீணாவது
    * வயிற்றில் புழுக்கள் இருப்பது.

    ரத்தச்சோகை போக்க என்ன செய்யலாம்?

    ரத்தச்சோகை மிகவும் குறைவாக (ஹீமோகுளோபின் 10 கி/டெ.லி-க்கு மேல்) இருக்கும்போது வீட்டிலேயே சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். அதற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மாத்திரைகள் மூலமாகவோ அல்லது ஊசியின் மூலமாகவே இரும்புச்சத்து உடலுக்குள் செலுத்தப்படும். ரத்தச்சோகை மிகவும் தீவிரமாகவும், ஹீமோகுளோபின் மிகவும் குறைவாகவும் இருப்பவர்களுக்கு ரத்தத்தை ஏற்றவேண்டியிருக்கும்.

     இரும்புச்சத்து அதிகமிருக்கும் உணவுகள்

    இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். அப்போது இரும்புச்சத்தை ஹீமோகுளோபினாக மாற்றுவதற்கு உடல் முயலும். இது சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். 
    இரத்த சோகை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே இரத்த சோகையின் குணங்கள். இவை எல்லாமே இரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.

    சேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.

    எள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை. கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம். கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.

    தவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.
    ×