search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Physical Problem"

    ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
    கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு, பெண்களுக்கு எளிதில் அழிக்க முடியாத வடுக்களை விட்டுச்செல்கிறது. அதற்கான ஒரே மருந்து, மீண்டும் கருத்தரித்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதுதான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், கருச்சிதைவு/கருக்கலைப்புக்குப் பின்னர் கருத்தரிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

    “பெண்களின் கரு எதிர்பாராதவிதமாக கலைந்துபோவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் கர்ப்பிணி மட்டுமல்லாமல், அந்தக் கருவுக்குக் காரணமான ஆணுடைய விந்துவின் ஆரோக்கியமும் கருச்சிதைவுக்கு சில சமயம் காரணமாக இருக்கலாம். மற்ற காரணிகள், கரு வளர்ச்சி தொடர்பானவையாக இருக்கலாம். இதில் ‘Anatomical Factors’ என்று சொல்லப்படும், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்ரீதியான பாதிப்புகள், 10-லிருந்து 15 சதவிகித கருச்சிதைவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். அதாவது, கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது, மாதவிடாய்ப் பிரச்னைகள் போன்றவை இதில் அடங்கும்.

    அடுத்தது, ‘Auto-immunal Factors’. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருவளர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாமல், கருச்சிதைவு உண்டாவது. 10-லிருந்து 15 சதவிகிதக் கருச்சிதைவுகளுக்கு இந்த ‘ஆட்டோ இம்யூனல் ஃபேக்டர்ஸ்’ காரணமாக இருக்கலாம். தொற்று காரணமாக 0.5-லிருந்து 5 சதவிகிதக் கருச்சிதைவுகள் நேரலாம். ஹார்மோன் சமச்சீரின்மை, தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்டவை 20 சதவிகிதக் கருச்சிதைவுகள் உண்டாகக் காரணமாகலாம். என்றாலும், கிட்டத்தட்ட 50 சதவிகிதக் கருச்சிதைவுகள் காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் இருக்கின்றன.

    பொதுவாக, கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சிக்கலில்லாத பிரசவத்துக்கும், பெண்ணின் வயதுக்கும் நிறைய தொடர்பு உண்டு. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு இயல்பாகவே கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க, கருமுட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொய்வுநிலையை எட்டும். இதனால்தான் 30, 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பு என்பது சற்றே சவாலான விஷயமாகிறது. ஆனால், சரிவிகித, உட்டச்சத்துமிக்க உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால், கருமுட்டையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். லண்டனில் நடந்த ஆய்வு ஒன்று, கருச்சிதைவுக்கும் வயதுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அட்டவணை இங்கே…

    கருச்சிதைவும் கருக்கலைப்பும் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கக்கூடியவை. ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும். சராசரியாக, ஒரு கருச்சிதைவுக்கு அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகே கருத்தரிப்பு நிகழ வேண்டும்.

    ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கணவன் - மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண்களும், கருத்தரிப்புக்குப் பின்னர் கர்ப்பகால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தம்பதியில் இருவரில் ஒருவருக்கு தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்பிணி, உட்சுரப்பியல் பரிசோதனை (Endocrinology Test) செய்துகொள்ள வேண்டும். கருவுக்கு மரபணு தொடர்பான சிக்கல் இருக்கிறதா என்பதை `Karyotyping Test’ மூலம் அறிந்துகொள்ளலாம்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்ணின் மனநிலை நிம்மதியாக இருக்கவேண்டியது அவசியம். எனவே ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளே அவரைச் சூழ்ந்திருக்க வேண்டும்; எதிர்மறையான பேச்சுகளையும் அச்சுறுத்தல்களையும் குடும்பமும் சுற்றமும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
    இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.
    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 51 சதவிகிதம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதில் இருந்து 49 வயது வரை (மாதவிடாய் தொடங்கும் பருவகாலத்தில் இருந்து மெனோபாஸ் கால கட்டம் வரை) இந்தப்பிரச்னை பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

    சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் இரத்தசோகை. இந்த இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    சோர்வு, தோல் வெளுத்துப்போதல், மூச்சு வாங்குதல், இதய படபடப்பு, மயக்கம், தலைவலி, நெஞ்சு வலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்.இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது இரத்த சோகைப் பிரச்னையும் அதிகமாகி விடுகிறது.

    இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இரும்புச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை தான் உலகத்தில் அதிகபட்ச இரத்த சோகைக்கான காரணமாக இருக்கிறது. தேவையான அளவு இரும்புச்சத்து இல்லையென்றால் இரத்த சிவப்பணுக்களுக்கான ஹீமோகுளோபினை எலும்பு மஜ்ஜையால் உருவாக்க முடியாது.ஊட்டச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. குடல் பிரச்னைகள்- இரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகள்.

    மாதவிடாய் - இரத்த போக்கை ஏற்படுத் தும் மாதவிடாயானது பெண்களுக்கு ஆண்களை விட இரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலம்- கர்ப்ப காலங்களில் இரு உயிருக்கு தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாத போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் இரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத போது இரத்தசோகைக்கான ரிஸ்க் அதிகரிக்கிறது. நாட்பட்ட நோய்களினால் ஏற்படும் இரத்தசோகை- கேன்சர், சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களின் காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது.

    நாட்பட்ட நோய்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் ஹீமோகுளோபின் உருவாவது தடைபடுவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்- லுகோமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். தேவையான அளவு இரத்த சிவப்பணுக்கள் உருவாகாதது.இரத்த சிவப்பணுக்கள் விரைவில் அழிந்து போதல் - இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும் போது இரத்த சோகை பிரச்னை ஏற்படும். இதனை ஹீமோலிடிக் அனீமியா என்பார்கள். மரபு வழியாக ஏற்படும் சில இரத்த நோய்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.
    ×