search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த சோகை"

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு.
    • நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.

    பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம். காய்கறி, பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி. வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ரிபோபிளாவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை மிஸ் பண்ண வேண்டாம்.

    பப்பாளியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும். இதில் வைட்டமின் சி, ஏ, இ சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். கண்களுக்கு நல்லது.

    வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

    ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும். பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம். புற்று நோய்க் கிருமிகள் வரக்கூடிய அறிகுறிகள் தெரிந்தாலே பப்பாளி அதை முற்றிலும் அகற்றும்.

    வைட்டமின் கே மற்றும் வைட்டமின்சி சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். சர்க்கரை அளவும் கட்டுப்பாடாக இருக்கும்.

    அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்சமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. பப்பாளி நீர் நிறைந்த பழம் என்பதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

    ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பப்பாளியில் இருக்கிறது. நார்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இதயக் கோளாறுகள் ஏற்படாது. பொட்டாசியம் சத்து அதிகம் உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு தீங்கான சோடியத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உணவு ஜீரண சக்தி சீராகி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

    • முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஓன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகா மினை கலெக்டர் அருண் தம்புராஜ், தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரயை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 7,01,617 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள 2,23,660 பெண்களுக்கு மட்டும் (கர்ப்பிணித்தாய்மார்கள். பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயனடைய உள்ளனர். 1 மற்றும் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்து க்கொள்ள வேண்டும். முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது. குடற்புழு நீக்க மாத்திரை ஒரே நாளில் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படு வதுடன், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த சோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உதவுகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்க ன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று தகவலளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்ப டுகிறது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரம்) டாக்டர் மீரா, மற்றும் மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.
    • மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை.

    ஹீமோகுளோபின் ஆண்களுக்கு நூறு மில்லி ரத்தத்தில் 14-16 மில்லிகிராமும், பெண்களுக்கு 12-14 மில்லிகிராமும் இருந்தால் அது சரியான அளவாகும்.

    ஹீமோகுளோபின் உருவாக கட்டாயம் இரும்பு சத்து தேவை. சிவப்பு அணுக்கள் முதற்கொண்டு ரத்தத்தின் இதர அணுக்கள் உருவாக விட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கட்டாயத் தேவை.

    நமது உடலுக்கு மேற்சொன்ன இரும்புச்சத்து, பி12 விட்டமின், ஃபோலிக் அமிலம் ஆகிய மூன்றையும் உணவு மூலம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    உடல் சோர்வு, உடல் வலி, தலைசுற்றல், புத்தி மங்குதல், படிப்பில் நாட்டம் குறைதல், அடிக்கடி தலைவலி ஏற்படுதல், நாக்கு வெளிரிப்போய் காணப்படுவது போன்றவை ரத்த சோகையின் அறிகுறிகள் ஆகும்.

    இரும்புச்சத்து - கால்நடைகளின் கல்லீரல், சுவரொட்டி உள்ளிட்ட உள்ளுறுப்புகளிலும் மாமிசங்களிலும் அதிகமாக உள்ளது.

    மாமிசம் உண்ணாதவர்களுக்கு சுண்டக்காய், கீரைகள், நொதித்தலுக்குள்ளான பழைய கஞ்சியில் இரும்பு உள்ளது.

    பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.

    மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை. மாறாகக் கிடைத்தாலும் அது நம் உடலால் மிகக்குறைவாகவே கிரகிக்கப்படுகிறது.

    ஃபோலிக் அமிலம் - கீரைகள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், கடலை, பழங்கள், மாமிசம், முட்டை, கல்லீரல், மீன் போன்றவற்றில் நிறைந்துள்ளது.

    மரக்கறி மட்டும் உண்ணும் உணவாளர்களுக்கும் மேற்சொன்ன உணவுகளை மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் இரும்புச்சத்து மற்றும் பி12, பி9 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    இவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனைபேரில் உணவோடு சேர்த்து ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

    ரத்த சோகையுடன் தொடர்ந்து இருப்பது இதயத்துக்கும் இன்னபிற முக்கியமான உள்ளுறுப்புகளுக்கும் பாதகம் விளைவிக்கும். நமது அன்றாட வாழ்வின் தரத்தையும் நமது நுட்பத்திறனையும் பாதிக்கும்.

    எனவே ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு பெற்று எதனால் ரத்த சோகை ஏற்பட்டது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போல உணவையும் மருந்தையும் உட்கொண்டு சரிசெய்ய வேண்டும்.

    - டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது
    • ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சார் நிலா தொடங்கி வைத்தார்.

    ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் ஸ்ரீ ஜெயந்தி நாடக சபா கலைக்குழுவினர் மூலம் கரகாட்டம், நாடகம் மற்றும், பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள் ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பஸ் நிலையத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் மற்றும் பயணிகள் கண்டு களித்தனர்.

    மேலும் ரத்த சோகையை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • செப்டம்பர் மாதம் முழுவதும் ‘போஷன் மா” - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதம் முழுவதும் 'போஷன் மா" - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து ''போஷன் மா-2022'' நிகழ்வு மற்றும் ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு இயக்கம் தொடர்பான பிரசார வாகனத்தை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 3 மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், ரத்தசோகை விழிப்புணர்வுகள் குறித்த நாடகங்கள், பொம்மலாட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    பொது மக்கள் இந்த இயக்கத்தின் வாயிலாக ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு அடைந்து, சத்தான மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×