search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ரத்த சோகைக்கு தீர்வு
    X

    ரத்த சோகைக்கு தீர்வு

    • பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.
    • மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை.

    ஹீமோகுளோபின் ஆண்களுக்கு நூறு மில்லி ரத்தத்தில் 14-16 மில்லிகிராமும், பெண்களுக்கு 12-14 மில்லிகிராமும் இருந்தால் அது சரியான அளவாகும்.

    ஹீமோகுளோபின் உருவாக கட்டாயம் இரும்பு சத்து தேவை. சிவப்பு அணுக்கள் முதற்கொண்டு ரத்தத்தின் இதர அணுக்கள் உருவாக விட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கட்டாயத் தேவை.

    நமது உடலுக்கு மேற்சொன்ன இரும்புச்சத்து, பி12 விட்டமின், ஃபோலிக் அமிலம் ஆகிய மூன்றையும் உணவு மூலம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    உடல் சோர்வு, உடல் வலி, தலைசுற்றல், புத்தி மங்குதல், படிப்பில் நாட்டம் குறைதல், அடிக்கடி தலைவலி ஏற்படுதல், நாக்கு வெளிரிப்போய் காணப்படுவது போன்றவை ரத்த சோகையின் அறிகுறிகள் ஆகும்.

    இரும்புச்சத்து - கால்நடைகளின் கல்லீரல், சுவரொட்டி உள்ளிட்ட உள்ளுறுப்புகளிலும் மாமிசங்களிலும் அதிகமாக உள்ளது.

    மாமிசம் உண்ணாதவர்களுக்கு சுண்டக்காய், கீரைகள், நொதித்தலுக்குள்ளான பழைய கஞ்சியில் இரும்பு உள்ளது.

    பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.

    மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை. மாறாகக் கிடைத்தாலும் அது நம் உடலால் மிகக்குறைவாகவே கிரகிக்கப்படுகிறது.

    ஃபோலிக் அமிலம் - கீரைகள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், கடலை, பழங்கள், மாமிசம், முட்டை, கல்லீரல், மீன் போன்றவற்றில் நிறைந்துள்ளது.

    மரக்கறி மட்டும் உண்ணும் உணவாளர்களுக்கும் மேற்சொன்ன உணவுகளை மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் இரும்புச்சத்து மற்றும் பி12, பி9 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    இவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனைபேரில் உணவோடு சேர்த்து ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

    ரத்த சோகையுடன் தொடர்ந்து இருப்பது இதயத்துக்கும் இன்னபிற முக்கியமான உள்ளுறுப்புகளுக்கும் பாதகம் விளைவிக்கும். நமது அன்றாட வாழ்வின் தரத்தையும் நமது நுட்பத்திறனையும் பாதிக்கும்.

    எனவே ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு பெற்று எதனால் ரத்த சோகை ஏற்பட்டது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போல உணவையும் மருந்தையும் உட்கொண்டு சரிசெய்ய வேண்டும்.

    - டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    Next Story
    ×