search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deworming pill"

    • முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஓன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகா மினை கலெக்டர் அருண் தம்புராஜ், தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரயை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 7,01,617 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள 2,23,660 பெண்களுக்கு மட்டும் (கர்ப்பிணித்தாய்மார்கள். பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயனடைய உள்ளனர். 1 மற்றும் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்து க்கொள்ள வேண்டும். முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது. குடற்புழு நீக்க மாத்திரை ஒரே நாளில் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படு வதுடன், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த சோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உதவுகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்க ன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று தகவலளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்ப டுகிறது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரம்) டாக்டர் மீரா, மற்றும் மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி மையங்கள் நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படும்.
    • 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வினீத் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் திட்டத்தின் கீழ் "தேசிய குடற்புழு நீக்கும் தினம்" திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 7.8 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய 2.04 பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களை தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம் படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்ட்சோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

    காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரைமணிநேரம் கழித்து இம்மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இமமாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படும்.

    1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வரை)அல்பெண்டசோல் 1 மாத்திரைகள் வழங்கப்படும்.

    எனவே குழந்தைகள் 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி வழங்கப்படும்

    ராணிப்பேட்டை:

    தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 21-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் 1 முதல் 19 வயதுடைய 2,94,284 நபர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிகளிலும், 20 முதல் 30 வயதுடைய 76,493 பேருக்கு வீடு வீடாக சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம, நகர சுகாதார செவிலியர்கள் மேற்பார்வையில் மொத்தம் 3,70,777 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த மாத்திரை உட்கொள்வதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்திட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். லேசான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடற்சோர்வு மற்றும் சிறு உடல்நல பிரச்சினை உள்ள குழந்தைகள் மற்றும் வேறு காரணங்களால் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி அன்று மாத்திரைகள் வழங்கப்படும்.

    எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைவரும் இந்த மாத்திரை உட்கொண்டு பயனடைந்து நலமுடன் வாழ வேண்டும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • பொதுசுகாதாரத்துறை சார்பில் நாளை 14-ந் தேதியும், விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதியும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் நாளை 14-ந் தேதியும், விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதியும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத மற்றும் தாய்ப் பாலூட்டாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கப்படுகின்றது.

    அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்ப டுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கி யம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,18,358 குழந்தைகளுக்கும், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1,22,433 நபர்களுக்கும் குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும்.

    மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாண வர்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்து ணர்வுடன் பங்கேற்கலாம். தகுதியுள்ள அனைவரும் இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரைகளை பெற்று

    உட்கொண்டு பயன்பெற லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×