search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbazhagan"

    • அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.
    • ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில்மா அ.தி.மு.க. அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, சாரம் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், கணேசன், ஜெய.சேரன், காந்தி, நாகமணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், நகர தலைவர் கணேஷ், தொகுதி செயலாளர்கள் ராஜா, சம்பத், பொதுக்குழு உறுப்பினர் பாலன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அன்பழகன். துணை செயலாளர்கள்கணபதி, சுந்தரமூர்த்தி, விவசாய அணி இணைச் செயலாளர் ராஜா, மாநில மீனவரணி இணைச் செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ராஜவேல், மாவட்ட பிரதிநிதி செங்கேணி, வார்டு செயலாளர்கள் பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கார்த்தி,கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.
    • பேரூராட்சி சேர்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
    • 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன்.

    சென்னை :

    மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.

    சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு அனைவரையும் வரவேற்றார். கட்சியின் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எம்.பி.க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கருணாநிதியின் ஆற்றல், ஸ்டாலினின் செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன். மு.க.ஸ்டாலினை போல், இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும் என்று மேடையில் பாராட்டியவரும் அவர்தான். வாரிசு, வாரிசு என்று இன்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே. அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியபோது, கல்வெட்டு போல பாராட்டு பத்திரம் கொடுத்தவர் க.அன்பழகன்தான்.

    கருணாநிதிக்கு மட்டுமல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான். எனவே அடுத்த தலைமுறையை பாதுகாக்கவேண்டிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் க.அன்பழகன். கட்சியின் செயல்தலைவராக என்னை முன்மொழிந்தவரும் அவர்தான். தலைவர் மறைவுக்கு பிறகு என்னை தலைவராக முன்மொழிந்தவரும் அவர்தான். நான் இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருக்க அனைத்துக்கும் காரணம் அவர்தான். அவர் எந்த அளவுக்கு கோபக்காரரோ, அந்த அளவுக்கு பாசக்காரர் என்பதையும் மறந்துவிடமுடியாது.

    திராவிட மாடல் ஆட்சி கொள்கையை, வலிமையை கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் 234 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம் என்ற கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். இதற்காக இளைஞர் அணி, மாணவர் அணிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் அதனை ஒன்றிய அளவிலே, கிராம அளவிலே என பட்டித்தொட்டிகளெல்லாம் பாசறை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். இதுதான் க.அன்பழகனுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

    பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அந்த கண்காட்சியை தான் திறந்து வைப்பது பொருத்தமாக இருக்காது என்றும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    • தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.
    • காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் கே.அன்பழகன் நூற்றாண்டு நிறைவாக தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் உரையாற்றும் தி.மு.க. மூத்த தலைவர்களின் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது.

    அதன்படி காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் ஜிப்மர் நிர்வா கத்தில் வேலை வாய்ப்பில் புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தொகுதி செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல்தாஸ், குண சேகர், கிருஷ்ணன், வேலவன், கோபால், சண்முகதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் ஜிப்மர் நிர்வா கத்தில் வேலை வாய்ப்பில் புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நடராஜன், ராஜாராமன், நிர்வாகிகள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், அன்பழக உடையார், எம்.ஏ.கே. கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, குணசேகரன், கிருஷ்ண மூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், சித்தானந்தம், பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ, மருத மலையப்பன், பாப்புசாமி, மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி,

    மாணவர் அணி செயலா ளர் பிரதீப், ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம் ,மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், நகர தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா,

    தொகுதி செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல்தாஸ், குண சேகர், கிருஷ்ணன், வேலவன், கோபால், சண்முகதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை முதல் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சம்பந்தப்பட்ட பொதுப்ப–ணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை இணைந்து முன்னெச்சரிக்கை நடவ–டிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2 ஆண்டுகளாக அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் நகரப் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி மக்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாக்கப்ப–ட்டனர். கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரைப் பகுதிகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் விதத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளின் உயர்மட்ட குழு கூட்டத்தை கலெக்டர் உடனடியாக கூட்ட வேண்டும்.

    தாழ்வான மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தனியார், அரசு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றின் இடங்களை குறிப்பிட்டு சில நாட்களுக்கு வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெருமழையால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உடனடி உணவு வழங்க அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    • அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும்.

    புதுச்சேரி:

    தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்-அமைச்சர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என அந்தந்த மாநில முதல்-அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுப்பினராக இருந்தும் அவர் கலந்து கொள்ளாமல் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    யூனியன் பிரதேசமான கவர்னருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும். இதுபோன்ற கூட்டங்களில் மாநில அந்தஸ்து இல்லாத சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் மற்றும் சட்டமன்றம் இல்லாத அந்தமான், லட்சத்தீவுகளின் சார்பில் கவர்னர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ள லாம் என அனுமதிக்க ப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர், கவர்னர் கலந்து கொள்ள லாம் என விதி இருந்தும், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் விதத்தில் கவர்னர் உரிய வாய்ப்பினை அளித்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சருக்கு உரிய உரிமையை நிலை நாட்டும் விதத்தில் கூட்டத்தில் கவர்னர் செல்வதை தவிர்த்து முதல்-அமைச்சரை கலந்து கொள்ள தெரிவித்திருக்கலாம்.

    தமிழகத்தில் இருந்து புதுவைக்கு காவிரி தண்ணீர், விமான நிலையம் நில ஆர்ஜிதம், தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு மணல் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து கவர்னர் தமிழிசை பேசியுள்ளார். இதில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டிருந்தால் அவர் அண்டை மாநில முதல்-அமைச்சரிடம் நேரிடையாகவும் கலந்து பேசியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

    யூனியன் பிரதேசமாக புதுவை இருந்தும் மாநில அந்தஸ்து உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நிதியுதவி 60-40 ஆக உள்ளதை யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பு நிதியாக நமக்கு 100 சதவீதமும் வழங்க வேண்டும்.

    அதையும் நீங்கள் வழங்கு வதில்லை என்பதையும், தான் பா.ஜனதாவின் ஆதரவில் கவர்னராக இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரிடையாக சுட்டிக்காட்டியுள்ளார். அவரது தைரியமான செயல் என்பது பாராட்டுக்குரியது ஆகும். சிறப்புமிக்க இதுபோன்ற கூட்டங்களில் கவர்னர் கலந்து கொண்டது மற்றும் முதல் அமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்க இணைந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
    • அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள பட்ஜெட் மீதான கருத்தில் கூறியிரு ப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.

    கடுமையான நிதி நெருக்கடியிலும் முற்போக்கு சிந்தனையுடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

    கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.ஆயிரத்து 684 கோடி வெளிக்கடன் வாங்கி கொள்ள அனுமதி அளித்தும் முதல்-அமைச்சர் ரூ.525 கோடி மட்டுமே கடன் பெற்று மாநிலத்தின் பொருளாதார நிலையை கட்டுக்குள் நிலைநாட்டியுள்ளார்.

    அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது. பாராட்டுதலுக்குரிய அற்புதமான திட்டம் ஆகும். அனைத்து பிராந்தியங்களும் சம வளர்ச்சி அடையும் விதத்தில் காரைக்கால், மாகி, ஏனாம், புதுவை பகுதிகளில் அடிப்படை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த இந்த பட்ஜெட் ஏழை, எளியோருக்கான, மாநில உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான, உயிரோட்டமுள்ள உன்னதமான பட்ஜெட்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

    அப்போது மாவட்ட செயலாளர்கள்- சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    கட்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற, பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் இக்கூட்டத்தில் தக்க ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது.
    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பழகன் பிறந்தநாளில் நிவாரண முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin #KAnbazhagan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வின் கொள்கைப் பேராசான் இனமானப் பேராசிரியர் அன்பழகன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரின் தலைமையினை ஏற்று இயக்கம் காப்பது ஒன்றே லட்சியம் என வாழ்பவர். கழகத்தின் பொதுச் செயலாளரான பேராசிரியர் பெருந்தகைக்கு டிசம்பர் 19-ம் நாளன்று 97-வது பிறந்தநாள்.

    கலைஞரைவிட வயதில் மூத்தவர். தந்தை பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர். கொள்கை வழி அண்ணனாக கலைஞருக்குத் துணை நின்று, இன்று உங்களில் ஒருவனான எனக்கு, தந்தை நிலையிலிருந்து வழிகாட்டி வருபவர். பேராசிரியர் தனது பிறந்தநாள் விழாக்களை, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் முழுமையாகத் தவிர்த்திட விரும்புவதால், அதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    கழகத்தின் தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.

    கழகத்தினர் ஏற்கனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேராசிரியர் பெருந்தகையின் பிறந்த நாளான டிசம்பர்-19 அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நலத்திட்ட உதவி செய்திட வேண்டுமெனவும் நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பேராசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றும் மாணவர்களாக கழகத்தினர் செயல்பட்டு, அவர் நமக்கு கற்றுத்தந்த கொள்கை பாடங்களுக்கு சிறப்பு சேர்ப்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KAnbazhagan
    பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முதுமை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

    நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் இருந்தது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல் நிலை பற்றி விசாரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    தற்போது அன்பழகனின் உடல்நிலை சீராகி வருவதாக டாக்டர்களும் தெரிவித்துள்ளனர். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin

    திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். #DMK #MKStalin #Kanbazhagan
    சென்னை:

    வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.



    இதுதொடர்பாக, திமுக பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார். #DMK #MKStalin #Kanbazhagan
    ×