search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdul Kalam"

    • சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.
    • அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம்பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

    அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அவர் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்த உத்தரவிட்டார்.

    அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து. "சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

    கலாம் சொன்னார்,

    அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

    காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.

    மாப்பிள்ளைக்கு 47.

    இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

    கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க.

    அப்புறம்அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை... என்று கலாம் சொல்லி முடிப்பதற்குள்,

    "அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.

    "பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

    ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

    அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.

    ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

    கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ மாணவி சரஸ்வதி நன்றி சொன்னாள்.

    "சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

    "நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்."

    சொன்னாள். கவனமாக குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

    "ஓகே, நாங்க புறப்படறோம்.

    அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

    "என்ன சார் ?"

    "உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

    "நான்தான் சார்."

    ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

    "எப்படீம்மா ?"

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.

    அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

    பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம். Only four students..."

    கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

    கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.

    "இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

    அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

    எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

    இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.

    அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

    அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

    காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி. அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம்பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

    யார் இந்தப் பெண்?

    எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

    மேடையில் நின்ற அந்தப் பெண்மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

    யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?

    எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

    "கலியமூர்த்தி சார், நான் இங்கே அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன். மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன்.

    நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?"

    "தெரியவில்லை" 6என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

    அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :

    "ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். படிக்க வைக்கப்பட்டவள். நான்தான் துறையூர் சரஸ்வதி."

    இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

    "உங்களுக்கும் நன்றி. உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

    சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

    ஆச்சரியம்தான்.

    அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

    ஆம். அது ஒரு அழகிய கலாம் காலம்.

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2-வது முறையாக போட்டியிடாதது ஏன் என்பது குறித்து மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி உள்ளார். #Abdulkalam #RajmohanGandhi
    புதுடெல்லி:

    ‘மக்கள் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், நாட்டின் 11-வது ஜனாதிபதியாக (2002-2007) பதவி வகித்தார். அவருக்கு பின்னர் 12-வது ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் இருந்தார்.

    நாட்டின் 13-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிடுவார் என ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.

    இதன் பின்னணி என்ன என்பது குறித்து மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரனான ராஜ்மோகன் காந்தி (வயது 83), தனது ‘நவீன தென் இந்தியா: 17-ம் நூற்றாண்டு முதல் நமது காலகட்டம் வரையிலான சரித்திரம்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    2007-ம் ஆண்டு அப்துல் கலாமின் பதவி காலம் முடிந்தது. அதன்பின்னர் அவர் இந்தியாவின் கலாசாரம் மீது கொண்டிருந்த ஆர்வம், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீதான அவரது தாராளமான பாராட்டு, இந்திய பாதுகாப்புக்கு அவர் ஆற்றிய சேவைகள் என அனைத்தும் இந்திய இந்துக்களுக்கு பிடித்தமான முஸ்லிமாக அவரை ஆக்கியது.

    2012-ம் ஆண்டு அப்துல் கலாம் 2-வது முறையாக ஜனாதிபதி ஆவதற்கு பாரதிய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் முன்மொழிந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    தான் வெற்றி பெறுவதற்கு தேவையான எண்ணிக்கை (ஓட்டுகள்) கிடைக்காது என்று உணர்ந்துதான், அவர் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார். பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி ஆனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அப்துல்கலாம் முதல் முறை ஜனாதிபதி ஆனது எப்படி என்பதையும் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ 2002-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் பெயரை முதலில் முன்மொழிந்தது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்தான். தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால் மந்திரிசபைகளில் ராணுவ மந்திரியாக திகழ்ந்த முலாயம் சிங் யாதவ், டி.ஆர்.டி.ஓ. (ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) தலைவராக இருந்த அப்துல் கலாமை நன்றாக தெரிந்து வைத்திருந்ததுடன், அவரை விரும்பவும் செய்தார். 2002-ம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒருவரை ஜனாதிபதியாக தன் சுய பலத்தில் தேர்வு செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. அப்போது அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்குவதில் வாஜ்பாய் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார், சோனியா காந்தியும் அப்துல் கலாமுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். அதனால் அவர் ஜனாதிபதி ஆக முடிந்தது” என கூறி உள்ளார்.

    அப்துல் கலாமுக்கு ராஜ்மோகன் காந்தி புகழாரம் சூட்டவும் தவறவில்லை.



    “அப்துல் கலாம் அணுகக்கூடிய ஜனாதிபதியாக விளங்கினார். மக்களின் ஜனாதிபதி என்ற சிறப்பு பெயரையும் பெற்றார். அவர் புத்திசாலியான ஜனாதிபதியாகவும் இருந்தார். அவர் மிகச்சிறப்பான ஆலோசனைகளையும் நினைவுகூரக்கூடிய வகையில் வழங்கினார். மாணவர்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்” என ராஜ்மோகன் காந்தி கூறி உள்ளார். #Abdulkalam #RajmohanGandhi
    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரி முதல்வர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயமணி உள்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், கனவு நாயகன் கலாம் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் அலுவலர் ஜெயமணி செய்திருந்தார்.



    மானாமதுரை செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த விழாவில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி தாளாளர் கிறிஸ்து ராஜா, கலாமின் அறிவியல் கண்டுபிடிப்புகள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். முடிவில் பள்ளி துணை முதல்வர் சாலமன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதேபோல திருப்பத்தூர் அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி தாளாளர் ஹாஜி பாபா அமிர்பாதுஷா அப்துல் கலாமை பற்றிய அறிவு சார்ந்த கருத்துக்களை எடுத்து கூறினார். பள்ளி முதல்வர் கவிதாமேரி வரவேற்றார். இதில் அப்துல்கலாமை பற்றி பாடல்கள் பாடப்பட்டன. பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஹேமலதா வாழ்த்தி பேசினார். முடிவில் ஆசிரியை முத்துக்குமாரி நன்றி கூறினார்.

    கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி விக்டர் தலைமை தாங்கினார். இதில் திருப்பத்தூர் ஆறுமுகம் நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ரூபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் ‘விஷன்2020‘ என்ற தலைப்பில் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகர் வர்த்தக சங்கத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் சிவராஜ், கல்வியாளர் ரங்கசாமி, முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாணவர் தலைவர்கள் ஜெப்ரீ, முத்துமீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில் ஓய்.ஆர்.சி., என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அப்துல்கலாம் கிளப் சார்பாக ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கியும், 1,800 மாணவ- மாணவிகள் ரத்தம் தரம் அறிதல் முகாமிலும் பங்கு கொண்டனர். சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விமலாதேவி வித்யா, காரைக்குடி ரத்த வங்கி மருத்துவர் அருள்தாஸ் மற்றும் நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா உள்பட 50-க்கும் மேற்பட்ட நர்சுகள் முகாமில் பணியாற்றினர். இதில் கல்லூரி துணை முதல்வர்கள் கோபிநாத், ஸ்ரீதேவி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குனர் பேராசிரியர் ராஜமாணிக்கம், பேராசிரியர்கள் மாரியப்பன், இளங்கோவன், வானதி, ஜெயக்குமார், சிவக்குமார், வேல்முருகன், தனலெட்சுமி, காளிதாஸ், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மரியரத்தினம், பெலிஜியாஞானதீபம், காசிவயிரவன், இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முகாம் அமைப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார். 
    அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #AbdulKalam
    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்துல்கலாமின் அடக்க ஸ்தலம் மலர் போர்வைகளால் போர்த்தப்பட்டு இருந்தது.



    காலை 9 மணிக்கு கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தாமு ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தூஆ ஓதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து மரியாதை செலுத்தி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் அரிய புகைப்படங்களை கண்டு களித்தனர்.

    ராமநாதபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கலாமின் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினர்.

    அப்துல்கலாம் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முன்னதாக அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பேக்கரும்பு மணிமண்டபத்தில் நேற்று பசுமை ராமேசுவரம் என்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #AbdulKalam


    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. #AbdulKalam
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், சபாநாயகர், ராம் நிவாஸ் கோயல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    லால்பகதூர் சாஸ்திரியின் உருவப்படமும் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இரு தலைவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். #AbdulKalam
    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் செந்துறை சாலை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அப்துல்கலாம் பொன்மொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் செய்திருந்தார்.

    இதேபோல் அரியலூர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி மற்றும் மக்களாட்சி பேரவை சார்பில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அரியலூர் ஒன்றியம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் உருவப்படம் முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பணி புரிகின்ற ஆட்டோ, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சார்பில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் அரசு சார்ந்த அலுவலகங்களிலும் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
    கரூரில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    கரூர்:

    தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்தில் பிறந்த அப்துல்கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணியாற்றி அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். அதோடு மட்டும் அல்லாமல் இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்று நாட்டிற்கு அளப்பரியா பணிகளை செய்தார். நேற்று அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கரூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் அவரது உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கரூர் கோட்டையண்ணன் கோவில் தெருவிலுள்ள ஒரு டீக்கடையில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அங்கு வரும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியாக பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்ட போதிலும், மரக்கன்று நட்டு உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கிற செயல்பாட்டில் தனது வாழ்நாள் முழுவதும் தீவிரமாக இருந்தவர் அப்துல்கலாம்.

    எனவே அவரது நினைவு தினத்தையொட்டி அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர். இதேபோல் கரூரில் பல்வேறு தெருக்களிலும் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கரூரை அடுத்துள்ள பசுபதிபாளையம் முடி திருத்துவோர் மருத்துவ சங்கம் சார்பில் கரூர் அருகே உள்ள செல்லாண்டிப்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக அப்துல்கலாம் உருவப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், முருகராஜ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #AbdulKalam
    மானாமதுரை:

    மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மேலாளர் சுஜய் தலைமையில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாம் குறித்த சொற்பொழிவு, கவிதை, பாடல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படைத்தனர். முடிவில் அதில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்பத்தூர் நேஷனல் கேட்டரிங் சமுதாயக்கல்லூரியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு முதல்வர் சுரேஷ்பிரபாகர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மரம் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி நினைவு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    இதேபோல் கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மாணவர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜோதிராஜா வரவேற்றார். பின்னர் ‘கலாம் இறக்கவில்லை, சற்று இளைப்பாறுகிறார்’ என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் கலாமின் சாதனைகளை விளக்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மலேசியவாழ் தமிழர்கள் காயத்ரி, மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளிச் செயலாளர் குணாளன் நன்றி கூறினார்.

    தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பஞ்சு தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ‘மாமனிதர் அப்துல்கலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி செயலாளர் கார்த்திக், முதன்மை முதல்வர் நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் மாணவர்கள் அப்துல்கலாம் வேடமணிந்தும், அவரது முகமூடி அணிந்தும் வந்தனர். 
    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ பக்கத்தில் இருந்து தகவல் திருடப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு, கலாமின் சகோதரர் கடிதம் எழுதியுள்ளார். #AbdulKalam
    புதுடெல்லி:

    ‘மக்களின் ஜனாதிபதி’ என அன்போடு அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி மரணமடைந்தார். நேற்று அவரது 3-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

    சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மிகுந்த அன்பு வைத்திருந்த கலாம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வந்தார். இதற்காக @apjabdulkalam என்ற டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் பக்கம் ஒன்றையும் பயன்படுத்தி வந்தார். இவற்றின் மூலம் அவரை லட்சக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர்.

    அப்துல் கலாம் மறைவுக்குப்பின் அவரது ‘டுவிட்டர்’ கணக்கு மாற்றப்பட்டு இருப்பதுடன், அதில் இருந்த பின்தொடர்பாளர்கள் அனைவரும் @kalamcenter என்ற டுவிட்டர் கணக்குக்கும் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கு, கலாமிடம் பகுதி நேர உதவியாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பவருக்கு சொந்தமானதாகும்.

    மேலும் கலாம் பெயரில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் இயங்கி வருவதாகவும், இதில் ஒன்றை ‘கலாம் சென்டர்’ என்ற பெயரில் டெல்லியில் ஸ்ரீஜன்பால் சிங் நடத்தி வருவதாகவும் கலாம் குடும்பத்தின் சட்ட ஆலோசனைக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த அமைப்புகள் மூலம் சட்ட விரோதமாக நன்கொடைகள் வசூலிப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.


    கலாமின் மறைவை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், அவரது டுவிட்டர் கணக்கை மாற்றிய ஸ்ரீஜன்பால் சிங்கிடம் இது குறித்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். அத்துடன் கலாமின் சொந்த டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் உரிமையை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வெறும் 27 பின்தொடர்பாளர்களுடன் கலாமின் டுவிட்டர் கணக்கை அவர் ஒப்படைத்தார். தற்போது அதில் 1000 பின்தொடர்பாளர்களே உள்ளனர். மேலும் அந்த கணக்கில் கலாம் பதிவு செய்திருந்த சிந்தனைப்பதிவுகள் அனைத்தும் திருடப்பட்டு இருக்கிறது. இது கலாம் குடும்பத்தினருக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கலாமின் பொக்கிஷமாக கருதப்படும் அவரது டிஜிட்டல் சொத்துக்களை அவருடன் பணி செய்தவர்கள் உள்பட சிலர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக ராணுவம், உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி கலாமின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில் தகவல் திருடப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #AbdulKalam
    அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக சென்ற டி.டிவி தினகரனுக்கு மாவட்ட கழகம் சார்பில் மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை போன்ற சிவகங்கை மாவட்ட எல்கையில் இருந்து மாவட்ட முடிவு வரை பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    மாவட்ட செயலாளர் உமாதேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன்கென்னடி மாவட்ட துணை செயலாளர் மேப்பல்ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சக்தி, இளைஞரணி இணைச் செயலாளர் இறகு சேரிமுருகன் வக்கீல் பிரிவு இணை செயலாளர் அன்பரசன் பாசறை இணைசெயலாளர் அந்தோணிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகிபாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தகாளை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்து, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, விவசாய பிரிவு இணை செயலாளர்அர்ச்சுணன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், நகர செயலாளர் அன்புமணி, தொகுதி செயலாளர் மகேஷ் மற்றும் நகர, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.

    ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தி மணிமண்டபத்தை சுற்றி பார்த்தனர். #AbdulKalam #AbdulKalamMemorial
    ராமேசுவரம்:

    நாட்டின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றி மறைந்த அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் மரணமடைந்தார்.

    சொந்த ஊரான ராமேசுவரம் பேக்கரும்பில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறையின் சார்பில் அப்துல் கலாமிற்கு பிரமாண்டமான மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

    3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை பேக்கரும்பு நினைவிடத்துக்கு கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயார், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அங்கு ஜமாத் தலைவர் சாகுல் அமீது தலைமையில் துஆ ஓதப்பட்டு நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ராமேசுவரத்துக்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஏராளமானோர்வந்து செல்கின்றனர்.

    அப்துல்கலாம் நினைவு தினமான இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அப்துல்கலாம் மணி மண்டபத்துக்காக வந்து அஞ்சலி செலுத்தி மணிமண்டபத்தை சுற்றி பார்த்தனர். #AbdulKalam  #AbdulKalamMemorial
    பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்க மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். #HajBhavan
    பெங்களூர்:

    பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்ட முடிவு செய்து இருப்பதாக கர்நாடக ஹஜ் மற்றும் வக்ப்போர்டு மந்திரி ஜமீர் அகமதுகான் சமீபத்தில் அறிவித்தார்.

    இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது திப்புசுல்தான் பிறந்த நாளை மாநில அரசு விழாவாக கொண்டாடியது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. மடிகேரியில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    தற்போது மந்திரி ஜமீரின் முடிவை ஏற்று ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டினால் மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில பா.ஜனதா பொது செயலாளர் ஷோபா எச்சரித்துள்ளார்.

    முன்னாள் முதல்- மந்திரியும் மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் சூட்டலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி எடியூரப்பா கூறியதாவது:-


    ஹஜ் பவனுக்கு திப்பு பெயர் சூட்டுவதற்கு இப்போது என்ன அவசரம். மந்திரி ஜமீர் தேவையில்லாமல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார். ஹஜ் பவன் நான் முதல் மந்திரியாக இருந்த போது கட்டப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறுகையில் ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் வைப்பது தொடர்பாக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.#HajBhavan #AbdulKalam #APJAbdulKalam #BSYeddyurappa
    ×