search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tipu Sultan"

    • எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனதாக ஏல நிறுவனம் அறிவிப்பு.
    • போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் ஏலத்தில் விடப்பட்டது.

    இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.140 கோடிக்கு விற்பனையானது.

    லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது.

    இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் தற்போது ஏலத்தில் விடப்பட்டது.

    ஏலத்தின்போது இரண்டு ஏலத்தாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும், அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனது.

    இதுகுறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் கூறுகையில், திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. அதன் பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறன் வாளை தனித்துவமாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியுள்ளது என்றார்.

    கடந்த 1799ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று நான்காவது ஆங்கிலோ- மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்க மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். #HajBhavan
    பெங்களூர்:

    பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்ட முடிவு செய்து இருப்பதாக கர்நாடக ஹஜ் மற்றும் வக்ப்போர்டு மந்திரி ஜமீர் அகமதுகான் சமீபத்தில் அறிவித்தார்.

    இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது திப்புசுல்தான் பிறந்த நாளை மாநில அரசு விழாவாக கொண்டாடியது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. மடிகேரியில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    தற்போது மந்திரி ஜமீரின் முடிவை ஏற்று ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டினால் மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில பா.ஜனதா பொது செயலாளர் ஷோபா எச்சரித்துள்ளார்.

    முன்னாள் முதல்- மந்திரியும் மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் சூட்டலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி எடியூரப்பா கூறியதாவது:-


    ஹஜ் பவனுக்கு திப்பு பெயர் சூட்டுவதற்கு இப்போது என்ன அவசரம். மந்திரி ஜமீர் தேவையில்லாமல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார். ஹஜ் பவன் நான் முதல் மந்திரியாக இருந்த போது கட்டப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறுகையில் ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் வைப்பது தொடர்பாக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.#HajBhavan #AbdulKalam #APJAbdulKalam #BSYeddyurappa
    ×