search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sword"

    • எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனதாக ஏல நிறுவனம் அறிவிப்பு.
    • போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் ஏலத்தில் விடப்பட்டது.

    இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.140 கோடிக்கு விற்பனையானது.

    லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது.

    இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் தற்போது ஏலத்தில் விடப்பட்டது.

    ஏலத்தின்போது இரண்டு ஏலத்தாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும், அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனது.

    இதுகுறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் கூறுகையில், திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. அதன் பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறன் வாளை தனித்துவமாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியுள்ளது என்றார்.

    கடந்த 1799ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று நான்காவது ஆங்கிலோ- மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பெண்- வாலிபரை வாளால் வெட்டி வழிப்பறி செய்த 4 பேரை கைது செய்தனர்.
    • இதையடுத்து கரந்தம்மாள் தலையில் வாளால் அவரை வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி கரந்தம்மாள் (வயது 52). பால் வியாபாரியான இவர், நேற்று முன் தினம் மாலை வியாபாரம் முடிந்து சிவகாமிபுரம்-பெரியகாடு பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் நீண்ட வாளை எடுத்து காட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தன்னிடம் பணமில்லை என்று கரந்தம்மாள் கூறினார்.இதையடுத்து கரந்தம்மாள் தலையில் வாளால் அவரை வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

    அப்போது அங்கு நடந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம்குமார் என்பவரையும் அந்த கும்பல் வாளால் வெட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் கரந்தம்மாளுக்கு தலையில் 6 இடங்கள், விக்ரம் குமாருக்கு தலையில் 8 இடங்களில் வெட்டு விழுந்தது.

    இது தொடர்பாக கீழக்கரை போலீசில் கரந்தம்மாள் புகார் அளித்தார். டி,எஸ்.பி, சுபாஷ் அறிவுறுத்தல்படி கீழக்கரை நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை புது கிழக்கு தெரு சீனி முஹமது மகன் (எ) முஹமது (30) , தட்டான்தோப்பு குணசேகரன் விஜய் (22), பிச்சை மகன் சஞ்சை நாதன் (20) , கிழக்கு நாடார் தெரு சங்கர் காந்தி மகன் அருண் (21) ஆகியோர் வாளால் வெட்டி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேைரயும் போலீசார் கைது செய்தது.

    • கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம், வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறார்.
    • இதில் 4 மாணவிகள் 5 மணி நேரம் 5 வகை ஆயுதங்களை கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் ஆசான் சுப்பிரமணியன் பல்வேறு பள்ளி மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம் வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு, பழகல்லெறிதல், முறை தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக கலை சங்கமம் 2022 விழா தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். காளிசரண், கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளு க்கு கேடயங்கள்பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலம்பாட்டமாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

    வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த 7 மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.4 மாணவிகள் 5 மணிநேரம் 5வகை ஆயுதங்களைக் கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.மணிகண்டன் என்கிற மாணவர் உலோகம் மற்றும் மரத்தாலான கதாயுதம் தொடர்ந்து 2 மணி நேரம் சுற்றி சாதனை செய்தார்.பிரவீன் என்ற மாணவர் கற்கால போர்க் கருவியான கல்முனை தாக்குதல் குறித்து 5 மணிநேரம் தொடர் சாதனை செய்தார்

    அதேபோல் ராஜே ஷ்குமார் என்ற மாணவர் 5 கிலோ கரலாக்கட்டை 3565 முறை சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டார்.உலக சாதனை செய்த மாணவ மாணவிகளின் சாதனையை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நேரில் பதிவு செய்து உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.அக்கழகத்தின் நிறுவனர் ஆசான் டாக்டர் பி சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.

    • திட்டக்குடியில் முகமூடி அணிந்து பட்டாக்கத்தியுடன் மர்ம நபர்கள் திரிந்ததால் பரபரப்பு
    • திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவில் 2 மணி அளவில் திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் 2 மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கடையை உடைப்பதை பார்த்து விட்டு யார் என ஒரு சத்தம் போட்டுள்ளார். உடனே மர்ம நபர்கள் பட்டா கத்தியுடன் அவரைத்துரத்தியதால் அவர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார் மேலும் அவர்கள் இருவரும் மங்கி குல்லா அணிந்து உள்ளனர் மேலும் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து உடனடியாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பிரபாகரன் மற்றும் முத்துமணி. இருவரும் திருப்புவனம் அருகே உள்ள மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர். இதுகுறித்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்த போலீசார் விரைந்து சென்று வாளுடன் திரிந்த 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×