search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinoth"

    • நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தவர் வினோத்.
    • இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.



    இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்த 29 வயதாகும் வினோத் என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள மறைந்த வினோத்தின் இல்லத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வினோத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாரி 2' படத்தின் விமர்சனம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi
    மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.

    தனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.



    போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.

    மறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார். 

    இதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.



    கடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா? தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள்? தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா? என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.

    மாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.



    தனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

    முதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi

    சுரேஷ்.ஜி இயக்கத்தில் விக்கி - மிப்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் `போத' படத்தின் விமர்சனம். #Bodha #Vicky
    நாயகன் விக்கி, மிப்பு மற்றும் தாத்தா என இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர். மிப்பு செல்போன் கடை வைத்திருக்கிறார். விக்கிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், விக்கியின் நண்பர் ஒருவர் குறும்படம் ஒன்றை எடுப்பதாகவும், அந்த படத்தில் விக்கியை நாயகனாக நடிக்க வைப்பதாகவும் கூறி பணம் கேட்கிறார்.

    வேலையில்லாமல் அன்றாட பிழைப்புக்கே அல்லல்படும் விக்கி, பணத்தை புரட்ட கஷ்டப்படுகிறார். இந்த நிலையில், மிப்புவும், விக்கியும் பார்ட்டி ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் விக்கியை கால் பாயாக அனுப்பி வைப்பதாக கூறி, விக்கிக்கு பணம் தருவதாக கூறுகிறார். 

    விக்கியும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், கால் பாயாக செல்ல சம்மதிக்கிறார். கால் பாயாகவும் செல்கிறார். இதுஒருபுறம் இருக்க மிப்பு தனது கடைக்கு சரிபார்க்க வரும் செல்போன்களில் இருக்கும் தகவல்களை திருடி எடுத்து வைத்துக் கொள்கிறார். அவ்வாறு அவர் திருடும் ஒரு செல்போனில் சண்முகசுந்தரம் பேசுவதை கேட்கிறார். அதில் அவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார். 



    இதையடுத்து சண்முகசுந்தரம் வீட்டில் இருந்து பணத்தை திருட முடிவு செய்யும் மிப்பு, அதற்காக அந்த வீட்டிற்கு செல்ல, கால் பாயான நாயகன் விக்கி அந்த வீட்டில் இருந்து வெளியே வருகிறார். 

    இதையடுத்து விக்கியிடம் பணம் குறித்த தகவல்களை மிப்பு கூறுகிறார். அந்த பணத்தை இருவரும் திருட முடிவு செய்து அந்த வீட்டிற்குள் செல்ல, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க இருவரும் செய்வதறியாது முழிக்கின்றனர். மேலும் அந்த பணமும் காணாமல் போகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பிப்பதற்காக அந்த வீட்டில் இருந்து வெளியே ஓடி வரும் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்கின்றனர்.

    கடைசியில் விக்கி - மிப்பு போலீசில் இருந்து தப்பித்தார்களா? அந்த பணத்தை கைப்பற்றினார்களா? அந்த வீட்டில் இருந்த பெண்ணை கொன்றது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    விக்கி நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. நாயகனாக அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். மிப்பு காமெடியில் கைகொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்துள்ளனர். 

    ஒரு சிறிய குழுவை வைத்து, சிறிய பட்ஜெட்டில் படம் பண்ணுவது என்பது எளிதில்லை, அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி. கால் பாய் என்பது நிஜ வாழ்க்கையில் இருந்தாலும், பணத்திற்காக நாயகன் கால் பாயாக மாறுவதாக காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதை மட்டும் தவிர்த்து பார்த்தால் படம் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக வந்திருக்கிறது. 

    சித்தார்த் விபின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். ரத்தின குமார் ஒளிப்பதிவும் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `போத' குறைவு தான். #Bodha #Vicky

    சுரேஷ்.ஜி இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் `போத' படத்தில் நாயகன் விக்கி ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bodha #Vicky
    சுரேஷ்.ஜி இயக்கத்தில் விக்கி, வினோத், மிப்பு, உதயபனுயின் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் `போத'. படத்தில் நடித்தது குறித்து நாயகன் விக்கி பேசியதாவது, 

    சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை, அதற்கு காரணம் எனது தந்தை தான். பல வருடங்களுக்கு முன் `எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலைகாட்டிய என் தந்தை, குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை, எனது ஆசை மற்றும் லட்சியமானது.

    `வடகறி', `அச்சமில்லை அச்சமில்லை', `நிலா' உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த நிலையில் தான் `போத' பட வாய்ப்பு கிடைத்து, அதில் நாயகனாக வருகிறேன்.



    இந்த படத்தில் சில காட்சிகளில் தான் ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாகவும், மற்றபடி இது பணத்தை தேடிச் செல்லும் ஒரு த்ரில்லர் கதை தான், அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன் என்றும் விக்கி கூறினார். 

    சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் நாயகி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. #Bodha #Vicky

    ×