search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "video conference"

    • தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி திறப்பு விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தி.மு.க. அமைப்பாளர் அமிதாப், கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் வனஜா, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மானூரில் புதிதாக அமைய உள்ள இந்த அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிக்கு மதவக்குறிச்சி ஊராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    அதுவரையிலும் தற்காலி–கமாக மேலப்பிள்ளையார்குளம் பள்ளி வளாகத்தில் கல்லூரி செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் தொடங்கப்படுகிறது.

    இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியில் 288 மாணவ-மாணவிகள் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் மானூரில் 2-வதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படுகிறது.

    சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    சென்னை:

    ரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அனுமதி பெறாமல் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 

    மேலும், இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைகோள் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையையும் இந்திய அரசின் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் டாலர்களாக பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
      
    ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.

    அந்நிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மே மாதம் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது.

    பின்னர் பாதுகாப்பு கருதி அவரை பெங்களூரு பர்ப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு கடந்த 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு கடந்த 13-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி எஸ். மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா ஆஜராகவில்லை. 

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்திருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி எஸ்.மலர்மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சசிகலாவிடம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான நகல்களை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் அளித்தார்.

    இன்றைய விசாரணைக்கு பாஸ்கரன் வந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான அரசுதரப்பு வழக்கறிஞர் சசிகலாவிடம் முன்வைக்கும் கேள்விகள் தமிழில் இருக்க வேண்டும் என சசிகலா விரும்புவதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து கேள்விகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் மறுவிசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    கொல்கத்தாவில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பேரணியில் அக்கட்சி தலைவர் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.
     
    இந்நிலையில், கொல்கத்தாவின் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, இன்று காலை 11.30 மணியளவில் மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம்  விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    லண்டனில் கைது செய்யப்பட்ட இந்திய தொழிலதிபர் நிரவ் மோடியை, வீடியோ கான்பரன்சிங் மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். #NiravModi #UKCourt
    லண்டன்:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாயினர்.

    இந்தநிலையில் இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அங்கு புதிதாக வைர வியாபாரம் செய்வதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.

    ஏற்கனவே இவரை நாடுகடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

    தற்போது அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

    நிரவ் மோடியை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்கும்படி லண்டன் கோர்ட்டில் இந்தியா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    அப்போது அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக மாட்டார். மாறாக அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையின் போது நிரவ்மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #NiravModi #UKCourt

    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள லாலு பிரசாதை வரும் டிசம்பர் 20-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #IRCTCScam #Lalu
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
     
    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.



    இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ராப்ரி தேவி, தேஜஸ்வ யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. அத்துடன் நவம்பர் 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் லாலு பிரசாத் யாதவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    அதன்படி ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால், லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் லாலுவை மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
    அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும் இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

    அரசு நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக “டேப் மற்றும் டேட்டா” வழங்கப்படும்.



    அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதில் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் இடம் பெற்று கற்றுக் கொடுப்பார்கள். மாணவ-மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

    விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சத்தி நகராட்சி கமி‌ஷனர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterSenkottaiyan  #NEETexam #NEETtraining
    ×