search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET Training"

    • நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
    • ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் இதற்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். இளமுருகு வரவேற்றார். உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி, உடுமலை ரோட்டரி சங்க தலைவர் சத்தியம் பாபு உடுமலை கட்டுநர்வல்லுனர் சங்க தலைவர் ரவி ஆனந்த் ஆகியோர் பயிற்சி குறித்து பேசினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தான் படிக்கும் காலங்களில் போட்டி தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விளக்கி பேசினார். நிறைவாக லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நன்றி கூறினார். ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் நூலகம் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இது தவிர பள்ளி மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் ஞாயிறு தோறும் இலவச ஓவியம், சிலம்பம், பேச்சுப்போட்டி, யோகா ஆகியவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    • பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு 20 மாணவர்களும் என ஒன்றியத்துக்கு 70 மாணவர் தேர்வு செய்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மாணவருக்கு மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து சனிக்கிழமை தோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நவம்பர் மூன்றாவது வாரம் பயிற்சி வகுப்பு துவங்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். மாணவரின் வருகை மற்றும் மதிப்பெண் பதிவுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றனர்.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும் இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

    அரசு நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக “டேப் மற்றும் டேட்டா” வழங்கப்படும்.



    அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதில் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் இடம் பெற்று கற்றுக் கொடுப்பார்கள். மாணவ-மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

    விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சத்தி நகராட்சி கமி‌ஷனர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterSenkottaiyan  #NEETexam #NEETtraining
    ×