search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashmika Mandhana"

    • இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது.
    • 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    மும்பை:

    மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த அடல் சேது பாலம் பற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, "2 மணி நேர பயணம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்து விட்டது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

    நவி மும்பையில் இருந்து மும்பை, கோவாவில் இருந்து மும்பை, பெங்களூரில் இருந்து மும்பை என எல்லா பயணங்களும் அற்புதமான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

    இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது. 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    2020 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியில் உள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாகவும், 3.94 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா. புஷ்பா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

     


    இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் "புஷ்பா புஷ்பா" என துவங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் ப்ரோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா' படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது
    • புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது

    கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    புஷ்பா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 100 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது புஷ்பா 2 அதை விட அதிக தொகைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    புஷ்பா 2 படத்தின் இந்தி மொழி உரிமத்தை தயாரிப்பாளர் அனில் தடானி 200 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. எனவே இந்தியில் மட்டுமே 500 கோடிக்கு மேல் புஷ்பா 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய் கொடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    இதற்கு முன்பு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமே அதிக பட்சமாக 175 கோடிக்கு 3 ஓடிடி நிறுவனங்களிடம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.




    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

    இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.




    அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா தி ரைஸ்'.பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் புஷ்பா- 2 தி ரூல் படம் தற்போது உருவாகி வருகிறது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுகுமார் இதனை இயக்கி வருகிறார். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.



    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்படுகிறார்.




    இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×