என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rank List"
- ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
- கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பி.இ. மற்றும் பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.
மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். விண்ணப்பங்களை நிரப்பி, அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.
அன்றே ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை சேவை மையம் வாயிலாக இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதையடுத்து ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
அதன் பிறகு பொது பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
அதனை தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பின்னர் எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.
- 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.
- 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.சேர்க்கைக்கான பதிவுகளை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சேர்க்கைக்கான பதிவுக்கு மே 19 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 26ம் தேதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
கோவை தடாகம் ரோட்டில் அரசு தொழில் நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த தர வரிசை பட்டியலை அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலாளருமான கே. தாமரை வெளியிட்டார்.
இதனை ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன் பெற்று கொண்டார்.
இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். சென்னை மாணவர் ஹரீஷ் 67. 667 மதிப்பெண்ணுடன் 2-ம் இடமும், ராகுல் பாபு 61.667 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பிடித்தனர்.
எம்.பி.ஏ. பிரிவில் சென்னை மாணவி கார்த்திகா 80.667 மதிப்பெண்ணுடன் முதலிடமும், பாளையங்கோட்டை மாணவி ரேஷ்மி 80.000 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், ஈரோடு மாணவி கார்த்திகா 78.333 மதிப்பெண்ணுடன் 3-வது இடமும் பிடித்தனர்.
எம்.சி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1,552 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
எம்.பி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 6,255 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
டான்செட் தேர்வு எழுதி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு கடைசி நாளில் கலந்தாய்வு நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்