search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rank List"

    • ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பி.இ. மற்றும் பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.

    மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். விண்ணப்பங்களை நிரப்பி, அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.

    அன்றே ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை சேவை மையம் வாயிலாக இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    இதையடுத்து ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதன் பிறகு பொது பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    பின்னர் எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    • 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.
    • 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.சேர்க்கைக்கான பதிவுகளை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சேர்க்கைக்கான பதிவுக்கு மே 19 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 26ம் தேதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    சர்வதேச வில்வித்தை சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் அணி பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. #India #womensarchery
    சர்வதேச வில்வித்தை சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் அணி பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா முதல் முறையாக முதலிடத்தை பிடித்து இருந்தது. அந்த அணி 342.6 புள்ளிகளுடன் உள்ளது. இந்த சீசினில் நடந்த உலக போட்டிகளில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று இருந்தது.#India #womensarchery
    கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
    கோவை:

    கோவை தடாகம் ரோட்டில் அரசு தொழில் நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்த தர வரிசை பட்டியலை அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலாளருமான கே. தாமரை வெளியிட்டார்.

    இதனை ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன் பெற்று கொண்டார்.

    இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். சென்னை மாணவர் ஹரீஷ் 67. 667 மதிப்பெண்ணுடன் 2-ம் இடமும், ராகுல் பாபு 61.667 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பிடித்தனர்.

    எம்.பி.ஏ. பிரிவில் சென்னை மாணவி கார்த்திகா 80.667 மதிப்பெண்ணுடன் முதலிடமும், பாளையங்கோட்டை மாணவி ரேஷ்மி 80.000 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், ஈரோடு மாணவி கார்த்திகா 78.333 மதிப்பெண்ணுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    எம்.சி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1,552 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

    எம்.பி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 6,255 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    டான்செட் தேர்வு எழுதி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு கடைசி நாளில் கலந்தாய்வு நடக்கிறது.
    5 ஆண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் செயல்படும் அரசு சட்ட கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டபடிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    தரவரிசைப் பட்டியலை http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விரைவில் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 
    ×