search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puneeth Rajkumar"

    • புனித் ராஜ்குமாருக்கு புனித் கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்வர் அறிவித்தார்.
    • கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

    இதற்கிடையே, கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ம் தேதி அன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதை வழங்குவதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக முதல் மந்திரிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

    புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம் பெற்றுள்ளனர். கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

     

    இந்நிலையில், கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ந் தேதி அன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரது கரங்களால் அந்த விருது வழங்கப்படவுள்ளது. புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.

    கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவின் இயற்கை அழகை போற்றும் வகையிலும் திரைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது.
    • அக்டோபர் 28ந் தேதி கந்தாட குடி திரைப்படம் திரைக்கு வருகிறது.

    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். கன்னட மக்களால் அப்பு என்று அழைக்கப்படும் அவர் நடித்த கந்தாட குடி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. வனவிலங்குகள், இயற்கை குறித்து ஆய்வு செய்யும் வகையிலும் கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் போற்றும் வகையிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

    அக்டோபர் 28 அன்று திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக புனித் மனைவி அஸ்வினி டுவிட்டர் பதிவிட்டார். இதை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு இன்னும் வாழ்ந்து வருகிறார். 


    அறிவு கூர்மையான ஆளுமையோடு, ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் அவர் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கந்தாட குடி, ஓர் சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

    நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய மைசூரு சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
    பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.

    விஷால்
    விஷால்

    இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.

    இவ்வாறு விஷால் பேசினார்.
    உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
    கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தினர். 

    புனித் ராஜ்குமார் நல்லடக்கத்திற்கு பிறகு, நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினி
    ரஜினியுடன் புனித் ராஜ்குமார்

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்... Rest in peace my child' என்று உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
    சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

    இதனால், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், அந்தவகையில், நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவருடன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்

    அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, புனித் ராஜ்குமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பெரியவர் அய்யா ராஜ்குமார் எனது தாத்தாவுடன் நட்பு பாராட்டியவர். நெருக்கமாக இருந்தவர். எனது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்து தலைவர் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
    சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் காலமான பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் காலமானார். இவர் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 

    புனித் ராஜ்குமார்

    இந்நிலையில் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த பதிவு குழப்பத்தை ஏற்படுத்த, இப்போது புனித்தின் குடும்ப மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக 
    புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு மருத்துவர் ரமணா ராவ் அளித்த தவறான சிகிச்சை முறையே காரணம் என்று அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டுவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.
    பெங்களூரு:

    கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29-ம் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, குடும்ப நல மருத்துவர் ரமணா ராவ் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து, புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு மருத்துவர் ரமணா ராவ் அளித்த தவறான சிகிச்சை முறையே காரணம் என்று அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டுவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். 

    இதனால் மருத்துவர் ரமணா ராவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் அசோசியேஷன் சார்பில் கர்நாடகா மாநில முதல் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் முறையிடப்பட்டது.

    இதுகுறித்து அதன் தலைவர் பிரசன்னா எச்.எம்., கூறியதாவது:-

    புனித் ராஜ்குமாரின் மரணம் தொடர்பாக, ஊடகங்களில் தொடர்ந்து மருத்துவச் சேவையை சித்தரிக்கப்பட்ட விதம் கவலை அளிக்கிறது. 

    சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை, குறிப்பாக தன்னால் முடிந்த சிகிச்சையை அளித்த ரமணா ராவ் மீது பொதுமக்கள் சுட்டிக்காட்டும் குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்க்கிறோம்.

    மருத்துவ தொழிலுக்கு வரம்புகள் உள்ளன. உயிர்களைக் காப்பாற்றுவது எப்போதும் சாத்தியமில்லை என்பது நமக்கு தெரியும். இல்லை என்றால் யாரும் இறக்க மாட்டார்கள்.

    பொது மக்களின் கண்ணோட்டம் மற்றும் ஊடகம் வெளியிடும் தவறான செய்திகள் சமூகத்தில் மருத்துவச் சேவை மீது அவநம்பிக்கையை உருவாக்குகிறது.

    இதனால், ரமணா ராவ் மற்றும் புனித் ராஜ்குமாரின் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பிற்கு தயவு செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

    சூர்யா

    இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா, புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.


    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

    புனித் ராஜ்குமார் - விஜய் சேதுபதி
    புனித் ராஜ்குமார் - விஜய் சேதுபதி

    இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.
    கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழக்க இதுதான் காரணம் என மருத்துவர் கூறியதாக வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புனித் ராஜ்குமார் உயிரிழக்க இரண்டு மணி நேர கடுமையான உடற்பயிற்சி தான் காரணம் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பிரபல இதயவியல் நிபுணர் மருத்துவர் தேவி ஷெட்டி கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில், கட்டுக்கோப்பாக இருக்க அதிகளவு மெனக்கெடுதல் தான் புனித் ராஜ்குமார் உயிரிழக்க காரணம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் தகவல் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் தகவலை மருத்துவர் தேவி ஷெட்டி வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. வைரல் பதிவுகளை தொடர்ந்து நாரயணா ஹெல்த் குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மருத்துவர் தேவி ஷெட்டி நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து இதுபோன்ற தகவலை பதிவிடவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக மருத்துவர் தேவி ஷெட்டி தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ராஜ்குமார் மறைவு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என தெரிவித்துவிட்டார். அந்த வகையில் மருத்துவர் தேவி ஷெட்டி வெளியிட்டதாக வைரலாகும் தகவலை அவர் வெளியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

    இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதன் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

    சிவகார்த்திகேயன்

    இதேபோல், நடிகர் பிரபுவும், பெங்களூரு சென்று நடிகர் சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 
    ×