search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிவகார்த்திகேயன்
    X
    சிவகார்த்திகேயன்

    புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

    இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதன் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

    சிவகார்த்திகேயன்

    இதேபோல், நடிகர் பிரபுவும், பெங்களூரு சென்று நடிகர் சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 
    Next Story
    ×