search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulwama encounter"

    புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள பன்ஸ்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி வளைத்து வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.

    மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதி ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaAttack #PulwamaEncounter
    புல்வாமா:

    காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம் போர்க்களம் போல் மாறி உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வந்தது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவற்றை முறியடித்த நிலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்தின் மூலம் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் கோழைத்தனமாக செய்து உள்ளனர்.

    ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிறகு மீண்டும் கைவரிசை காட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கண்டறிந்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தை ‘சீல்’ வைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை கடந்த 2 நாட்களாக நடத்தி வருகிறார்கள்.

    நேற்று பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மேலும் அதிகரிக்கப்பட்டது. அப்போது புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் எனும் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் சி.ஆர்.பி. எப். வீரர்கள், உள்ளூர் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.

    நேற்று இரவு அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது.

    வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. எனவே கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கும், இந்த பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    ஆகையால் அவர்களை உயிரோடு பிடிக்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது திடீரென பயங்கரவாதிகள் அந்த வீட்டுக்குள் இருந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.



    பயங்கரவாதிகள் வீட்டின் நான்கு புறமும் இருந்து சுட்டதால் பாதுகாப்பு படையினர் சற்று பின்வாங்கி பிறகு தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அந்த வீட்டுக்குள் அதிரடியாக ஊடுருவவும் பாதுகாப்பு படையினர் முயன்றனர். அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    அவர்களில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார். அவரது பெயர் டான்டியல். மற்ற வீரர்கள் சேவ்ராம், அஜய்குமார், ஹரிசிங் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த தாக்குதலில் மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குல்சார்முகமது என்ற வீரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    இதனால் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. துப்பாக்கி சண்டையில் வீட்டின் உரிமையாளர்கள் 2 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். அப்போது அந்த வீட்டுக்குள் 8 பயங்கரவாதிகள் இருப்பது உறுதியானது.

    அந்த 8 பயங்கரவாதிகளும் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த வீட்டை சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    10.30 மணி அளவில் பாதுகாப்பு படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். இதனால் பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷீத் காஜி எனவும், மற்றொருவன் ஹிலால் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 6 பேர் அந்த வீட்டுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    புல்வாமா மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaAttack #PulwamaEncounter
    தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

    எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசும் கூறியுள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #PulwamaEncounter
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #Pulwamasecurityforces #Pulwamaencounter
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சவுதரி பாக் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் இயந்திர துப்பாக்கிகளால் ரோந்து வாகனத்தின் மீது சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இறந்தவனின் பெயர் வாஜித் கான் (எ) இர்பான் அஹமத் ராத்தர் என்று தெரியவந்துள்ளது. #Pulwamasecurityforces #Pulwamaencounter
    புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. #Pulwamaencounter #Peoplekilled #JammuKashmirStrike
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    இந்நிலையில், புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பிரிவினைவாதிகள் தொடர்ந்து 3 நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

    இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் உள்ள ஞாயிற்றுக்கிழமை வார சந்தை மூடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    என்கவுண்டரை தொடர்ந்து காஷ்மீரில் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால் மொபைல் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது. பி.எஸ்.என்.எல் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. #Pulwamaencounter #Peoplekilled #JammuKashmirStrike
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பொதுமக்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Pulwamaencounter #Militantskilled #Peoplekilled
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.
     
    அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.



    மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இன்றைய என்கவுண்டரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டையின்போது நமது பாதுகாப்பு படையினர் மிகவும் கவனமாக நடந்து கொள்ள தவறி விடுகின்றனர். இந்த வார இறுதி நாளும் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். #Pulwamaencounter #Militantskilled #Peoplekilled
     
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaEncouter #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. ராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #PulwamaEncouter #JKEncounter
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #JammuAndKashmir #PulwamaEncounter
    புல்வாமா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்கும்படி பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். நேற்று இரண்டு நபர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.



    இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பாப்கந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

    இதில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகூர் அகமது என்பதும், ராணுவ வீரராக இருந்து, பயங்கரவாதியாக மாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #PulwamaEncounter

    ×