search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponnamaravathi"

    • இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோவில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து

    ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

    பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது.

    இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    பொன்னமராவதி கலவரம் தொடர்பாக 30 பேரை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.
    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்களையும் கைது செய்தனர். இதில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த சிலரை, போலீசார் சொந்த ஊருக்கு வரவழைத்து கைது செய்தனர். பாராளுமன்ற தேர்தலில் சமுதாய வாக்குகளை பெறும் நோக்கத்தில் வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.

    இதனிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட 1,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை ஒத்தி வைத்திருந்தனர்.

    தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர். அதன் படி நேற்றிரவு வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிலரை கைது செய்வதற்காக பொன்னமராவதி பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #PonnamaravathiViolence

    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதை கண்டித்தும் அதில் பேசிய இருவரையும் கைது செய்தால்தான் தங்கள் ஊரில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக் கூறியும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பு குடிப்பட்டி கிராமமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்துநடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உறுதி அளித்து வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன்பிறகு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கருப்புக்குடிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமமக்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டனர்.

    பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கைது நடவடிக்கை மேற்கொள்வதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உறுதி அளித்ததையடுத்து நள்ளிரவில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்த 4 கார்கள், 2 வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

     


    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பொன்னமராவதி அருகே சித்தூர், மீனாட்சிபுரம், குழிபிறைப்பட்டி, வீரணாம்பட்டி, பனையப்பட்டி, தேனிமலை, நமண சமுத்திரம் உள்பட மொத்தம் 50 இடங்களில் மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டாலும் சில இடங்களில் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி, ஐ.ஜி.வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லட்சுமி (திருச்சி), லோகநாதன் (புதுக்கோட்டை), மாவட்ட எஸ்.பி.க்கள் செல்வராஜ், ஜியாஉல்ஹக் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ், 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

    அதில், ஏப்ரல்19-ந்தேதி முதல் 21-ந்தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்மூலம் ஒரே இடத்தில் 4பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     


    இதற்கிடையே கலவரம் தொடர்பாக பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்கள் யாரென்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறு பரப்பியவர்கள் தஞ்சை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னமராவதி பகுதியில் நேற்று பல இடங்களில் பஸ்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி பொன்னமராவதியில் இன்று பஸ்கள் ஓடவில்லை.

    புதுக்கோட்டையிலும் பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஆலங்குடியிலும் பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

    இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    144 தடை உத்தரவால் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூடப்பட்டது. இதனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஆலங்குடி பகுதிக்கு வந்திருந்த பொது மக்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மேலும் ஆலங்குடி பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சை, பேராவூரணி, சிவகங்கை, திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு டவுன் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். இன்று இரவுக்குள் பஸ்களை இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே நேற்றிரவு பொன்னமராவதி கட்டியா வயலில் 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். #PonnamaravathiViolence

    பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கிடையே இன்று கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கலைந்துசென்ற நபர்கள், திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி  தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். போலீசாரின் 3 வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

    இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #PonnamaravathiViolence
     
    பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி  கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது  ஊதியக்குழுவை அமுல் படுத்தக்கோரி  கடந்த 22ம்தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது. 

    4வது நாளாக  பொன்னமராவதி போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத்தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஹரிராமகிருஷ்ணன், கோட்டச்செயலாளர்கள் ராமச்சந்திரன், பாண்டித்துரை ஆகியோர் போராட்டத்தை விளக்கிப்பேசினர்.

    இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    பொன்னமராவதி:

    திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் பணியாற்றும் சடையம்பட்டி அரசு  மேல் நிலைப்பள்ளி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொன்னமராவதி:

    சிவகங்கை மாவட்டத்தில் வி.ஏ.ஓ.க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னமராவதியில் தாலுகா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார், செயலர் ஹேமலதா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியன், கோட்டச் செயலர் விஜயா, பொருளாளர் சண்முகம் துணைத்தலைவர் சரவணன், துணைச் செயலர் ரெங்கராஜ், அமைப்புச் செயலர் சவுந்திர பாண்டியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காளையார் கோயில்,இளையான்குடி தாலுகாக்களில் முறைகேடுகள் நடந்ததாக வி.ஏ.ஓ க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ×