search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two groups clash"

    • இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
    • பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    உடுமலை,

    உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். கடந்த சில நாட்களாக கோவில் விழா நடந்து வருகிறது. இந்நிலையில் தேரோட்டம் நடைபெற இருந்தது. இதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. தகவல் கிடைத்ததும் சுண்டக்காம்பாளையம் கிராத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல், வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் மோதல் போக்கு தொடர்ந்துள்ளது.இதையடுத்து போலீசார் நேற்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த கோவிலை பூட்டி வைத்துள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இன்று பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

    பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கிடையே இன்று கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கலைந்துசென்ற நபர்கள், திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி  தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். போலீசாரின் 3 வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

    இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #PonnamaravathiViolence
     
    ×