search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postal worker protest"

    பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி  கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது  ஊதியக்குழுவை அமுல் படுத்தக்கோரி  கடந்த 22ம்தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது. 

    4வது நாளாக  பொன்னமராவதி போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத்தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஹரிராமகிருஷ்ணன், கோட்டச்செயலாளர்கள் ராமச்சந்திரன், பாண்டித்துரை ஆகியோர் போராட்டத்தை விளக்கிப்பேசினர்.

    இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    ×