search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher death"

    • விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
    • அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீட்டில் மயங்கி விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண் ருட்டி வட்டம், ரெட்டிப்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ராஜாராமன் (வயது 35). விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமன் பைக் விபத்தில் சிக்கினாராம்.

    அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி ராஜாராமன் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அருகே வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தேவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் வடிவேலு மனைவி நித்யா (வயது 34). இவர் சேலம் அருகே மின்னாம்பள்ளியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் நித்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முக்கூடல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி பூங்காநகரை சேர்ந்தவர் கோமதி நாராயணன்(வயது56). இவர் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். தற்போது 10‍-ம் வகுப்பு தேர்வுக்கான பறக்கும் படையில் கோமதிநாராயணன் இடம்பெற்றிருந்தார்.

    இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்த முதல் நாளான நேற்று கோமதி நாராயணன் மாதாபட்டிணம் மற்றும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. முதன்முறையாக நேற்று மதியம் தொடங்கியது. இதனால் பணி முடிந்து மாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.

    பாப்பாக்குடி அருகே புதுக்கிராமம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கோமதிநாராயணன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி வரும் வழியிலேயே கோமதிநாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேர்வு கண்காணிப்பு பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி ஆசிரியர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் முரளிபாபு (வயது57). இவர் பாதிரிவேட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று பள்ளிக்கு செல்லாத இவர், போந்தவாக்கம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள தரை கிணறு ஒன்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கிய தலைமை ஆசிரியர் முரளிபாபு பரிதாபமாக இறந்தார்.

    தாம்பரம் அருகே ரெயிலில் அடிபட்டு ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்..

    நேற்று மாலை பணி முடிந்ததும் மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் வந்தார். இங்கு ரெயிலில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் செல்போனை பார்த்தபடியே நடந்து சென்றார்.

    அப்போது கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் அவர் மீது ரெயில் மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    பாளையில் இன்று ரெயில் மோதி ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது48). இவர் திருக்குறுங்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபாஷினி (40), ஆலங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு வர்ஷினி (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகளும், விக்னேஷ் (12) என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். ஆசிரியர் முருகன் தினமும் காலை ‘அரை டவுசர், டீசர்ட்’ அணிந்து வாக்கிங் செல்வார்.அதுபோல் இன்று பெருமாள்புரத்தில் இருந்து ரெயில்வே பீடர் ரோடு வழியாக மகாராஜநகர் வரை ‘வாக்கிங்’ சென்றார்.

    பின்பு அவர் அன்புநகர் மகாராஜநகர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து மறுபுறம் செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆசிரியர் முருகன் மீது மோதியது. இதில் முருகன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். ரெயில் என்ஜின் டிரைவர் இதை கவனித்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீலியஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    முருகன் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது மனைவி சுபாஷினி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் ½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. அதுவரை தியாக ராஜ நகர் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் ஏராளமான வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    தேனி அருகே பன்றிக்காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயா (வயது 43). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு யுவன் பிரசன்னா (19) என்ற மகனும் சஞ்சனா (14) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை ஜெயா, அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் நிறைவுமதி, யாசிகா ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் ஜெயா மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மற்றவர்கள் தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மற்ற 4 பேரின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியை ஜெயாவின் மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மருத்துவ பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே அவர்கள் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. அதில் ஒருவர் இறந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு ஆசிரியை பரிதாபமாக பலியானார். #Swineflu #Dengue

    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயா (வயது 43). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு யுவன் பிரசன்னா (19) என்ற மகனும் சஞ்சனா (14) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை ஜெயா, அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் நிறைவுமதி, யாசிகா ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் ஜெயா மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மற்றவர்கள் தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மற்ற 4 பேரின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியை ஜெயாவின் மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மருத்துவ பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே அவர்கள் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வரும்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. அதில் ஒருவர் இறந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    பரமத்தி வேலூர் அருகே லாரி மோதி ஆசிரியர் பலியானார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள முருக கவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகரன் (வயது37). இவர் மஞ்ச பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமாமகேஷ்வரி (30) இவரும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.

    நேற்று பிற்பகல் கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பரமத்தி சென்று கொண்டிருந்தனர். தனியார் பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரசேகரனும், உமாமகேஷ்வரியும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே இரண்டு பேரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை கொண்டு செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். உமா மகேஷ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    யூடியூப் வீடியோவை பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். #SocialNetwork #homebirthattempt
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவரது மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு டிமானி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார். இயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய கிருத்திகா சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்தார். அவருக்கு கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் ஆலோசனை கூறி வந்தனர்.



    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீனுக்கு தகவல் தெரிவித்தார். பிரவீன் தனது மனைவி லாவண்யாவுடன் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து யூ-டியூப்பில் சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி? என்று செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு அவரது கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.

    அப்போது கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து நஞ்சு வெளியேறாமல் அதிக அளவு ரத்தபோக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கிருத்திகாவையும், குழந்தையையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கிருத்திகாவை தகனம் செய்ய மின்மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் சான்றிதழ் இல்லாமல் தகனம் செய்ய முடியாது என்று அறிவித்ததால் கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணி நல்லூர் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இல்லை என்று கூறியதையடுத்து 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    கிருத்திகா பெற்றெடுத்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் பெண்ணின் உயிரை பறித்த தகவல் பேஸ்-புக்கில் வேகமாக பரவியது. இதை பார்த்து சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் பிரசவத்தின் போது பலியான ஆசிரியை கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் மீது 304ஏ (அஜாக்கிரதையாக இருந்து மரணம் ஏற்படுத்துதல்) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இன்று காலை கார்த்திகேயனை கைது செய்தனர். பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். #SocialNetwork #homebirthattempt


    ஆசிரியை கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.#homebirthattempt

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில், மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து இருப்புகளை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை போக்க ஆண்டுக்கு ரூ.500 கோடி அளவுக்கு மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.100 கோடி மருந்துகள் தலைமை மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொற்று நோய் தடுப்பு மையங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புகடி உள்ளிட்டவைக்கு வி‌ஷ முறிவு மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாம்பு கடிக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் 2 ஆயிரம் நர்சுகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று, தற்போது 1000 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 562 பி.ஜி. இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிரசவத்தின் போது, தாய்-சேய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 68 பேர் என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்ததில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

    திருப்பூரில் சமூக வலை தளங்களை பார்த்து பிரசவம் பார்த்த போது கிருத்திகா என்ற ஆசிரியை இறந்துள்ளார். இதுபோன்று யாரும் இணைய தலங்கள், சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் அல்லது மருத்துவம் பார்க்க கூடாது.

    கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையங்கள் 72 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது கலெக்டர் ராமன் மற்றும் டாக்டர்கள் பலர் உடனிருந்தனர். #SocialNetwork  #homebirthattempt

    ‘யூடியூப்’ வீடியோவை பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவரது கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #SocialNetwork #homebirthattempt
    திருப்பூர்:

    சமுக வலைதளங்களால் கிடைக்கும் நன்மைகளை போல தீமைகளும் உள்ளன.

    இன்றைய இளைய சமுதாயத்தினர் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என சமுக வலைதளங்களில் மூழ்கி கிடந்து வாழ்க்கையை வீணாக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

    சமுக வலை தளங்களில் தவறான தகவல்கள் வேகமாக பரவி சமூகத்தில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதன் உச்சமாக திருப்பூரில் ‘யூ-டியூப்’பில் வீடியோ பார்த்து வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் இளம்பெண்ணின் உயிரை பறித்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    திருப்பூர் காங்கயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு டிமானி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார். கிருத்திகா சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்பினார். இதற்காக கிருத்திகா ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் இருந்து வந்தார். மேலும் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்தார்.



    நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பிரவீன் தனது மனைவி லாவண்யாவுடன் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து யூடியூப்பில் சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி? என்று செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு அவரது கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.

    இதையடுத்து சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.3 கிலோ எடை இருந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து நஞ்சு வெளியேறாமல் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கிருத்திகாவையும், குழந்தையையும் ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கிருத்திகாவை தகனம் செய்ய மின் மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் சான்றிதழ் இல்லாமல் தகனம் செய்ய முடியாது என்று அறிவித்ததால் கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணி நல்லூர் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இல்லை என்று கூறியதையடுத்து 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    கிருத்திகா பெற்றெடுத்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் பெண்ணின் உயிரை பறித்த தகவல் சுகாதாரத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவம் பார்க்கும் வசதி இருந்தும் கார்த்திகேயன் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்தது எதற்காக? என்று விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோரிடம் விசாரணையை நடத்தினர். இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், பிரவீன், லாவண்யா ஆகியோர் மீது கர்ப்பிணிக்கு மருத்துவ வசதி தடை செய்ததாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #SocialNetwork  #homebirthattempt
    ×