என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் உயிரிழப்பு"
- விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
- அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வீட்டில் மயங்கி விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண் ருட்டி வட்டம், ரெட்டிப்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ராஜாராமன் (வயது 35). விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமன் பைக் விபத்தில் சிக்கினாராம்.
அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி ராஜாராமன் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
- ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள்.
சென்னை:
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.
அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.






