search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LIQUOR SELLER"

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி தலைமையிலான காவலர்கள் வளையாம் பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த குமார் (வயது 43) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

    • 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கழுவேறிபாளையம், காலனியை சேர்ந்த நாச்சி என்பவரது மகன் கோவிந்தன் (வயது70). இவர் முறைகேடாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கோவிந்தனிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை செய்தனர்.
    • 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி :

    திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

    சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பங்களாபுதூர், டி.ஜி.புதூர் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள பள்ளத்தில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் டி.ஜி.புதூர் பங்களாமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (36) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமை யிலான தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டியை அடுத்த பெரிய எலந்தம்பட்டு அம்பேத்கர்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம், தாளவாடி – ஆசனூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை பின்புறம், கர்நாடக மாநில மதுவை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், அங்கு சென்ற தாளவாடி போலீசார்,அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர், அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர், ஆசனூர், ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்த சோமு (40) என்பது தெரியவந்தது. இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.

    • போலீசார் மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்க்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் கொசப்பாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலை பெரம்பூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது23) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை கைதுசெய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • 110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்கள் பறிமுதல்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகர் பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கோயம்புத்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டியன் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த சின்ன மாரப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் குமரன் கோவில் ரோடு பள்ளத்துமேடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கே அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த பெரிய கொடிவேரி வேட்டுவனபுதூர் பகுதியை சேர்ந்த சின்ன மாரப்பன் (58) என்பவரை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் பிடித்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 41) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

    ×