search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக மாநில மது விற்றவர் கைது
    X

    கர்நாடக மாநில மது விற்றவர் கைது

    • அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம், தாளவாடி – ஆசனூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை பின்புறம், கர்நாடக மாநில மதுவை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், அங்கு சென்ற தாளவாடி போலீசார்,அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர், அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர், ஆசனூர், ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்த சோமு (40) என்பது தெரியவந்தது. இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.

    Next Story
    ×