

கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலை பெரம்பூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது23) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை கைதுசெய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.