search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health benefits"

    • கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும்.
    • நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

    நீரிழிவு நோயினால் பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இது வெப்பம் மற்றும் குளிர், உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும்.

    நரம்பு பாதிப்பு காரணமாக, பாதங்களில் ஏற்படும் காயங்கள் மெதுவாக குணமாகும். கால்களை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம்.

    நீரிழிவு நோயிலானால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பாதங்களை பரிசோதிக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் மற்றும் கால்களுக்கு அடியில் சரிபார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் கொப்புளங்கள், நிறத்தில் ஏதேனும் மாற்றம், உடைப்பு அல்லது தோலில் விரிசல், ஏதேனும் அசாதாரண வீக்கம் மற்றும் வலியுள்ள பகுதிகள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். கால்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைக்க வேண்டும். தினமும் மிதமான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவ வேண்டும்.

    கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் ஈரமான அல்லது வியர்வை ஏற்படும்போது பருத்தி துணிகளை பயன்படுத்தி சுத்தமாக துடைக்க வேண்டும்.

    வறண்ட சருமத்தைத் தடுக்க, ஈரப்பதமூட்டும் கிரீம் பயன்படுத்தலாம். ஆனால் கிரீம்களை கால்விரல்களுக்கு இடையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

    வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும். காலணிகளை அணிவதற்கு முன் உள்ளேயும் வெளியேயும் சரிபார்க்கவும். தினமும் சாக்ஸ் மாற்ற வேண்டும்.

    • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
    • நுங்கு குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

    கோடை காலத்தில் கிடைக்கும் நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும். நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.

    பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்று பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் பனை நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும்.

    கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

    நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு மறையும்.

    நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவதுடன் அதில் இருக்கும் நீரை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் சிறந்த பலனை கொடுக்கும்.

    பெரியோர்கள் இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

    • கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
    • தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

    இன்றைய சூழலில் இளநரையால் ஆண்கள், பெண்கள், ஐந்து வயது குழந்தைகூட பாதிப்புக்குள்ளாகிறது. இளநரைக்கு மரபைவிட பிற காரணிகளே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.

    * தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைத்து பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியும் அடர்த்தியாகும்.

    * உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    * தினம் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது. 

    * சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை குறையும்.

    * கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.

    * நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர இளநரை குறையும்.

    * கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.

    * கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது இளநரை ஏற்படாமல் காக்கும்.

    * தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

    * மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.

    * அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து தலைக்கு தடவி குளிப்பதால் இளநரை நிறம் மாறத்தொடங்கும்.

    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.

    குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

    குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.

    குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

    மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
    • அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

    வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.

    * 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

    * உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.

    * வெற்றிலையை போடுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, ரத்த கசிவை நீக்கி, பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.

    * வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.

    * வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

    * நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

    * அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

    * வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.

    * கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.

    * 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

    • முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும்.
    • அதிக சத்துக்கள் நிறைந்த காய்களிகளில் ஒன்று ப்ராக்கோலி.

    பச்சை பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த காய்களிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது.

    ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துப் பொருட்கள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.

    ப்ராக்கோலியில் உயிர்வளியேற்ற எதிர்ப்பு பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன்கள் மற்றும் சியாசந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    நம் வயிற்றில் உள்ள செரிமான பாதைகளை சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப்பு பொருட்கள் அதிகம் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

    பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே.

    • பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும்.
    • ஈறு சம்பந்தமான நோய் அபாயமும் குறையும்.

    காலையில் மட்டுமல்ல, இரவிலும் பல் துலக்குவது கட்டாயம். அது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும். அவை இதோ....

    * தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பல்லில் உள்ள மஞ்சள் நிறம் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

    * இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

    * இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்கள் பெருகிவிடும். எனவே இரவில் தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

    * படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    * வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பிளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்த நாளங்களை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்.

    கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.
    கடந்த தலைமுறைகளில் சிறுதானியங்கள் மறந்து போய் விட்டிருந்தாலும், அவற்றுள் மறக்கப்படாமல் உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு சிறுதானியம் கேழ்வரகு. கேழ்வரகு ஒரு முழு தானியம் மட்டுமின்றி முழுமையான தானியமும் ஆகும். இது மிக நுண்ணியதாய் இருப்பதால் இதன் தோல் நீக்கப்படுவதோ பாலிஷ் செய்யப்படுவதோ இல்லை. மேலும் இதன் எந்த பகுதியும் நீக்கப்படுவதும் இல்லை. எனவே இதன் சத்துக்களில் எந்த இழப்பும் ஏற்படாமல் பயன்படுத்தப்படுகிறது.

    கேழ்வரகுவில் க்ளூட்டன் என்ற புரதம் கிடையாது. பால், க்ளூட்டன் போன்றவைகளின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒன்று கேழ்வரகு.

    கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகு மாவில் கூழ் செய்வது மிகவும் எளிது. முதலில் அரிசி நொய் அல்லது சிறுதானிய அரிசியை முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த அரிசியில் கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    அடிப்பிடிக்க விடாது கிண்டும் போது கூழ் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி விடும். இப்படி முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு கரைத்து, பொடி நறுக்கிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து குடிக்கலாம்.



    இந்த கூழை கரைக்காமல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு, மீன்கறி குழம்பு போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.

    கூழினால் கிடைக்கும் நன்மைகள்

    கேழ்வரகை கூழாக மட்டுமின்றி தோசையாகவும், அடையாகவும், சப்பாத்தியாகவும் (சிறிது கோதுமை மாவுடன் சேர்த்து), இடியாப்பமாகவும் செய்தும் சாப்பிடலாம். கேழ்வரகுவில் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் கேழ்வரகுவில் 344 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதனால் எலும்புகளுக்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு கேழ்வரகு. கேழ்வரகு கூழை புளிக்க வைக்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெறும் கேழ்வரகு மாவை கஞ்சியாக செய்து கொடுப்பதே பிறந்த குழந்தைகளுக்கான முதல் உணவாக இருக்கிறது.

    மற்ற தானியங்களை விட கேழ்வரகுவில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இதன் தோலில் பால்ஃபெனால்ஸ் இருப்பதால் இது நீரிழிவு உள்ளவர்களுக்கும் நல்லது. மேலும் இதில் இயற்கையான விட்டமின் டி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. முளை கட்டிய ராகியும், புளித்த ராகியும் உடல் இந்த சத்துக்களை சுலபமாக கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ஆடி மாத திருவிழாவின் போது மட்டும் என்றில்லாமல் கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.
    ×