search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுங்கு"

    • நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

    நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.

    100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம். இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம்.

    மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
    • நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.

    அபிராமம்

    கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பனைமரங்கள் பரவலாக இருந்தாலும் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் பலவித நன்மை தரும் நுங்கு களை அபிராமம் பகுதி மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாத புரம், ராமேசுவரம் பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி கமுதி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுங்கு விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோடை வெயிலின் தாக் கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்க நுங்கு களை வாங்கி சாப்பிடுகின்ற னர்

    நுங்க சிறப்பு பற்றி முதியவர் ஒருவர் கூறுகை யில், பனைமரங்களில் பெண்பனை மரங்களில் மட்டும்தான் நுங்குகள் காய்க்கு. ஒரு பனை மரத்துக்கு 10 குலைகள் தள்ளும். நுங்கு உடல்நலத துக்கு நல்லது.

    பெரும்பா லானோர் அதன் வெள்ளைச் சோற்று பகுதியை மட்டுமே பிரித்துச் சாப்பிடுகிறார்கள். மாறாக அதன் மேல் ஒட்டுத் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே மிகமிக நல்லது.

    நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது. நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே இது சிறந்த மருந்து. உடல் வெப்பத்தைத் தணிக்க வல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடியது. ரத்த சோகை நோய்க்கு நூங்கு இயற்கையான மருந்தாகும்.

    நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.

    கோடைகாலங்களில் பலருக்கும் வியர்க்குரு மற்றும் வேணல் கட்டிகள் உருவாகும். நுங்குத் தண்ணீ ரும், மேல் ஓட்டுடன் கூடிய நுங்கையும் உடலில் வியர்க் குரு மற்றும் வேனல் கட்டி கள் இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

    • கரூர் மாவட்டத்தில் பனை நுங்கு விற்பனை களை கட்டியுள்ளது
    • ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நுங்குகளின் வரத்து மிகுதியால் ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலின் உக்கிரத்தால் தற்போது வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது பற்றி நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில்: உள்ளூரில் பனை மரங்களை செங்கல் சூளைக்காக வெட்டி விடுகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து நுங்கு சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். லாரி வாடகை, வெட்டுக் கூலி உள்ளிட்ட செலவினங்களால் நுங்கு விலை தரத்திற்கு ஏற்ப விற்று வருகிறோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் அதிகமாக நுங்குகளை விரும்பி வாங்குகின்றனர் என்றார்.

    • மாம்பழங்களின் விற்பனையும் உயர்வு
    • கிளிமூக்கு-ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வரு கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பெரிதும் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக அவற்றின் விலை உயர்ந்துள்ளது. நாகர்கோவி லில் ஒரு சிகப்பு இளநீர் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் கோடை காலம் என்பதால் மற்ற பழ வகைகளை மக்கள் பெரிதும் வாங்கி உண்ணு கிறாா்கள். இதனால் கடந்த ஒரு மாதமாகவே பழங்கள் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களின் சீசன் இல்லாததால் அவற்றின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

    அன்னாசி பழம், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை ரூ.10 வரை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் நாகர்கோவி லில் நேற்று ஒரு கிலோ திராட்சை-ரூ.70, அன்னாசி பழம்-ரூ.60, கொய்யா-ரூ.80, முலாம்பழம்-ரூ.45, ஆப்பிள்-ரூ.200, ஆரஞ்சு-ரூ.140 என்ற அடிப்படையில் வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலம் என்பதால் குமரி மாவட்டத்தில் தற்போது தித்திப்பான மாம்பழம் சீசன் களை கட்டியுள்ளது. பொதுவாகவே குமரி மாவட்டத்தில் மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருக்கும். சப்போட்டா, மாம்பழம் நீலம், கிளிமூக்கு மாம்பழம் ஆகிய மாம்ப ழங்கள் அதிகளவில் விற்ப னைக்காக வருகின்றன.

    அதிலும் குமரி மாவட்டத் தில் விளையும் சுவை மிகுந்த மாம்பழமான செங்கவருக்கை மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. கடைகள், மார்க்கெட்டுகள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் செங்க வருக்கை மாம்பழம் விற்ப னைக்காக வந்துள்ளது.

    இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இதே மற்ற மாம்பழங்களான சப்போட்டா-ரூ.70 முதல் ரூ.80 வரை, நீலம்-ரூ.60 முதல் ரூ.70 வரை, கிளிமூக்கு-ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுபற்றி வியாபாரி களிடம் கேட்ட போது, "குமரி மாவட்டத்தில் தற்போது மாம்பழங்கள் சீசன் தொடங்கியதால் வரத்து அதிகரித்து இருக்கிறது. 1½ கிலோ மாம்பழம் ரூ.100 என்ற அடிப்படையில் விற்பனை நடக்கிறது. அதிலும் குமரி மாவட்ட ஸ்பெஷலான செங்கவருக்கை அதிகளவில் வருகிறது. இதனால் அதன் விலை குறைந்துள்ளது. இந்த வகை மாம்பழம் வரத்து குறை வாக இருந்தால் ரூ.200-க்கு விற்பனை ஆகும். தற்போது வரத்து அதிகமாக உள்ள தால் ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் வரத்து அதிகரித்தால் விலை இன்னும் குறையும்" என்றனர்.

    • சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.
    • சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது.

    தற்போது வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.

    வெயிலை சமாளிப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பாக விற்பனையும் அதிகரித்து வருகிறது. தர்பூசணி பழங்களும் குவிந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டப்பட்டு சென்னையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையின் பல பகுதிகளிலும் மதிய வேளையில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.

    மணலி, விச்சூர், ஆரம்பாக்கம் ஆகிய இடங்களில் விளையும் நுங்குகளை சென்னைக்கு கொண்டு வந்து அன்னக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது நுங்கு வரத்தொடங்கியுள்ள நிலையில் நுங்கின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உள்ளது.

    8 நுங்கின் விலை ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் நுங்கை வாங்கி செல்கிறார்கள்.

    • வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்
    • நகர கிராம நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது

    காங்கயம்

    காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் நடப்பாண்டில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் ெதாடங்கியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துள்ள மற்றும் முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த, உடல் சூட்டை தணிக்கும் பனை நுங்கை தேடிச்சென்று சாப்பிடுகின்றனர்.அந்தவகையில் தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. நகர, கிராம, நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பொதுமக்களிடம் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர். 3 கண் உள்ள ஒரு நுங்கு ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கிச் சென்றனர்.

    • உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது.

    இதனால் வீட்டுக் குள்ளே மக்கள் முடங்குகின்றனர். அவசர தேவைக்கு மட்டும்தான் வெளியில் வருகின்ற னர். இதனால் உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தினசரி காலையில் பதனீர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும் கம்பங்கூழ் ஒரு டம்ளர் ரூ.20-க்கும், நுங்கு ரூ.10-க்கும், இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

    இது தவிர கரும்பு சாறு, எலுமிச்சை ஜூஸ், பழ ஜூஸ் என்று வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பொருட்களை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    ×