search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநரை"

    • பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
    • நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். குறிப்பாக இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு முடி எளிதில் உடையும். அதிகமாக உதிரும். முடியில் ஈரப்பதம் நிச்சயம் தேவையான ஒன்று. அதை எப்படி தக்க வைத்துக் கொள்வதென இங்கு பார்ப்போம்.

    எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:

    அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த ஒன்று. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

    ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.

    வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.

     ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.

    இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

    முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.

    கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும்.

    • ஹேர்டை தலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.
    • தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும்.

    30 வயதிலேயே நரை முடிகள் வருவதால் பலரும் ஹேர் டையை இளம் வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஹேர் டை ஆபத்து இல்லை என்றாலும் செயற்கையான முறையில் கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துவது ஆபத்து என்கிறார் தோல் மருத்துவர்.

    சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ... எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்துவிடுங்கள். அடுத்து சிறுநீர் கழிக்கும்போது டையால் உடலுக்குள் சேர்ந்த நச்சு வெளியேறிவிடும்.

    டை உபயோகிக்கும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நேரத்தில் தலையை அலசிவிட வேண்டும். தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும்.

    `காஸ்ட்லியான டைதான் உபயோகிக்கிறேன்... ஆனால், எனக்கு அது நிற்பதே இல்லை... சட்டென வெள்ளையாகிவிடுகிறது' என்று பலர் புலம்புவதைப் பார்க்கலாம். தலைமுடி மிகவும் எண்ணெய்ப் பசையோடு இருப்பவர்களுக்குத்தான் டை நிற்காது. நம்முடைய சருமமானது சீபம் என்ற எண்ணெயைச் சுரக்கும். சருமத்தின் உள்ளே உள்ள செபேஷியஸ் சுரப்பியின் வழியே சுரக்கும் அந்த எண்ணெயானது வெளியே கசியும். அது முடியின் வேர்க்கால்களிலும் படியும். அதனால்தான் தலைக்குக் குளித்த இரண்டாவது நாளே தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். தலைமுடியில் எண்ணெய் தடவியதுபோலவே இருக்கும்.

    இந்த எண்ணெய்ப்பசையானது தலைமுடியில் போடப்படும் டையின் நிறத்தை எடுக்கக்கூடிய தன்மை கொண்டது. எந்த டையும் மாதக் கணக்கில் நீடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஆரோக்கியமானதே இல்லை. சீக்கிரம் நரைத்தாலும் மறுபடி ரீடச் செய்துகொள்வதில் தவறில்லை.

    நரைமுடியை கடைகளில் வாங்கும் கெமிக்கல் ஹேர்டை கொண்டு மறைப்பதால் உண்டாகும் கடும் தீங்குகளை மருத்துவர்கள் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். தற்காலிகமாக இது தீர்வு தந்தாலும் இதனால் உண்டாகும் பாதிப்புகள் நிறைய.

    கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பல விதமான பாதிப்புகளை உண்டாக்கும். இந்த பாக்கெட் ஹேர் டைகளில் அமோனியா மற்றும் பாராபெனிலெனிடமைன் (PPD ) என்னும் இரு வகையான ஆபத்து நிறைந்த கெமிக்கலை பயன்படுத்துகின்றனர்.எனவே ஹேர் டை வாங்கும் முன் இந்த இரண்டு கெமிக்கல்களும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள்.

    • நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம்.
    • இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி.

    நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம்.

    நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

    வீட்டில் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் டையை பயன்படுத்தி வருவதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் உங்கள் கூந்தலை கருமையாக்க முடியும்.

    * அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்.

    * மருதாணி இலையையும் மற்றும் அவுரி இலையையும் தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தலை குளிக்கும் முதல் நாள் இரவே உங்கள் முடிக்கு தகுந்தார் போல் மருதாணி பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து வைத்து விட வேண்டும். சுமார் 6 மணி நேரமாவது இந்த மருதாணி பொடியானது ஊற வேண்டும். பின்பு மறுநாள் காலையில் ஊற வைத்த மருதாணி பொடியை நன்றாக தலைமுடியில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு தலைமுடியை சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பை கொண்டு நன்றாக அலசிவிட்டு முடியை நன்றாக உலர்த்த வேண்டும். ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது.

    தலைமுடி நன்றாக உலர்ந்தவுடன் அவுரி பொடியை தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து உடனடியாக தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் சீயக்காய் போன்று ஏதும் தேய்க்காமல் அப்படியே தலையை நன்றாக அலசி விட வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நரைமுடி விரைவில் முழுமையாக கருமுடியாக மாறிவிடும். முதல் முறை பயன்படுத்தினாலே வித்தியாசம் நன்றாகத் தெரியும்.

    அவுரி பொடியை தண்ணீரில் கலந்து ஊற வைத்து விட்டால் அதன் தன்மை மாறக்கூடும் எனவே பொடியை தண்ணீரில் கலந்தவுடன் தேய்க்க வேண்டும்.

    மருதாணி மற்றும் அவுரி இலைகளை வெயிலில் காய வைக்க கூடாது. நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.

    மேலே கூறிய முறைகளை சரியாக செய்தாலே உங்கள் இளநரைக்கு விரைவில் தீர்வு கிட்டும்.

    * தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் – 1,

    டீ தூள் – இரண்டு ஸ்பூன்,

    அவுரி இலை பொடி – 2 ஸ்பூன்.

    இரண்டு ஸ்பூன் டீ தூளுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, டீ டிகாஷன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து கொள்ள வேண்டும். பிறகு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு டீ டிக்காஷன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனுடன் 2 ஸ்பூன் அவுரி இலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அதன் நிறம் மாறி சற்று பிரவுன் கலராக மாற ஆரம்பிக்கும்.

    பயன்படுத்தும் முறை: இதனை பயன்படுத்தும் பொழுது முடியில் எண்ணெய் இருக்கக்கூடாது. முதல் நாளே தலைக்கு குளித்து எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அவுரி இலை பொடி நேரடியாக வெள்ளை முடியில் கருமை நிறத்தைக் கொண்டு வராது. எனவே இந்த பீட்ரூட்டின் சிவப்பு நிறத்தால் முடி சிறிதளவு பிரவுன் நிறமாக மாறும். அதன் பின்னரே அவுரி இலையின் தன்மை முடியுடன் சேர்ந்து கருமை நிறமாக மாற ஆரம்பிக்கும்.

    சுத்தமான தலைமுடியில் இந்த அவுரி இலை பேஸ்டடை நன்றாக தடவி விட்டு 1 அல்லது 2 மணி நேரங்கள் அப்படியே ஊற வைத்து, சாதாரண நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு அல்லது சீயக்காய் எதுவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்து வர முடியின் நிறம் கருமையாக மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

    • ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும்.
    • வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம்.

    வயதாகும் போதும், சில சத்துக்கள் குறைபாடு மற்றும் பரம்பரை அறிகுறிகள் காரணமாகவும் தலைமுடி நரைப்பதுண்டு. இதற்கு சந்தையில் கிடைக்கும் தைலங்கள், பவுடர்களில் ரசாயனம் கலந்திருக்கும். இது பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும். இதை தவிர்த்து நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம். ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    இயற்கை டை 1:

    தேவையானவை: தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி - தலா 3 டீஸ்பூன்.

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதைக் கேசத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். பிறகு, கேசத்தை நன்றாக உலர்த்தி, இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரைமுடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம். இந்தச் செய்முறையில் வெந்நீருக்குப் பதிலாக, பொடிகளை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, தேநீர்போலவும் தயாரித்து கேசத்தில் பூசலாம்.

    இயற்கை டை 2:

    தேவையானவை: மருதாணி இலை - கைப்பிடி அளவு, நெல்லிக்காய் - 2, காபிக் கொட்டை - சிறிதளவு, கொட்டைப்பாக்குப் பொடி - 3 டீஸ்பூன்.

    செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் கேசத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.

    பட்டுக் கூந்தலுக்கு... பளிச் டிப்ஸ்

    இயற்கை டை 3:

    தேவையானவை: வால்நட் பொடி - 3 டீஸ்பூன், அவுரி இலை - சிறிதளவு, சாமந்திப்பூ - சிறிதளவு, ரோஸ்மெர்ரி இலைகள் (உலர்ந்தது) - சிறிதளவு. இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    செய்முறை: அனைத்தையும் நன்றாக உலர்த்திப் பொடி செய்து, தேநீர் போன்று காய்ச்சி வடிகட்டவும். இந்த நீரை முடியில் தடவி, வெயிலில் நன்றாக உலர்த்தவும். பிறகு அலசிவிடவும். கருமை நிறம் அப்படியே நீடித்திருக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நீரைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

    இயற்கை டை 4:

    தேவையானவை: ஆற்றுத்தும்மட்டி பழச் சதை - 1 கப், நெல்லிப்பழச் சதை - 1 கப், கரிசாலை இலை விழுது - 1 கப், தேங்காய் எண்ணெய் - 500 மி.லி.

    செய்முறை: பழச் சதையையும், கரிசாலை இலை விழுதையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சவும். இந்த விழுது கரகரப்பாக மாறும் பதத்தில் இறக்கி, வடிகட்டி, ஆறவைக்கவும். தினமும் இந்த எண்ணெயை முடிப்பராமரிப்புக்குப் பயன்படுத்தினால், நாளடைவில் இளநரை குறைந்து, கூந்தல் கருமையாக வளரும். கேசத்தை அலச, சீயக்காய் பொடி அல்லது `உசில்' என்னும் அரக்குப் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.

    பட்டுக் கூந்தலுக்கு... பளிச் டிப்ஸ்

    இயற்கை டை 5:

    தேவையானவை: செம்பருத்தி இலை, கரிசலாங்கண்ணி இலை, மருதாணி இலை, அவுரி இலை - தலா கைப்பிடி அளவு, வெந்தயம் - 3 டீஸ்பூன்.

    செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து, சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு இவற்றைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைக் கேசத்தில் பூசிவர, கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

    • வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்க கூடாது.
    • சூடான நீரில் தலைமுடியை அலச வேண்டாம். 

    ஹேர் கலரிங் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் ஸ்டைலுக்காக செய்தது போலவே தோன்றும். ஆனால் உண்மையில் இளம் தலைமுறையினர் பலரும் இளம் நரைமுடியை மறைக்கவும் தற்போது ஹேர் கலரிங் முறையை கையில் எடுத்து விட்டனர். பல்வேறு காரணங்களால் விரைவில் நரைமுடி பிரச்சனை எட்டி பார்க்கிறது. சிலர், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை கொடுக்க தொடங்கி விடுவார்கள். 

    சிலர் இதை கவனிக்க தவறுவதால் தலை முடி முழுவதும் நரை முடியாக மாறிய பின்பு அதை மறைக்க முயற்சிகள் எடுக்கின்றனர். அந்த வகையில் அவர்கள் முதலில் மேற்கொள்ளும் முயற்சி ஹேர் கலரிங். சலூன் ஸ்டலில் ஹேர் கலரிங் செய்வது தற்போது ட்ரெண்டாக இருந்தாலும், இது நரை முடியை மறைக்கவும் பெரிதும் உதவுகிறது. 

    அந்த வகையில் இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி? சலூன் ஸ்டைலில் ஹேர் கலரிங் செய்வது என்பதை பார்ப்போம். 

    தேவையான பொருட்கள்

    மருதாணி தூள் - 1 கப்

    காபி தூள் - 2 டீஸ்பூன்

    கேரட் சாறு - 1 டீஸ்பூன்

    ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டீஸ்பூன்

    தயாரிக்கும் முறை

    முதலில் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் காபி தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும். 

    பின்னர் அதில் கேரட் சாறு, ஆப்பிள் வினிகர் சேர்க்கவும். 

    இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து எடுத்து கொள்ளவும். 

    இப்போது ஹேர் கலரிங் செய்ய தேவைப்படும் பேஸ்ட் தயார். 

    முதலில் முடியை விரித்து விடவும். 

    பின்பு பிரஷ் உதவியுடன் தயார் செய்த பேஸ்ட்டை முடியில் பக்குவமாய் தடவவும். 

    தேவைப்படும் முடியில் மட்டும் கூட தேய்த்து கொள்ளலாம். 

    இதை சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை அப்படியே தலையில் ஊற விடவும்.  

    உங்கள் தலைமுடிக்கு இயற்கையான முறையில் கலரிங் செய்து இருந்தால் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டாம். 

    வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்க கூடாது.

    • கூந்தலுக்கு செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும்.
    • இதை தவிர்க்க நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரிக்கலாம்.

    வயதாகும் போதும், சில சத்துக்கள் குறைபாடு மற்றும் பரம்பரை அறிகுறிகள் காரணமாகவும் தலைமுடி நரைப்பதுண்டு. இதற்கு சந்தையில் கிடைக்கும் தைலங்கள், பவுடர்களில் ரசாயனம் கலந்திருக்கும். இது பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும். இதை தவிர்த்து நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவுரி இலை சாறு, கறிவேப்பிலை சாறு, மருதோன்றி இலை சாறு, பீட்ரூட் சாறு, தேயிலை டிக்காஷன் போன்றவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 5 முதல் 10 செம்பருத்தி பூவை அரைத்து கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் வற்றும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். களிம்பு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைக்கவும். பின்னர் தேவையான அளவு எடுத்து தலைமுடியில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் தோறும் செய்து வந்தால் நரை முடி நிறம் மாறும், இதனால் உடல் சூடும் குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இளம் வயதிலேயே வெள்ளை முடி என்பது மரபணு காரணங்களால் வரலாம்.
    • கறிவேப்பிலையும் நெல்லிக்காயும் கூந்தலுக்கு நன்மை பயக்கும்.

    இன்றைய காலகட்டத்தில், இளம் வயதினரே வெள்ளை முடியால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது சங்கடத்தையும் குறைந்த நம்பிக்கையையும் தருகிறது.

    இளம் வயதிலேயே வெள்ளை முடி என்பது மரபணு காரணங்களால் வரலாம். ஆனால் இது பொதுவாக நமது அன்றாட உணவுடன் தொடர்புடையது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெள்ளை முடி வளராமல் தடுக்கலாம். முடி பராமரிப்புக்கு பல ஊட்டச்சத்துக்கள் தேவைப்பட்டாலும், உடலில் வைட்டமின் பி குறைபாடு இருந்தால், அது மோசமாகிவிடும்.

    உடலில் வைட்டமின் பி குறைபாடு ஏற்பட்டால், அதன் தாக்கம் நம் தலைமுடியில் தெரிய ஆரம்பிக்கிறது, இதனால் முடி வெள்ளையாக மாற ஆரம்பிக்கிறது. முடி உதிர்தல் பிரச்சினையும் தோன்றத் தொடங்குகிறது, இது பின்னர் வழுக்கையை ஏற்படுத்துகிறது. அதனால்தான் உங்கள் உணவு மற்றும் பானங்களில் இந்த வைட்டமின் குறைபாட்டை அனுமதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நீங்களும் இளம் வயதில் முடி நரை பிரச்சனையை எதிர்கொண்டால், வைட்டமின் பி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றை உட்கொள்ளுங்கள், இந்த ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், முடிக்கு ஆக்ஸிஜன் குறைந்து, முடி வெள்ளையாகத் தொடங்குகிறது.

    வைட்டமின் பி குறைபாட்டைப் போக்க, தினசரி உணவில் காளான்கள், பருப்பு வகைகள் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். இந்த பொருட்களில் தாமிரம் உள்ளது, இது முடி ஆரோக்கியத்திற்கு நல்லது. இது தவிர கறிவேப்பிலையும் நெல்லிக்காயும் கூந்தலுக்கு நன்மை பயக்கும்.

    • இளமையான தோற்றத்திற்கு சரும அழகு மட்டும் அல்லாது கூந்தலின் நிறமும் பங்கெடுக்கின்றது.
    • வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர்டை தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

    கூந்தல் உதிர்வு, கூந்தல் மெலிவு, நுனி பிளவு போன்ற பிரச்சனைகளை விட நரைமுடி வந்து விட்டால் உடற் தோற்றத்தில் திடீரென அதிகமான மாற்றம் ஏற்படுகின்றது. கண்ட கண்ட இராசாயனப் பொருட்களாலான ஹேர் டைகளை பயன்படுத்தி இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாமல் இப்படியான இயற்கை ஹேர் டைகளை பயன்படுத்துக் கொள்வோம்.

    நரைமுடியை போக்க பீட்ரூட்டில் இயற்கை ஹேர் டைஎப்படி செய்வது என பார்ப்போம்.

    தேவைப்படும் பொருட்கள்

    இது ஒரு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹேர் டை. இதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்.

    கறிவேப்பில்லை – ஒரு கப்

    சிவப்பு செம்பருத்தி பூ – 10

    எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

    தண்ணீர் – 200 மில்லி

    பீட்ருட் – ஒன்று

    காபி தூள் – மூன்று ஸ்பூன்

    செய்முறை

    அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும். அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய பீட்ருட், கறிவேப்பிலை, சிகப்பு செம்பருத்தி பூ சேர்த்து தண்ணீர்விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த கலவையை காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

    இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்த பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

    எனவே இந்த பீட்ருட் ஹேர் டையை மாலை நேரங்களில் தயாரித்து, மறுநாள் காலையில் பயன்படுத்துவது உகந்தது. கருமையான நிறத்தை பெற பலதடவை பயன்படுத்த வேண்டும்.

    இயற்கை ஹேர் டை தயாரிக்க முடியாதவர்கள், சந்தையில் விற்பனையில் உள்ள இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.

    ×