search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HD Revanna"

    • ஆள் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.
    • கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி அவற்றை வீடியோ பதிவு செய்து மிரட்டிய வழக்கில் கர்நாடகாவின் ஹசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சி எம்.பி-பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது கர்நாடகா போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளிவந்ததுமே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய போலீஸார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்த மைசூரு, கே.ஆர்.நகரை சேர்ந்த பெண் கடத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், பெண் கடத்தல் வழக்கில், எச்.டி. ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தயாரான பவானி ரேவண்ணாவும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புளு கார்னர் நோட்டீசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை, முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் என்பவர் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடாவிடம் கொடுத்ததாகவும், அவர் இந்த வீடியோக்களை வெளியிட்டதாகவும் தகவல்கள் பரவியது. இதை தேவரா ஜகவுடா திட்டவட்டமாக நிராகரித்தார். இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் கார் டிரைவர் கார்த்திக், பா.ஜ.க. வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் அவர்கள் 2 பேருக்கும் சம்மன் அனுப்பினர். அதில் 24 மணி நேரத்தில் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று அறிவித்து இருந்தனர். இதற்கிடையே தேவராஜ கவுடா மீது ஒரு பெண் ஹோலேநரசீப் நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தேவராஜ கவுடா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், வீடியோ கால் செய்து மனரீதியாக சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஹாசன் இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தேவராஜ கவுடா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதே போல் தன் மீது புகார் செய்த பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் பிரஜ்வல்வால் ரேவண்ணா வீடியோ வெளியானது தொடர்பாக தேவராஜ கவுடாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூர் போலீசார் குலிஹால் கேட் என்ற பகுதியில் நேற்றிரவு வேதராஜகவுடாவை கைது செய்தனர். போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட தேவராஜ கவுடா கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஹோலேநரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எச்.டி.ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்
    • எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக எச்.டி.ரேவண்ணாவின் உறவினரான சதீஸ் பாபுவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

    இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தது.

    அவரை அரண்மனை சாலையில் உள்ள கார்ல்டன் கட்டிடத்தில் இயங்கி வரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரேவண்ணாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு பெங்களூரு 17வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    • சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை.
    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை.

    பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஆஜராக கூறி ஏற்கனவே ஒருமுறை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

    ஆனால் ஜெர்மனியில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தகவல் தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா, அவரது வக்கீல் மூலம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்காத சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேடப்படும் நபராக பிரஜ்வல் ரேவண்ணாவை அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கினர்.

    இவ்வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சி.பி.ஐ. 'புளூ கார்னர்' நோட்டீஸ் வழங்கினால் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க மத்திய உளவுத்துறை (இன்டர்போல்) உடன் நேரடி தொடர்பில் உள்ள சி.பி.ஐ.யிடம் கர்நாடக அரசு மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டில் வைத்து கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

    • பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் 2 பேர் மீதும் கர்நாடக மாநில கூடுதல் டி.ஜி.பி. பிஜய்குமார் சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனது தாயை எச்.டி.ரேவண்ணாவும், அவரது ஆதரவாளரும், பவானி ரேவண்ணாவின் உறவினருமான சதீஸ் பாபு ஆகியோர் சேர்ந்து கடத்திச் சென்றுவிட்டதாக அந்த பெண்ணின் மகன் கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக பவானி ரேவண்ணாவின் உறவினரான சதீஸ் பாபுவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பெண் எச்.டி.ரேவண்ணாவின் உதவியாளரும், ஏற்கனவே கைதான சதீஸ் பாபுவின் உறவினருமான ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருப்பதும், அந்த வீடு மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா காலேனஹள்ளி கிராமத்தில் இருப்பதும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

    இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த 5 நிமிடத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் புறப்பட்டு பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வீட்டுக்கு வந்தனர்.

    சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீட்டின் கதவை திறக்குமாறு கூறி தட்டினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்பு எச்.டி.ரேவண்ணா கதவை திறந்து வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் பெண்ணை கடத்தியது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் தங்களை கைது செய்வதாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தெரிவித்தனர். பின்னர் எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் பெங்களூரு பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது ரத்த அழுத்த மற்றும் உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரை அரண்மனை சாலையில் உள்ள கார்ல்டன் கட்டிடத்தில் இயங்கி வரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அவரிடம் போலீசார் பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டு உள்ளனர். அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வர தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் ரேவண்ணா கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர். இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ரேவண்ணாவிடம் விசாரணை நடத்திய பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவரை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தவும் சிறப்பு விசார ணைக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தேவகவுடாவின் மகனான ரேவண்ணா கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
    • ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தற்போது ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முடிந்ததும் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகுதான் அவரைப்பற்றிய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் வேலை பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதே போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது. மேலும் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களில் ஒருவர் கடத்தப்பட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அப்பெண்ணை எச்.டி.ரேவண்ணாவின் ஆட்கள் தான் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ×