search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Friendship"

    • அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு.
    • உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது.

    பள்ளி, கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்தால் நம் நண்பர்களுடன் கழித்த இனிய தருணங்களே முதலில் நம் மனதில் சிறகடிக்கும். இந்த இலையுதிர் காலத்துக்கு பிறகான வாழ்வில், பெரும் பகுதியை நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் பணி இடங்களில் தான் உள்ளோம். அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் இருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.

    ஆம்...! அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்சினைகளை எளிதாகப்புரிந்துகொள்வார். பிரச்சினையில் இருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். உயர் அதிகாரியுடன் பிரச்சினை, அலுவலக அரசியல், வேலைப்பளுவால் மனச்சோர்வு, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.' அவர்களின் பங்களிப்பு அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரொம்பவே அவசியம் என்பதை இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்.

    உற்சாகம்

    `ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் ஒரு ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ் நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.

    உதவி

    எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம் மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச்சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு காதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.

     மதிய உணவு

    அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நாம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி நாள் வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!

     குழு

    நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறை குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    • ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 28). திருமணமானவர். வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. செல்போனை எடுத்து பேசியபோது, எதிர்தரப்பில் இருந்து ஆண் நபரின் குரல் கேட்டது. அவர் எண்களை தவறாக போட்டதால் தனக்கு போன் வந்ததை உணர்ந்த அனிதா, அவரிடம் அதனைக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தினமும் போன் செய்துள்ளார். புதுவை வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். இது நட்பாக மாறி நாளடைவில் கள்ள க்காதலாக மாறியுள்ளது.

    இதனையடுத்து இருவரும் சந்திக்க திட்டமிட்டு, நேற்று ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனிதா திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை காணவில்லை. மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அனிதா, இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாணவிகள் இருவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் ஒன்றாக வேலை பார்ப்பது தெரிந்தது.
    • கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 2 பேரும் மாயமானர்கள்.

    வேளச்சேரி:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.

    இந்த நிலையில் அவர்களது நட்புக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 2 பேரும் மாயமானர்கள்.

    இவர்களில் ஒருமாணவி தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் எங்களது விருப்பப்படி நாங்கள் செல்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து பட்டி வீரன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. மாணவிகள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே மாணவிகள் இருவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் ஒன்றாக வேலை பார்ப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் மீட்டனர்.

    பின்னர் மாணவிகள் இருவரும் திண்டுக்கல் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். மாணவிகள் இருவருக்கும் போலீசாரும், அதிகாரிகளும் அறிவுரை கூறினர்.

    • இன்று (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
    • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சகோதரி நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.

    ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இரண்டாவது தாயாக இருப்பவர் அவருடைய சகோதரிதான். சிறுவயதில் இருந்து எதிரும் புதிருமாக இருந்தாலும், நெருக்கம் இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவரே நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.

    இன்னும் சில நேரங்களில், சகோதரியுடனான பகிர்வு, பிணைப்பு என்பது தோழமை உணர்வையும் தாண்டி, 'அன்னை' என்ற நிலையை அடைந்துவிடும். இவ்வாறு அனைத்து உறவுகளின் சங்கமமாக விளங்கும் 'சகோதரி' எனும் உறவை மதித்து கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது.

    மூத்தவர், இளையவர் என சகோதரி எந்த வயதினராக இருந்தாலும், அவருடைய கவனம் எப்போதும் நம் நிழலாக செயல்படும். அவர் நம் வாழ்வின் முதல் விமர்சகராக விளங்குவார். நம்முடைய மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு, மறைமுகமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.

    தகுந்த நேரத்தில் வழிகாட்டியாக, பாதுகாப்பு அரணாக, அன்பின் அரவணைப்பாக, வாழ்வின் அனைத்து கட்டத்திலும் நம்முடன் பக்கபலமாக இருக்கும் சகோதரி என்ற உன்னத உறவை, மகிழ்ச்சியுடன் நம் வாழ்க்கைப் பயணத்தில் உடன் அழைத்துச் செல்வோம்.

    • வாழ்க்கையில் நட்பும், நண்பர்களும் முக்கியமானது.
    • பெண்களின் நட்பு வட்டம் ஒரு கட்டத்துக்கு மேல் நிலையற்றதாகி விடுகிறது.

    நம் வாழ்வில் நிகழும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் என அனைத்து உணர்வுகளின்போதும் உடன் இருப்பவர்கள் நண்பர்கள். ஆண்-பெண் இருவருடைய வாழ்க்கையிலும் நட்பும், நண்பர்களும் முக்கியமானது. ஆனால் பெண்களின் நட்பு வட்டம், வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் நிலையற்றது ஆகி விடுகிறது.

    எனினும், பிறந்ததில் இருந்து பருவம் அடையும் வரை தந்தை, பதின்பருவத்தில் தாய், திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைப்பேறுக்குப் பின்பு பிள்ளைகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பிக்கைக்குரிய உறவே, பெண்களுக்கு நண்பர்களாக மாறும். பெண்களின் நண்பர்கள் வட்டம் நிலையற்று போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    ஆனால், அவர்களின் வாழ்வில் அனைத்து காலகட்டத்திலும் வயதுவரம்பு இல்லாத ஒரு நண்பர் இருந்துகொண்டே இருப்பார். அது அவர்களோடு தினமும் உடன் பயணிக்கும் பூ விற்கும் பாட்டி, கடலை விற்கும் தாத்தா, அலுவலக பாதுகாவலர், தெருவில் விளையாடும் குழந்தைகள், கீச்சிடும் குருவி, தோட்டத்து ரோஜா என எதுவாகவும், யாராகவும் இருக்கலாம்.

    காரணம், அன்புக்கும் நட்புக்கும் வயது, பாலினம், நிறம், சமூகம் போன்ற எதுவும் தடை இல்லை. எதிர்பார்ப்பற்ற நட்பு எனும் உறவை, எப்போதும் மரியாதையுடன் வழிநடத்தி வாழ்வை இனிதாக்கலாம்.

    ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:
    வாழ்க்கையில் அழகிய தருணங்களை உருவாக்கும் உறவு ‘நட்பு’. ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:

    சோகமும் தேவையே:

    இளம் வயதில், நட்பின் இழப்பால் ஏற்படும் துக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. நட்பின் இழப்பினால், அவர்கள் அழுவதற்கு விரும்பினாலும், பழைய விஷயங்களை அசை போட விரும்பினாலும் அதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். எந்த இழப்பையும் உடனடியாக சமாளித்து வெளி வருவது கடினமானது. எனவே, அதற்கான நேரத்தை ஒதுக்கி, காத்திருங்கள். இது எதிர்காலத்தில், அடுத்த அடியை நோக்கி பிள்ளைகளை நகர்த்துவதை எளிதாக்கும்.

    மாற்றுப் பாதையில் மனதைத் திருப்புங்கள்:

    நட்பின் இழப்பு மூலம் அவர்களுக்கான உலகம் சுருங்கி விட்டதாக உணரக்கூடும். ஆனால், அந்த மனநிலையை மாற்றத் தகுந்த முயற்சியைப் பெற்றோர்தான் உருவாக்க வேண்டும். எதிர்மறையான எந்தக் கருத்தையும் இந்த நேரத்தில் உருவாக்காமல், அவர்களுடனே பயணிக்க முயலுங்கள்.

    அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும் வகையில், சிறுசிறு விஷயங்களில் ஈடுபடுத்தலாம். வீட்டில், உங்களுக்குத் தேவையான தகவலை, பிள்ளைகளின் மூலம் பெறுதல், காலண்டரில் தேதி சரி செய்தல், போனில், எண்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற சிறு சிறு விஷயங்களை செய்ய வைப்பதன் மூலம் மாற்றுப் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். அதன் மூலம் அவர்களின் மனம் தடம் மாறாமல் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கச் செய்யலாம்.

    பேச அனுமதியுங்கள்:

    மனம் துவண்டு இருக்கும் நேரத்தில், நம் எண்ணங்களைப் பிறருடன் பகிர்வது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த தயக்கத்தைக் குடும்ப உறுப்பினர்கள்தான் தகர்த்தெறிய வேண்டும். நீங்களே சென்று முதலில் பேச்சைத் தொடங்க வேண்டும். இதில், பிள்ளைகளுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    பிள்ளைகளுக்கு ஆதரவு தரும் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம், மன எண்ணங்கள் வெளிப்படுவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவதுடன், சரியான தீர்வு காணவும் முடியும்.

    புதிய நட்புக்கு உதவுங்கள்:

    ஒரு நட்பை இழந்துவிட்டோம் என்றால் அதனுடன் இந்தப் பயணம் முடிந்துவிடுவதில்லை, அதைத் தாண்டியும் வாழ்க்கை உள்ளது என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். நட்பு முறிந்தாலும், நட்புடனான பழைய நினைவுகள் என்பது என்றும் நம் மனதில் நீங்காது இருக்கும்.

    அதனுடன், நிற்காமல் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல புதிய நட்பு தேவைப்படும். இதுபோன்று புதிய நட்பை அமைக்கும்போது, பெற்றோராக உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த நட்பைத் தேர்வு செய்ய உதவுங்கள். எதிர்காலத்தில், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுவதற்கான சிறந்த வாய்ப்பை இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
    உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
    நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை 50 ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர். உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் ஆனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.

    பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு, நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது.

    ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரெயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம். “நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,” என யங் என்ற அறிஞர் கூறுகிறார்.

    பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ, மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது அவரவர் வீட்டு உணவுகள் அடுத்தவர் தட்டுக்கு பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இருதயங்களும் தான். பொதுவாக வேறுபாடுகளை களையும் விஸ்வரூப விருட்சம் தான் நட்பு.

    நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின்தடையே வராது. என்ன தான் நமக்கு பிரச்சினை என்றாலும், அதை மனதுக்குள்ளே பூட்டி வைத்தால், அது நம்மை நோய் பாதிப்புக்கு கொண்டு போய் விட்டு விடும். ஏனெனில் தாய், தந்தையிடம் பேச அளவு உண்டு. உறவினர்களிடம் பேச அளவு உண்டு. காதலியிடம் பேச அளவு உண்டு. ஆனால் இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்மைகளை ஒளிக்காமல் ஒருவன் பேசுவது தன் நண்பனிடம் மட்டும் தான்.

    உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நம் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே.உயிர் காப்பான் தோழன் என்பார்கள். தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. அதனால் தான் நட்பை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்கிறார்கள்.

    திருக்குறளில் நட்பின் மேன்மையை திருவள்ளுவரும், நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் அருமையாக விளக்குகிறார். நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல. அது இருதயம் கலந்து பழகுவது. உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது.

    நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். தீயநட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்.
    இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளாம்.
    பொதுவான பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் விலகி, ஓரிடத்தில் அது வீடோ, வெளியிடமோ, யாராலும் கண்காணிக்கப்படாமல், யாருடைய தொல்லையும் இல்லாமல், தன் விருப்பப்படி இயல்பாக இருக்கும் நிலையை `பிரைவசி' எனலாம். இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும், சிலவற்றைப் பகிராமல் இருப்பதும், பிறருடைய அந்தரங்க எல்லையை மதிப்பதும் அதன் அங்கம்தான்.

    தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவர் அனுமதிக்காத பட்சத்தில் அவருக்கான வெளிக்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை.

    அலுவலக நண்பர் உங்களிடம் பகிர்ந்துகொண்ட அந்தரங்க விஷயங்களை, அவருடன் உறவு சீர்கெட்ட நிலையில் அலுவலகத்துக்குள் அம்பலப்படுத்துவதோ, பரப்புவதோ கூடவே கூடாது. அடுத்தவரின் கோப்புகள், டைரி, போன், அவர் இல்லாத நேரத்தில் திறந்து பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சக பணியாளர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பது, அவர்களின் பணிக்குறிப்புகள், கணினித்திரை இவற்றைத் தேவையின்றி பார்த்தல் அவரின் அந்தரங்க எல்லையைத் தொடும் செயலே.

    அலுவலகத்தில், அலுவலகப் பணிகளுக்கே முன்னுரிமைகொடுக்க வேண்டும். மருத்துவர், மனநல ஆலோசகர், வழக்கறிஞர், செய்தியாளர், ஆலோசகர் போன்றோரிடம் ஆலோசனைக்காக வருபவர்கள், பிறரிடம் பகிர்ந்துகொள்ளாத தகவல்களைக்கூடக் கூறுவார்கள். இந்த அந்தரங்க விஷயங்களைக் கண்ணியத்துடன் பாதுகாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை வெளிப்படுத்தக் கூடாது.

    சிறியவர், பெரியவர் பேதமின்றி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மதிக்கப்படவேண்டியதே. சிறியவர்கள்தானே என்று குழந்தையின் தன்மதிப்பைக் குறைக்கும் விஷயங்களை வெளிப்படுத்தவோ கிண்டல் செய்யவோ கூடாது. அதுபோல, பதின்வயது பிள்ளைகளை குறிப்பிட்ட எல்லைவரை கண்காணிக்கலாமே தவிர, அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைச் சோதிப்பது தவறு. பெரியவர்கள் தம்மைப் புரிந்துகொள்வார்கள், தங்கள் மதிப்பு குறையாது என்ற நம்பிக்கை ஏற்படும்போது பிள்ளைகளும் நிச்சயம் வெளிப்படையாக இருப்பார்கள்.

    அதேபோல வீட்டில் இருக்கும் முதியவர்களின் தனி உரிமைகளும் அந்தரங்கமும் காக்கப்பட வேண்டும். நம் மீது நம்பிக்கை வைத்து நண்பர் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட விஷயங்களை, நமக்கு நெருக்கமான வேறொருவரிடம் பகிர்வது, அந்த நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்படவில்லை எனில், நம் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் நட்பையும் இழக்க நேரிடும். 
    இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
    தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நன்மை தருவதற்கு மட்டும் தானே தவிர கெடுதல் தருவதற்கு அல்ல. ஆனால் இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பேஸ்புக் எனும் சோஷியல் மீடியா மூலம் எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

    ஒருவர் தனது புகைப்படத்திற்கு அல்லது பதிவிற்கு தொடர்ந்து லைக் செய்து, கருத்து தெரிவித்து வந்தால் அவருடன் பெண்கள் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    அருகில் இருப்பவர்களுடன் பிடிப்பு இல்லாத நட்பு உடைய பெண்கள் பேஸ்புக் மூலம் ஆண் நண்பர்களை தேடி ஏமாந்து போகின்றனர்.

    பேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற லைக்ஸ் மோகத்தினாலும் பெண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.

    நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், ஃபேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ள விரும்புகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிர துவங்கி விடுகிறார்கள்!

    சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.

    இளவட்ட வயதான 17 - 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக ஃபேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது. ஃபேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி ஃபேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கிறது.

    பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது.
    இது ஒரு புது கலாசாரம். 18 முதல் 30 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் பல வருடங்களாக ஒன்றாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது, அவர்கள் வாழ்க்கை. ஆனால் அப்படிப்பட்ட சிலரிடம், ‘நீங்கள் நண்பர்களா?’ என்று கேட்டால், இல்லை என்கிறார்கள். ‘காதலர்களா?’ என்று கேட்டால், அதற்கும் இல்லை என்றுதான் பதில் தருகிறார்கள். ‘அப்படியானால் உங்கள் நட்பிற்கும், பழக்கத்திற்கும் என்ன பெயர்?’ என்று கேட்டால், பதில் சொல்லத் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அப்படி ஜோடியாக பழகும் அவர்கள் இருவரும், காதல் ஜோடியைவிடவும் நெருக்கமான தம்பதிகளைவிடவும் மிக அதிகமான அளவு தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அந்தரங்கமான தகவல்களைக்கூட அலசிக்கொள்கிறார்கள்.

    ‘சரி, பெயர் சூட்டப்படாத இந்த புதிய கலாசார நட்பில் எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லையே’ என்று நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை. ஏனென்றால், இத்தகைய நட்பை விட்டு விலக முடியாமலும்- காதலராகவோ, கணவராகவோ அங்கீகரித்து வாழ்க்கையில் சேர்க்க முடியாமலும் பல பெண்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த தவிப்பு அவர்கள் பணிசார்ந்த எதிர்காலத்தையும், (திருமணம் போன்ற) வாழ்க்கை சார்ந்த எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

    பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய நட்புக்கு அவரவருக்கு தக்கபடி பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், தங்கள் தோழியை ‘ஹாப் கேர்ள் பிரெண்ட்’ என்கிறார்கள். பெண்கள், தங்கள் தோழர்களை ‘ஹாப் பாய் பிரெண்ட்’ என்றழைக்கிறார்கள். இப்படிப்பட்ட பாதி காதலர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

    இவர்கள் வயதைக் கடந்தும், பருவத்தை கடந்தும் நட்பு பாராட்டி வருகிறார்கள். 18 வயது முதல் 70 வயது வரை இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது என்பதை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். நட்பு அதன் எல்லையோடு நட்பாக மட்டும் இருக்க வேண்டும்.

    விழிப்பாக இருப்பது எப்படி?

    இதுபோன்ற உறவுகளில் இருப்பவர்களை அலசி ஆராய்ந்தபோது, இந்த நட்பால் அவர்களுக்கு ஓரளவு பலன் இருந்தாலும், பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால் இதுபோன்ற உறவுகளில் விழிப்பாக இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    பள்ளிக்காலத்தில் இருந்தே ஆண்கள்- பெண்களோடும், பெண்கள் - ஆண்களோடும் சகஜமாக நட்பு பாராட்டத் தொடங்கவேண்டும். அப்படி நட்பு பாராட்டினால் நட்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் எதிர்காலத்தில் நட்புக்கு எல்லை வகுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.



    பள்ளிக்காலத்திலே எதிர்பாலினரிடம் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கல்லூரி காலத்திலோ அல்லது பணிபுரியும் காலத்திலோ, தன்னை உணர்ந்த நண்பர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் அளவுக்கு மீறிய நிலையில் பழகும்போது, அது இத்தகைய நட்பாகிவிடுகிறது. (பள்ளிக் காலத்திலே ஆண், பெண் நட்பை சகஜமாக எதிர்கொள்வது இதற்கு நல்ல தீர்வு)

    பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசும் வழக்கம் இல்லாதவர் களிடமும், பிரிந்திருக்கும் பெற்றோர்களிடம் வளருகிறவர்களிடமும், தங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலை இருக்கும். எதிர்காலம் நிச்சயமற்றதாகவும், பாதுகாப்பாற்றதாகவும் இருப்பதாக கருதும் அவர்களிடம் தன்னம்பிக்கை குறையும். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறவர், பாதுகாப்பு அளிக்கத் தகுதியானவர் என்று கருது பவர்களிடம் இத்தகைய நட்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். (பெற்றோர்களிடம் மனம்விட்டுப்பேசுவதும், அவர்கள் மூலம் பாதுகாப்பு கிடைப்பதும் இதற்கு நல்ல தீர்வு)

    ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் குறிப்பிடும்படியான ரகசியங்கள் இருக்கவே செய்யும். இப்படிப்பட்ட ‘பாதி பெண் தோழிகள்’ உறவில் இருக்கும்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் சிறுவயது பாலியல் கசப்புகள் முதல் குடும்ப ரகசியங்கள் வரை அனைத்தையும் ஆண் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த அந்தரங்க பகிர்வுகள் எதிர்காலத்தில் அந்த பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. (அதனால் இத்தகைய உறவில் இருக்கும் பெண்கள், நண்பர்களிடம் எதை பேசவேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்)

    நண்பர், காதலர், கணவர் என்ற ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஒரு நண்பரால் நல்ல காதலராகவும், சிறந்த கணவராகவும் ஆக முடியும். அப்படி படிப் படியாக அந்த உறவை உயர்த்திச் செல்ல தைரியம் வேண்டும். அதிக தன்னம்பிக்கையும் அவசியம். ஆனால் இந்த ஹாப் கேர்ள் பிரெண்ட், ஹாப் பாய் பிரெண்ட் போன்றவர்கள் அந்த அளவுக்கு தைரியம் இல்லாதவர்கள். அதே நேரத்தில் அந்த ஆண், நண்பர் என்ற பெயரை வைத்துக்கொண்டு காதலராகவும், கணவராகவும் மறைமுகமாக செயல்பட அவர் விரும்புவார். அதற்கு ஒத்துழைக்காவிட்டால் பிரச்சினையை உருவாக்குவார். (அதனால் இப்படிப்பட்ட நண்பர் களிடம் எப்போதும் விழிப்பாக பழகுங்கள்)

    இப்படி நண்பர்களாக பழகும் பெண்களில் பலர், தனது நண்பனை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். இதனால் அவர்களது சொல்படி நடந்து பெற்றோர்களை கூட பகைத்துக்கொள்கிறார்கள். (எந்த நண்பனும், பெற்றோருக்கு நிகரில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    இத்தகைய நட்பில் இருக்கும் ஆண்களும், பெண்களும் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். பின்பு இந்த நட்பில் இருக்கும் ஆண், இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போது, அவருடன் நட்பில் இருக்கும் பெண்ணுக்கு திருமண வயது கடந்து போயிருக்கும். அதன் பின்பு அவள் எதிர்பார்த்ததுபோல் அவளுக்கு வரன் அமையாது. பின்பு ஏதாவது ஒருவர் கிடைத்தால்போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவாள். அப்போது அவளுக்கு வாழ்க்கை ஏமாற்றமாகிவிடும். (தனக்கு எப்படிப்பட்ட நண்பர் இருந்தாலும் வாழ்க்கைக்கு கணவர் தேவை என்பதை பெண்கள் புரிந்து நட்பு பாராட்டவேண்டும். சரியான பருவத்தில் தகுதியானவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்).

    - விஜயலட்சுமி பந்தையன்.
    பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. #ViswanathanAnand #RussianFederation
    சென்னை:

    பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் சிறப்புமிக்க ‘நட்புறவு விருது’ வழங்கி கவுரவித்தார்.

    விழாவில், ரஷிய நாட்டின் பெண் ஓவியர் கட்யா பெல்யாவ்ஸ்கயா, செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு ஒரு ஓவிய கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    ‘நட்புறவு விருது’ என்பது இரு நாடுகள் இடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல், புரிதல் ஆகியவற்றுக்காக பாடுபட்ட பிரபலங்களுக்கு ரஷியா நாடு வழங்கும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.   #ViswanathanAnand #RussianFederation
    ஒருவருடைய சிந்தனைகளையும் குணங்களையும் பட்டை தீட்ட அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகின்றார். மகிழ்வை, துக்கத்தைப் பகிர மற்ற உறவுகளைவிட மனித மனம் நாடுவது நட்பெனும் உறவைதான்.
    ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், நட்பு அவசியமாகிறது. வாழ்க்கை ஓட்டத்தைப் பூவனமாக்குவதும் நட்பு.

    இத்தகு நட்பு இறுக்கமாக இல்லாமல் ஒருவர் தளர்ந்து கொடுப்பதாலேயே கிடைக்கிறது. ஒருவரை வாசித்து நட்பு பெறுவது கடினம். நாம் காட்டும் ஈடுபாட்டால் மட்டுமே நட்பு மலர்கிறது.

    நட்பில் பல பரிமாணங்கள் உண்டு இருவருக்கிடையே ஏற்படும் நட்பு, இருபாலருக்கு இடையே ஏற்படும் நட்பு, இரு குழுக்களிடையே ஏற்படும் நட்பு அல்லது பல குழுக்களிடையே ஏற்படும் நட்பு, இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படும் நட்பு, பிற உயிர்களிடத்து ஏற்படும் நட்பென நட்பின் தன்மை மிக உன்னதமானதாகும். நட்பு வயது, மொழி, இனம் அறியாது.

    ஒருவருடைய சிந்தனைகளையும் குணங்களையும் பட்டை தீட்ட அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகின்றார். மகிழ்வை, துக்கத்தைப் பகிர மற்ற உறவுகளைவிட மனித மனம் நாடுவது நட்பெனும் உறவைதான். இலக்கியங்கள் வழியும், வரலாறு வழியும் நட்பின் உன்னதப் பதிவுகளை நாம் அடையாளம் காண முடிகின்றது.

    வள்ளுவப் பெருந்தகை நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடாநட்பு என்ற நிலையில் நட்பினை நன்கு விளக்கி உள்ளார். ஒத்த உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். நட்புக்கு இலக்கணமாக, சான்றாக வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.

    மிகுந்த தமிழ் ஞானமும், புலமையும் கொண்ட அவ்வைக்கு, தமிழ் பற்றாலும், அவரின் புலமையின் பால் ஈர்க்கப்பட்ட நட்பினாலும் அரிய வகை நெல்லிக் கனியைக் அதியமான் கொடுத்தான். அவன் ஒரு அரசன். அதனை அவனே உண்டிருக்கலாம். அதை யாரும் தடுத்திட போவதில்லை. இருந்தும் தான் இல்லை என்றால், இந்நாட்டுக்கு மற்றொரு அரசன் கிடைப்பான். அவ்வை வாழ்ந்தால் தமிழ்வாழும். தமிழால் பின்வரும் சந்ததியினர் வாழ்வர் என்ற உயரிய நோக்கிலும், அவர்மீது கொண்ட நட்பின் தகைமையாலும் நெல்லிக்கனியை கொடுத்தான்.

    அதியமானின் செயலும், அச்செயலைக் கண்ட அவ்வை ‘சிவபெருமான் போல் நீ நீடுழி காலம் வாழ்க’ என வாழ்த்திய தன்மையும் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும்.

    இன்றைய காலச்சூழலில் ஆண், பெண் நட்பு போற்றத்தக்கதா? அது ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் சுயநலமற்று துளிர்விட்டு தழைக்கும் போது ஆண், பெண் நட்பு ஆரோக்கியமானதே.



    சுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார், தனது கணவன் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர் ஆகியோரால் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கில அரசுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்து மைசூர் மன்னன் ஐதர் அலியுடன் நட்புறவு கொண்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை சீமையை வெற்றி கொண்ட செய்தியை எதற்குள் அடக்குவது? இச்செயலை போற்றாமல் இருக்க முடியாது.

    அரசியலில் கொள்கை ரீதியாக முரண் கொண்டவர்கள்கூட நட்பு ரீதியாக அன்புள்ளம் கொண்டு வாழ்ந்ததை அறியமுடிகிறது. இப்படியான நட்புகளை காணும் போது நட்பின் உண்மைத் தன்மையையும் உறுதிப்பாட்டையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

    கிராமம், நகரம், நாடு தாண்டி உலகளாவிய நட்புறவை ஆரோக்கியத்துடன் பெற்றுத்தருவதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகள் மூலம் நாடுகளுக்கு இடையே பலமான நட்புணர்வு கிடைக்கிறது என்பது உண்மை. தமிழன் அன்று தெற்காசிய நாடுகளோடு கொண்டு இருந்த வாணிப சிறப்பை யாவரும் அறிவோம். நட்புறவுக்கும் வாணிபம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

    இவற்றைப் போன்றே ஊர் திருவிழாக்கள் மூலமாகவும், இல்லங்களில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளின் மூலமாகவும் நட்புறவு மிக அழகாக கிடைப்பதுடன் விடுபட்ட உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் இடமாகவும் இவ்விடங்கள் திகழ்கின்றன.

    மனிதர்களுக்கு இடையேயான நட்புறவைத் தாண்டிபிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி பறவைகள், விலங்குகள், செடி, கொடிகளிடம் மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பினால் மனிதன் ஒருபடி நிலை உயர்ந்து மேன்மை அடைகிறான். இந்த நட்புணர்வால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. மற்ற உயிரினங்கள் மனிதர்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் போது மனிதர்களிடம் நட்பாகின்றன.

    மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணை கண்டம் வரை போர்களுடனே சுமந்து வந்த பூசிப்பலா என்ற குதிரை அவருடைய பழக்கத்தாலும், செயலாலும் மிக சிறந்த நண்பனாக விளங்கியது. அந்த குதிரை 30 வயதில் இறக்கும் போது அலெக்சாண்டர் ஒரு நகரத்திற்கு பூசிப்பலா என்று பெயரிட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    காலம் கடந்தும் நண்பனின் நினைவினை ஊட்டும் கடிதங்கள் பெட்டியில் கிடந்த காலம் மாறி, அலைபேசி உலகில் வாழ்ந்தாலும் சில அடிப்படை நிகழ்வுகளும், செய்திகளும் மாறுவதில்லை. அலைபேசியின் வழியும் போற்றத் தகுந்த வலுவான நட்பினை அடையாளம் கண்டு நட்புறவை ஏற்படுத்திக் கொள்வது அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கையில் உள்ளது.

    தங்களது பிள்ளைகளை சீர்திருத்திட முடியாத சூழலில் பெற்றோர்கள் அவர்களின் நண்பர்களை அணுகி பிள்ளையை சீர்திருத்த முனையும் காட்சியை இன்றளவும் காண முடிகின்றது. நட்பு அத்தகைய வல்லமை பெற்றது. அதே நிலையில் மன ஒற்றுமை இல்லாதவர்களுடைய நட்பு தீராத துன்பத்தை தரும்.

    எந்தவித எதிர்பார்ப்பும், சுயநலமும் இல்லாத கனிந்த நட்பு மிக சிறந்த நட்பாகும். இத்தகைய நட்பினை அடையாளம் கண்டு கரம் பிடித்து வாழ்வின் வெளிச்சத்தைப் பரிசாகப் பெறுவோம்.

    பு.இந்திராகாந்தி, உதவிப் பேராசிரியை
    ×